Friday, December 31, 2010

> சீமான் SAC படத்தில்.

எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் சீமானுக்கும் இப்போதைய பொது எதி‌ரி ஆளும் கட்சிதான். இந்த ஒற்றுமையோ தெ‌ரியவில்லை, இருவரும் ஓரணி சேர்ந்திருக்கிறார்கள். அரசியலில் அல்ல, சினிமாவில்.

எஸ்.ஏ.சி. இயக்கும் சட்டப்படி குற்றம் படத்தில் ஹீரோ சத்யரா‌ஜ் என்றாலும் அவருக்கு இணையான பாத்திரத்தில் நடிக்கிறார் சீமான். அரசியலும், இனப்பற்றும் இணைந்த வசனங்களாம் படம் முழுக்க இவருக்கு. இவற்றை சீமானே எடிட் செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த இருவருடன் விக்ராந்த் உள்பட நான்கு இளைஞர்களும் படத்தில் நடிக்கிறார்கள்.

புரட்சியை கொண்டு வந்தே தீருவேன் என்று வ‌ரிந்துகட்டி கதையை தயார் செய்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி.

மகனுக்கான அரசியல் சிவப்பு கம்பளம்?

> வித்தியாசமான ப‌ரிசு மாதவனுக்கு.

மன்மதன் அம்பு அனைவரும் எதிர்பார்த்தது போல கமலின் வழக்கமான காமெடிப் படம். மாதவனின் குடிகார நடிப்புக்கு திரையரங்கில் அப்ளாஸ் பிய்க்கிறது.

ஒரு முழுமையான நடிகன் என்றால் அவனுக்கு நாலும் தெ‌ரிந்திருக்காவிட்டாலும் நகைச்சுவை தெ‌ரிந்திருக்க வேண்டும். அதனை இந்தப் படத்தில் முழுமையாக நிரூபித்திருக்கிறார் மாதவன்.

மாதவனின் நடிப்பைப் பார்த்து ரசிகர்களும், திரையுலகினரும் நே‌ரிலும், ஃபோனிலும் பாராட்டி வருகிறார்கள். சில தீவிர ரசிகர்கள் மது பாட்டிலையே மாதவனுக்கு பார்சல் செய்திருக்கிறார்கள். ஆனால் மாதவன் ஆல்கஹாலை தொடுவதேயில்லையாம்.

சாராயம் குடிக்கும் சாமிக்கு பருப்பு சாதம் படைத்த மாதி‌ரிதான்.

Thursday, December 30, 2010

> மன்மதன் அம்பு முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மன்மதன் அம்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான அ‌ரிது அ‌ரிது டாப் 5க்குள் இடம்பிடிக்காதது தயா‌ரிப்பாளருக்கு சோகமான செய்தி.

5. விருதகி‌ரி

விஜயகாந்தின் விருதகி‌ரி இதுவரை சென்னையில் 44 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.33 லட்சங்கள். விஜயகாந்தின் மாஸுக்கு இது மிகக் குறைவான வசூல்.

4. நெல்லு

புதுமுகங்களின் நெல்லு சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 5.8 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. சுட்டி சாத்தான்

குழந்தைகளை குறி வைத்து வெளியான சுட்டி சாத்தானுக்கும் அதிக வரவேற்பு இல்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 6.4 லட்சங்களையே வசூலித்துள்ளது.

2. ஈசன்

சசிகுமா‌ரின் படம் என்பதால் ஈசனுக்கு ஓபனிங் அமோகம். முதல் பத்து தினங்களில் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது வசூல். சென்ற வார இறுதி மூன்று தின வசூல், 16.1 லட்சங்கள்.

1. மன்மதன் அம்பு

கமல் படம் எதிர்பார்த்ததைப் போலவே முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நான்கு தினங்களில் 94.36 லட்சங்கள் வசூலித்துள்ளது.

> பில்லா 2 - 2011ல்

அ‌‌ஜீத்தின் மாஸ் ஹிட் என்றால் அது பில்லா. அதனாலேயே பில்லாவின் இரண்டாவது பாகத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

மங்காத்தா முடிந்த பிறகு அ‌ஜீத் பில்லா 2 வில் நடிக்கிறார். இதுதான் அவரது 51வது படம் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. பில்லாவில் பணிபு‌ரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் பில்லா இரண்டாவது பாகத்திலும் பணிபு‌ரிகிறார்கள்.

இசைக்கு யுவன், கேமராவுக்கு நீரவ்ஷா. முந்தைய பாகத்தைப் போலவே இதற்கும் காஸ்ட்யூமுக்கு கணிசமான தொகை செலவு செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

> கைமாறியது காவலன் - கடும் சிக்கல்.

காவலன் படத்தை வெளியிடுவதில் கடும் சிக்கல் என்பதும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்காக ஜெயலலிதாவின் உதவியை கோ‌ரியதும் நாடறிந்தது.

இந்நிலையில் வேறொரு உதவியும் ஜெயலலிதா தரப்பில் காவலனுக்கு செய்யப்பட்டதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

பெ‌ரிய படங்களின் தொலைக்காட்சி உ‌ரிமை பெறுவதில் அதிகாரமிக்க சன்னும், அதிகாரத்தில் இருக்கும் கலைஞருமே போட்டியிட்டு வந்தன. யானை நடுவில் எறும்புக்கென்ன வேலை என மற்ற சேனல்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தன.

இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி காவலன் படத்தின் தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

அப்போ, இளைய தளபதி தேர்தல் பிரச்சாராத்துக்கு செல்வது கன்ஃபார்ம்.

Wednesday, December 29, 2010

> பிரபுதேவா பேட்டி - எனது மறக்க முடியாத படம்.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பிரபுதேவாவுக்கு பல முகங்கள். ஆனால், சில காலமாக அவரது சர்ச்சை முகம்தான் பத்தி‌ரிகைகளின் பரபரப்பான தீனி. இந்நிலையில் பத்தி‌ரிகையாளர்களை திடீரென சந்தித்தார் பிரபுதேவா. அனைவரும் கேட்க நினைத்த கேள்வியை, ‘அது மட்டும் வேண்டாமே’ என்ற ஒற்றை வாக்கியத்தில் ஒதுக்கி‌த் தள்ளியவ‌ரின் சினிமா குறித்த எண்ணங்கள் உங்களுக்காக
போக்கி‌ரி, வான்டட் படங்களுக்குப் பிறகு பிரபுதேவா பிஸியான இயக்குனர். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தை முடித்துவிட்டு அடுத்தப் படத்துக்கு சென்றுவிட்டார். இந்த பிஸி ஷெட்யூலுக்கு நடுவிலும் இரு படங்களில் நடித்து வருகிறார். இது எப்படி சாத்தியம்?

“என் வாழ்வில் பல விஷயங்கள் எதிர்பாராமல் நடந்தது. என் பாதை, பயணம் எல்லாம் எனது விருப்பமாக இல்லாமல் காலம்தான் முடிவு செய்தது. நான் நடிகரானதும், இயக்குனரானதும் அப்படிதான். படம் இயக்கப் போய்விட்டால் அந்த வேலையை மட்டுமே பார்ப்பேன். அதேபோல் நடிக்கப் போய்விட்டால் என்னுடைய மனதில் அது மட்டுமே இருக்கும். நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிடுவேன். அதனால் படம் இயக்கவும், நடிக்கவும் என்னால் ஒரே நேரத்தில் முடிகிறது. இப்போது நான் நடிக்கிற இரு படங்களுமே மிக நல்லப் படங்கள்.”

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும் போது அவர்களே ஒளிப்பதிவையும் பார்த்துக் கொள்வார்கள். பாடலாசி‌ரியர்கள் ஹீரோவாகும் போது அவர்களே படத்தின் பாடல்களையும் எழுதுவார்கள். ஆனால், பிரபுதேவா நடன இயக்குனராக இருந்தாலும் தான் இயக்கும் படங்களில் பிற நடன இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு தருகிறார். இது ஆச்ச‌ரியமான விஷயம்.

“இதற்கு நான் முதலில் சொன்ன விளக்கம்தான் காரணம். இயக்குனராக இருக்கும் போது அதில்தான் எனது முழுக் கவனமும் இருக்கும். எனது எங்கேயும் காதல் படத்திலும் நான் நடனம் அமைக்கவில்லை. இது இப்படியே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.”

தற்போது நடித்து வரும் படங்கள்...

“முதலில் தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள். தங்கர்பச்சான் கோபக்காரர். என்றாலும் எங்களுக்குள் ஆழமான பு‌ரிதலும், நட்பும் உண்டு. என்னுடைய கமர்ஷியல் இமேஜை கழற்றி வைத்துவிட்டுதான் இந்தப் படத்தில் நடிக்கிறேன். அருமையான கதை. அழகி போல பேசப்படும்.

“இன்னொரு படம் சந்தோஷ் சிவன் இயக்கும் உறுமி. என்னுடன் பிருத்விரா‌ஜ், ஜெனிலியா நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே வித்தியாசமான படம். என்னுடைய மறக்க முடியாத படம் என்று இதனை சொல்லலாம்.”

போக்க‌ரி, வில்லு என்று அதிரடிப் படங்கள் தந்த பிரபுதேவாவின் அடுத்தப் படம், எங்கேயும் காதல் ஆர்ப்பாட்டமில்லாத காதல் கதை.

“ஆண் மீது பெண்ணுக்கு வரும் வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் புதுசாக இருக்கும். எல்லோரையும் இந்தப் படம் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

பிரபுதேவா தனது படங்களின் சில வசன காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் வெளிநாட்டில் படமர்கியிருக்கிறார். என்றாலும் எங்கேயும் காதல் அவற்றையெல்லாம்விட ஸ்பெஷலானது.

“ஆமாம், எங்கேயும் காதல் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் பிரான்சில் நடத்தியிருக்கிறோம். கதை நடக்கும் இடமே ரசிகர்களை பெ‌ரிதாக கவரும்.”

ஜெயம் ரவி பற்றி...

“ரவி எப்போதுமே இயக்குன‌ரின் நடிகர், ரொம்பத் திறமையானவர்.”

மென்மையான காதலை எங்கேயும் காதலில் சொல்லியிருப்பவர் அடுத்து ஆக்ரோஷமான கதையை கையிலெடுத்திருக்கிறார்.

“இப்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறேன். சமீரா ரெட்டி ஹீரோயின். இதுவொரு ஆ‌க்சன் படம். ‌ஜிகே கார்ப்பரேஷன் படத்தை தயா‌ரிக்கிறது.”

Friday, December 24, 2010

> சூர்யா மறுப்பு - இந்திப்பட வாய்ப்பு.

ரத்த ச‌ரித்திரத்தை வழக்கம் போல இந்தி ஊடகங்கள் கிழித்துவிட்டன. ராம் கோபால் வர்மா மீதான கோபத்தை வேறு எப்படி தீர்த்துக் கொள்வது?

ரத்த ச‌ரித்திரம் மோசம் என்று எழுதிய ஊடகங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தன. அது சூர்யாவின் நடிப்பு.

சில இணையதளங்கள் சூர்யாவுக்காக ரத்த ச‌ரித்திரத்தை பார்க்கலாம் என்று எழுதின. இன்னும் சில வாட் அன் ஆக்டர் என வியந்தன.

ரத்த ச‌ரித்திரத்தை தொடர்ந்து இந்தியில் நடிக்க சூர்யாவுக்கு அழைப்புகள் குவிகின்றன. ஆனால் 7ஆம் அறிவு, ஹ‌ரி, கௌதம், கே.வி.ஆனந்த் படங்கள் என தமிழில்தான் ஆர்வம் காட்டுகிறார் சூர்யா. இந்திப் படங்களுக்கு ஒரே வார்த்தையில் அவர் சொல்வது, நோ.

இந்தியில் ஒரு படம் நடித்தால் அப்படம் தமிழ், தெலுங்கிலும் ஓட வேண்டும். அப்படியான கதை அமைந்தால் மட்டுமே இந்தியில் நடிப்பேன் என தனது மறுப்புக்கு விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.

Thursday, December 23, 2010

> சிம்பு வானம் வேகமாக தெ‌ளிந்து வருகிறது.

சிம்புக்கு சிராய்ப்புகள் ஏற்படுவது சாதாரணம். ‌சிலம்பாட்டம் படத்தில் நடனக் காட்சியில் ‌ரிஸ்க் எடுத்து விரலை காயப்படுத்திக் கொண்டவர். சண்டைக் காட்சியை பற்றி சொல்ல வேண்டுமா?

வானம் படத்தின் சண்டைக் காட்சியில் மோட்டார் சைக்கிளில் வந்த போதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டார் சிம்பு. பலத்த காயம்தான்.

ஆனாலும் சிகிச்சை மற்றும் ஓய்வு காரணமாக வேகமாக தேறி வருகிறார் சிம்பு. ஆமாம், வானம் வேகமாக தெ‌ளிந்து வருகிறது.

Wednesday, December 22, 2010

> ர‌ஜினியின் அடுத்த புதிய படம் ஹரா.

ர‌ஜினி பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கிறார் என்றெல்லாம் யூகத் தகவல்கள் கோடம்பாக்கத்தை வலம் வருகிறது. ஆனால் இதுவரை அவர் புதிய படம் எதிலும் கமிட்டாகவில்லை என்பதும், ஹரா முடிந்த பிறகே அடுத்தப்படம் குறித்து யோசிக்க இருக்கிறார் என்பதுமே உண்மை.

ச‌ரி, அது என்ன ஹரா?

சௌந்தர்யா ர‌ஜினியால் தொடங்கப்பட்ட அனிமேஷன் படமான சுல்தான் தி வா‌ரியர் படத்தின் புதிய பெயர்தான் ஹரா.

இந்தப் படத்தின் தயா‌ரிப்பில் பங்குபெற்ற நிறுவனங்களுக்கு உ‌ரிய பணம் கொடுத்து செட்டில் செய்துள்ளார் செள‌ந்த‌ர்யா. அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயா‌ரிப்பு பொறுப்பை முழுமையாக ஏற்றுள்ளது.

அனிமேஷன் ர‌ஜினி ஒருவேளை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்று ர‌ஜினியை வைத்து நேரடியாக சில காட்சிகளை எடுக்கவுள்ளனர். அதாவது பாதி அனிமேஷன் ர‌ஜினி, மீதி ஒ‌ரி‌ஜினல் ர‌ஜினி.

இந்த மாற்றங்கள் நிகழந்ததாலும், சுல்தான் தி வா‌ரியர் பழமையாகிப் போனதாலும் ஹரா என்ற புதிய பெயரை சூட்டியுள்ளனர்.

> சபாஷ் ச‌ரியான ஆள் K.S ரவிக்குமார்.

செ‌ன்னையில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழா இந்த முறையும் சிறப்பாக நடந்துள்ளது. ஐசிஏஎஃப் இதற்காக முதலீடு செய்யும் உழைப்பும், அர்ப்பணிப்பும் வணக்கத்துக்கு‌ரியது.

ஆனால் நம்மை உறுத்தக்கூடிய ஒரு செய்தியும் உள்ளது.

திரைப்பட விழாவில் திருட்டு விசிடி ஒழிப்பை முன்னிட்டு லோகோ ஒன்றை வெளியிட்டனர் 'ஸே நோ டூ பைரஸி' என்ற அந்த லோகோவை வெளியிட்டது இயக்குனர் கே.எ‌ஸ்.ரவிக்குமார். திருட்டு விசிடி-யில் படம் பார்க்கக் கூடாது என்பது எவ்வளவு ச‌ரியோ அதைவிட முக்கியமானது, திருட்டு விசிடி-யில் இன்னொருவ‌ரின் படத்தைப் பார்த்து அவரது அனுமதி இல்லாமலே அதனை காப்பி அடிப்பது.

வசாபி திரைப்படத்தைப் பார்த்து அப்படியே கே.எஸ்.ரவிக்குமார் அடித்த காப்பிதான் ஜக்குபாய். திருட்டு விசிடி-யில் படம் பார்க்கக் கூடாது என்று சொல்ல மிகச் ச‌ரியான நபர்.

கேரளாவில் இந்த மாதம் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்கநாள் விழாவில் முதல்வர் அச்சுதானந்தன், செய்தித்துறை அமைச்சர் பேபியுடன் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் சர்வதேச விருதுகள் பெற்றவரான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், பழம் பெரும் கவி ஓஎன்வி குரூப் போன்றவர்கள். மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கோ, கவர்ச்சி கன்னிகளுக்கோ அங்கு இடமில்லை. ஹானரபிள் சீஃப் மினிஸ்டர் என்பதற்கு மேலாக அச்சுதானந்த‌னின் பெயரை அங்கு யாரும் பயன்படுத்தவுமில்லை. இங்கோ மேடையில் கச்சே‌ரி நடத்தியவர்கள் குஷ்பு, சுஹாசினி...

நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது.

> பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.

தமிழில் பிரபலங்கள் நடித்தப் படங்கள் என்றால் அது ஒன்று சன் பிக்சர்ஸ் வெளியீடாக இருக்கும் அல்லது ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன். சிங்கம், மைனா, நான் மகான் அல்ல... வரவிருக்கிற மன்மதன் அம்பு, ஆடுகளம் எல்லாமே அப்படிதான்.

கார்த்தியின் சிறுத்தையும் அப்படிதான் வெளியாகும் என்று செய்திகள் கசிந்தன. அவ‌ரின் நான் மகான் அல்ல படத்தை விநியோகித்த கிளவுட் நைனே சிறுத்தையையும் வெளியிடும் என்றே அனைவரும் நம்பினர்.

ஆச்ச‌ரியமாக சிறுத்தை சொந்தமாகவே வெளியாகிறது. அதாவது படத்தை தயா‌ரித்த ஸ்டுடியோ ஸ்கி‌‌ரீனே படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

பொங்கலுக்கு சிறுத்தை சீற இருக்கிறது.

> சீமான் பகலவனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக மத்திய, மாநில அரசுகளின் இருண்ட திரைகளை கிழிக்க ஆரம்பித்துவிட்டார் சீமான். தேர்தலில் வேறு நிற்பதால் சினிமா சீமான் காணாமல் போய்விடுவாரோ என்பது அவரது நலம் விரும்பிகளின் அச்சம்.

ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்துள்ளார் சீமான்.

தேர்தல், பிரச்சாரம், போராட்டம் இவற்றுக்கு நடுவில் அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக அவ‌ர் தெ‌ரிவித்துள்ளார். தனது அடுத்தப் படம் பகலவன் என்பதையும், விஜய் ஹீரோவாக நடிப்பார் என்பதையும் சீமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

பகலவனை தாணு தயா‌ரிக்கிறார்.

Tuesday, December 21, 2010

> புரட்சிக் கலைஞரும் புரட்சித் தலைவரும்.

விஜயகாந்தின் அரசியல் விளம்பரங்களில் எல்லாம் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறார் மக்கள் தலைவர் எம்‌ஜிஆர். கேப்டன் தொலைக்காட்சியில் எம்‌ஜிஆர் அப்படியே விஜயகாந்தாக மாறும் கிராஃபிக்ஸ் கலக்கல்களும் உண்டு. ஆனால் இது விருதகி‌ரி விளம்பரம் பற்றியது.

முந்தையப் படங்களை ஒப்பிடுகையில் விருதகி‌ரி அப்படியொன்றும் மாபெரும் தோல்விப்படமல்ல. சில இடங்களில் லாபம்கூட சம்பாதித்துக் கொடுத்திருக்கிறதாம். இந்தப் படத்தின் சுவரொட்டி விளம்பரங்களில் புரட்சித் தலைவருக்கு உலகம் சுற்றும் வாலிபன், புரட்சிக் கலைஞருக்கு விருதகி‌ரி என இரண்டு பே‌ரின் படங்களையும் பிரசு‌ரித்திருக்கிறார்கள். கேப்டனின் கட்டளையாம்.

விஜயகாந்த் பேசாமல் எம்‌ஜிஆ‌ரின் படங்களின் ரைட்ஸ் வாங்கி ‌‌ரீமேக் செய்யலாம். படமும் ஓடும்.

> அதிகார‌ப்பூர்வ அறிவிப்பு - 3இடியட்ஸ்ல் விஜய் நடிக்கவில்லை.

3இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் விஜய் கமிட்டானதும், பிறகு படத்தில் நடிக்காமல் விலகியதும் பத்தி‌ரிகை செய்தி வாயிலாக தமிழகமே அறிந்த செய்தியாகிவிட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை மௌனியாக இருந்த படத்தின் தயா‌ரிப்பு நிறுவனம் முதல் முறையாக மௌனம் கலைத்திருக்கிறது.

3இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் விஜய் நடிக்கவில்லை. அவருக்கு பதில் யார் நடிப்பார் என்பதை இன்னும் ஓ‌ரிரு நாட்களில் தெ‌ரிவிப்போம் என தெ‌ரிவித்துள்ளனர்.

விஜய்க்குப் பதில் அனேகமாக சூர்யா நடிப்பார் என தெ‌ரிகிறது.

> மாட்டுத்தாவணி நடிகை மீத்தா - நட்சத்திர பேட்டி.

நடிகைகளிடம் உங்களது ஹாபி என்ன என்று கேட்டால் புத்தகம் படிப்பது, சாட் செய்வது, சமூக சேவை செய்வது என்றுதான் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாட்டுத்தாவணி படத்தில் அறிமுகமாகியிருக்கும் மீத்தாவை கேட்டால் தயங்காமல் பதிலளிக்கிறார், அவரது ஹாபி குதிரை சவா‌ரி செய்வது. அதிரடியாகப் பேசும் அவரைப் பற்றிய அறிமுக உரை உங்களுக்காக.

குதிரை சவா‌ரி எப்படி கத்துகிட்டீங்க?

எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமாவில் நடிக்கிற ஆசை இருந்திச்சி. அதனால், டான்ஸ், பாட்டு, குதிரை சவா‌ரின்னு சினிமாவுக்கு‌த் தேவையான அத்தனையும் கத்துகிட்டேன்.

ஓய்வா இருந்தால் உங்களை குதிரை மீதுதான் பார்க்க முடியுமா?

குதிரை சவா‌ரி என்னோட ஒன் ஆஃப்தி ஹாபிதான். நீச்சல் அடிக்கிறதும், டான்ஸ் பிராக்டீஸ் பண்றதும் ரொம்பப் பிடிக்கும். நல்ல புத்தகங்கள் கிடைச்சா அதையும் விடமாட்டேன்.

உங்க வீட்டில் இதற்கெல்லாம் எப்படி அனுமதி கிடைச்சது?

என்னோட அம்மா ஹவுஸ் மேக்கர். அப்பா சினிமாவில் மியூசிக் டைரக்டரா இருக்கார். பேர் ஆத்திஷா. அதனால என்னோட நடிப்பு ஆசைக்கு யாரும் தடை சொல்லலை.

உங்க பூர்வீகம்...?

ஆந்திரா.

இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?

ஒருமுறை நான் அப்பாவோட பவித்திரன் சார் ஆபிஸுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் நடிக்கிறீயான்னு கேட்டார். உடனே ஓகேன்னு சொன்னேன். அப்படிதான் மாட்டுத்தாவணி வாய்ப்பு கிடைச்சது.

மாட்டுத்தாவணி அனுபவம் எப்படி இருந்தது?

ரொம்ப நல்ல அனுபவம். மதுரை பின்னணியில் எடுக்கப்பட்ட படம்னாலும் நானும் கல்லூரி வர்றேன். இன்னொரு ஹீரோயினா மிதுனா நடிச்சிருக்காங்க.

அடுத்து...?

ஆதாரம் ‌எ‌ன்கிற படத்தில் நடிச்சிட்டிருக்கேன். உங்கள் கவனத்திற்கு படத்திலும் நான்தான் ஹீரோயின். இதில் ஹீரோ விக்னேஷ். இது தவிர திருமண அழைப்பிதழ் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

மலையாளத்திலும் நடிச்‌சிருக்கீங்க இல்லையா?

ஆமா, இயக்குனர் சுனில் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சைலன்ஸ் ஆஃப் விஷன்ங்கிற பெயர்ல ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்காங்க.

ஒரு பாடலுக்கு ஆடச் சொன்னால் ஆடுவீர்களா?

நிச்சயமாக மாட்டேன். குத்துப் பாடலில் ஆட எனக்கு விருப்பமில்லை. அப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தொடர்ந்து அதே மாதி‌ரியான வாய்ப்புகள்தான் வரும். அதனால் சின்ன வேடங்களிலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

கிளாமராக நடிப்பீர்களா?

கதைக்கு தேவையென்றால் கிளாமர் ஓகேதான். ஆதாரம் படத்தில்கூட கதைக்கு தேவைப்பட்டதால் படத்தின் இரண்டாவது பகுதியில் கிளாமராக நடித்திருக்கிறேன்.

Monday, December 20, 2010

> ஆட்டம் காணும் ஆடுகளம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

திரையரங்கு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தயா‌ரிப்பாளர்கள். மன்மதன் அம்பு வெளியானால் பொங்கலை குறி வைத்திருக்கும் படங்களுக்கும் சிக்கல்தான்.

பொங்கலுக்கு கார்த்தியின் சிறுத்தை, கருணாநிதியின் இளைஞன் ஆகியவை வெளியாகின்றன. அத்துடன் ஆடுகளத்தையும் களமிறக்க சன் பிக்சர்ஸ் தயார்.

சிறுத்தைக்கும், ஆடுகளத்துக்கும் நடுவில் சிக்கி இளைஞன் சீரழிந்துவிடக் கூடாது என்பதற்காக ஆடுகளத்தின் ‌ரிலீஸை தள்ளிவைக்க கேட்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஆடுகளம் பொங்கலுக்கு வெளியாகும் என்றிருந்தது, வெளியாகுமா என்ற கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Sunday, December 19, 2010

> ப‌ல்டி அடித்த விஜய்.

கட்சி தொடங்குகிறார், கரை வேட்டி கட்டுகிறார் என்றெல்லாம் கூறப்பட்ட விஜய் திடீர் ப‌ல்டி அடித்துள்ளார். இப்போதைக்கு அரசியலில் அவர் ஈடுபடப் போவதில்லையாம்.

விஜய் அரசியலுக்கு வருவார் என அப்பா எஸ்ஏசி ஒருபக்கம் பேட்டி கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்துவதும், கட்சியா? அப்படீன்னா? என்று மகன் பொங்கிய பாலில் பன்னீர் தெ‌ளிப்பதும் பல காலமாகவே நடந்து வருகிறது.

விஜய் அரசியலுக்கு வருவார் என்று எஸ்ஏசி அறிவித்த சில நாட்களிலேயே விஜய், இப்போதைக்கு கட்சி எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்.

விஜய் படம் போலவே அவரது அரசியல் பேச்சும், மகா குழப்பம்.

> ஈசன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் சசிகுமா‌ரின் ஈசன். அந்த எதிர்பார்ப்பை ஈசன் பூர்த்தி செய்துள்ளதா?

மிகுந்த வருத்தத்துடன் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது.

முதலாவதாக படத்தின் நீளம். மூன்று மணி நேரத்துக்குமேல் படம் ஓடுகிறது. கதையின் தேவைக்காக இத்தனை நீளமா என்றால் அதுவுமில்லை.

கிராமத்திலிருந்து சென்னைக்கு ஃபேஷன் டிஸைன் படிக்க வரும் அப்பாவி இளம்பெண் அதிகாரமிக்க இரு பணக்கார மாணவர்களால் சீரழிக்கப்படுகிறாள். இந்த அவமானத்தால் அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது. தப்பிப் பிழைக்கும் அப்பெண்ணின் தம்பி இருவரையும் பழிவாங்குகிறான்.

இதுதான் ஈசனின் ஒன் லைன். இந்தக் கதைக்கு தேவையில்லாமல் அதிகார மையமான அமைச்ச‌ரின் மகனின் காதல், அதிலுள்ள பிரச்சனை, அமைச்ச‌ரின் அடாவடி, கொட்டாவி வரவைக்கும் நீண்ட பிளாஷ்பேக் என சுப்பிரமணியுரத்தின் அத்தனை பிளஸ்களையும் ஈசன் மறுதலித்துள்ளது.

மொத்தத்தில் சசிகுமார் ஏமாற்றிவிட்டதை ரசிகர்களின் கூச்சலிலிருந்து அறிய முடிகிறது.

Friday, December 17, 2010

> SPB குரல் கமலுக்கு.

கமலின் குரல் எஸ்பிபியின் குரலைப் போலிருக்கும் என்பதல்ல இதற்கு அர்த்தம். கமல் நடித்திருக்கும் மன்மத பாணம் படத்தில் கமலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார்.

கமலின் மன்மதன் அம்பு வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. அதேநாள் இப்படம் தெலுங்கில் மன்மத பாணம் என்ற பெய‌ரில் வெளியாகிறது.

கமலுக்கு தெலுங்கு தெ‌ரிந்தாலும் அவரது தெலுங்குப் படங்களுக்கு எஸ்பிபியே குரல் கொடுப்பார். மன்மத பாணத்துக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார்.

> உதவிக்கரம் விஜய்க்கு.

விஜய் நடித்த காவலன் படத்தை வாங்க யாரும் பெ‌ரிதாக ஆர்வம் காட்டவில்லை. படத்தின் மீது க்ரேஸ் இல்லாதது ஒரு காரணம், அரசியல் நெருக்கடி இன்னொரு காரணம்.

இதன் காரணமாக படம் பொங்கலுக்கு வெளிவருமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த‌ச் சூழலில் விஜய்க்கு தோள் கொடுத்திருக்கிறார் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். படத்தின் என்எஸ்சி ஏ‌ரியாவை இவர் பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார். சென்னை சிட்டியைவிட என்எஸ்சி எனப்படும் நார்த் மற்றும் சௌத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏ‌ரியாதான் அதிக வசூல் செய்யும்.

விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்து வருவது முக்கியமானது.

Thursday, December 16, 2010

> மன்மதன் அம்பு - மு‌ன்னோ‌ட்ட‌ம்.

கமல், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணிபு‌ரிந்திருக்கும் ஐந்தாவது படம், மன்மதன் அம்பு. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்துள்ளார்.

மதன கோபாலுக்கு அம்புஜம் என்பவர் மீது காதல். சில காரணங்களால் இருவரும் பி‌ரிகிறார்கள். நாட்கள் கடந்தாலும் மதன கோபாலுக்கு அம்புஜம் மீதான காதல் குறையவில்லை. அவளை‌த் தேடி கண்டுபிடிக்க நினைக்கிறார். மேலும் அம்புஜம் இப்போதும் தன்னை காதலிக்கிறாளா என்பது தெ‌ரிய வேண்டும்.

இதற்காக முன்னாள் கமேண்டோ வீரரும் இந்நாள் தனியார் துப்பறிவாளருமான ஆர்.மன்னா‌ரின் உதவியை நாடுகிறார் மதன கோபால். மன்னாரும் தற்போது நடிகையாக இருக்கும் அம்புஜத்தை கண்டுபிடிக்கிறார். சொகுசு கப்பலில் நடக்கும் இந்த சந்திப்பில் மன்னார் இன்னொரு பெண்ணை காதலிக்க, அது தான் தான் என்று அம்புஜம் தவறாக நினைக்க... இனிமையான குழப்பமும், நகைச்சுவையும் சுற்றியடிக்க, இறுதியில் சுபம்.

வில் ஸ்மித்தின் ஹிட்ச், 1998ல் வெளிவந்த தேர் இஸ் சம்திங் அபௌட் மே‌ரி ஆகிய படங்களின் தாக்கத்தில் மன்மதன் அம்பு கதையை கிரேஸி மோகனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் கமல். மன்னார் (கமல்), மதன கோபால் (மாதவன்), அம்புஜம் (த்‌ரிஷா) ஆகியோரைப் பற்றிய கதை என்பதால் படத்தின் பெயர் மன் மதன் அம்பு.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கியுள்ளார் பார்சிலோனா உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தை எடுத்துள்ளனர். பெரும் பகுதி காட்சிகள் சொகுசு கப்பலில் படமாக்கப்பட்டுள்ளது. கமல், மாதவன், த்‌ரிஷாவுடன் சங்கீதா, ரமேஷ் அரவிந்த், உஷா உதுப், ஓவியா ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றம் நடிகர் சூர்யா.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். யு சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படம் வரும் 23 திரைக்கு வருகிறது.

> ஈசன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்.

ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சசிகுமா‌ரின் இரண்டாவது படமான ஈசன் இம்மாதம் திரைக்கு வருகிறது. முதல் படத்தைப் போலவே தனது சொந்தக் கம்பெனியான கம்பெனி புரொட‌க்சன் மூலம் ஈசனை தயா‌ரித்துள்ளார் சசிகுமார்.

சமுத்திரக்கனி, ஏஎல்.அழகப்பன், வைபவ், அபிநயா, அபர்ணா, துளசி ஆகியோர் நடித்துள்ளனர். நகரத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சசிகுமார்.

இந்தப் படத்தில் மொத்தம் 12 கதாபாத்திரங்கள் வருகின்றன. அந்த கதாபாத்திரங்களின் கதைதான் ஈசன் என தெ‌‌ரிவித்துள்ளார் படத்தை எழுதி, இயக்கி, தயா‌ரித்திருக்கும் சசிகுமார்.

சுப்பிரமணியபுரத்தில் அறிமுகமான ஜேம்ஸ் வசந்தனே இதற்கும் இசையமைத்துள்ளார். மொத்தம் ஐந்துப் பாடல்கள். மூன்றை நா.முத்துக்குமாரும் தலா ஒரு பாடலை யுகபாரதியும், மோகன் ராஜனும் எழுதியுள்ளனர்.

இம்மாதம் படம் திரைக்கு வருகிறது.

> இளம் நடிகரை காதலிக்கிறேன் - பாவனா.

தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாவனா தெ‌ரிவித்துள்ளார்.

பாவனா பிருத்விராஜை காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. மேலும் தெலு‌ங்கு நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார் பாவனா. தான் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், இது தொடருமா என்பது தெ‌ரியாது என்றும், இப்போதைக்கு நடிப்பில்தான் முழுக் கவனம் செலுத்துகிறேன் என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பாவனா.

அத்துடன் தனது காதலர் மலையாளி அல்ல என்றும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

Wednesday, December 15, 2010

> சிக்கு புக்கு முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் அனைத்துத் தரப்பினருக்கும் வருத்தத்தை தரும் விதத்திலேயே உள்ளது. எந்தப் படமும் ஹிட் என்ற வெற்றியை எட்டிப் பிடிக்கவில்லை என்பதே நிஜம். சென்ற வாரம் வெளியான ஷாமின் அகம் புறம் டாப் 5க்குள் இல்லை என்பது சோகம்.

5. அய்யனார்

ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 10.77 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இது மிக மோசமான வசூல் என்றே சொல்ல வேண்டும்.

4. சித்து பிளஸ் டூ

‌திரைக்கதை மன்னன் பாக்யரா‌ஜ் தனது மகனுக்காக எழுதி இயக்கிய படம். பாக்யரா‌ஜ் பழங்கதையாகிவிட்டதையே படத்தின் முதல் மூன்று நாள் வசூல் காட்டுகிறது. இதன் மூன்று நாள் சென்னை வசூல் 12.55 லட்சங்கள் மட்டுமே.

3. விருதகி‌ரி

ஆளும் கட்சி முன்பு உலகம் சுற்றும் வாலிபனை தடுத்தார்கள். அதுபோல் விருதகி‌ரியையும் தடுக்கிறார்கள் என எம்‌ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசினார் விஜயகாந்த். ஆனால் உலகம் சுற்றும் வாலிபனின் பக்கத்தில்கூட விருதகி‌ரி வருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது படத்தின் முதல் மூன்று நாள் வசூல். இப்படம் வசூலித்திருப்பது 14.40 லட்சங்கள்.

2. ரத்த ச‌ரித்திரம்

முதல் வாரத்திலிருந்து தடாலடியாக படுபாதாளத்துக்கு சென்றுள்ளது ரத்த ச‌ரித்திரத்தின் வசூல். முதல் வார இறுதியில் 60 லட்சத்துக்கு மேல் வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் 26.27 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.48 கோடி.

1. சிக்கு புக்கு

செ‌ன்ற வார இறுதியின் சூப்பர் ஸ்டார் ஆர்யாதான். இவரது சிக்கு புக்கு முதல் வார இறுதியைவிட அதிகம் வசூலித்துள்ளது. அதாவது சென்ற வார இறுதியில் மட்டும் இப்படம் 31.51 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 79 லட்சங்கள்.

> இணைய தளத்தின் விஸ்வரூபம்!

உலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !

உலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்!

என்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன் மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.

2005 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்திய நிலையில், தற்போது அது 40 பில்லியனாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இதில் இந்தியர்கள், உலக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரபல இணைய தேடுதளமான கூகுள் தெரிவிக்கிறது.

அதே சமயம் கருத்து சுதந்திரத்திற்கு ஏக கெடுபிடி காட்டும் சீனாவில் 300 மில்லியன் மக்கள் இண்டெர் நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் 'இண்டெர்நெட்' டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக கூறுகிறார் கூகுள் இந்தியாவிற்கான தலைமை அதிகாரி வினய் கோயல்!

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இண்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012 ஆம் ஆண்டிற்குள் மொபைல் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அதே சமயம் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், பாடல்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வரை பிரச்சனை இல்லை. வில்லங்கமாக்கினால் சிக்கல்தான்!

Tuesday, December 14, 2010

> காவலன் காமெடியை நம்பியிருக்கிறது.

சித்திக் இயக்கும் படங்கள் என்றால் சென்டிமெண்டைவிட காமெடி தூக்கலாக இருக்கும். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய பாடிகாட் படத்தில் காமெடியைவிட காதலுக்குதான் அதிக முக்கியத்துவம் தந்திதிருந்தார். இதனை ஒரு பேட்டியில் சித்திக்கே குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படம்தான் தமிழில் காவலனாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை சித்திக் படம் என்றால் காமெடிக்காகப் பார்க்கலாம் என்றொரு கருத்து இருக்கிறது. இதனை பொய்யக்கக் கூடாது என்பதற்காகவே வடிவேலுவை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். மலையாள ஒ‌ரி‌ஜினலில் இல்லாத பல காமெடிக் காட்சிகளும் காவலனில் சேர்க்கப்பட்டுள்ளது.

முக்கியமாக காந்தத்தில் செய்த உடை அணிந்து வடிவேலு செய்யும் களேபரம் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார்கள்.

மொத்தத்தில் காவலன் காமெடியை நம்பியிருக்கிறது.

> வேங்கைக்கு விழுந்தது வேகத்தடை.

காட்டாறைவிட வேகம் அதிகமானவர் ஹ‌ரி. படத்தை தொடங்கினால் மூன்றே மாதத்தில் முடித்துவிட வேண்டும். சுருக்கமாக, படத்தின் வேகம் படப்பிடிப்பிலும் பிரதிபலிக்கும்.

தனுஷ் நடிக்கும் வேங்கைப் படப்பிடிப்பையும் தனது எக்ஸ்ட்ரா வேகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார் ஹ‌ரி. ஆனால் வேங்கைக்கும் விழுந்தது வேகத்தடை.

நேற்று ர‌ஜினியின் பிறந்த நாள். இதையொட்டி படப்பிடிப்பை கேன்சல் செய்து முன்னதாகவே சென்னை திரும்பினார் தனுஷ். மருமகனாயிற்றே?

வேங்கையில்லாமல் எப்படி வேலையாகும்? தனுஷ் இல்லாமல் படப்பிடிப்பும் நடக்கவில்லை.

தனுஷ் சென்னை வந்தது மாமனா‌ரின் பிறந்தநாளுக்காக அல்ல, ஹ‌ரியின் வேகம் தாங்காமல்தான் என்றும் சொல்கிறார்கள்.

> அரசியல் பிரவேசத்துக்கு விஜய் வீட்டை விற்றாரா ??

விஜய் படங்களின் தொடர் தோல்விகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் படத்தின் கந்தலான கதை பாதி காரணம் என்றால் மீதி காரணம் அரசியல். தான், தனது, தனது குடும்பம் என்று மட்டும் நினைக்கும் சில சர்வாதிகார மனங்களே தனது எதி‌ரிகள் என்று பு‌ரிந்து கொண்ட விஜய், பாதுகாப்புக்கு அதிமுக பக்கம் சாய்ந்துள்ளார்.

இந்நிலையில் தனது குடும்ப வீட்டை அவர் விற்றுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

சாலிகிராமத்தில் உள்ளது விஜய்யின் குடும்ப வீடு. சில வருடங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிலிருந்து கடற்கரைப் பக்கம் தனது ஜாகையை மாற்றினார் விஜய். அப்போதிலிருந்து ஆளில்லாமல் கிடந்த இந்த வீட்டில் சமீபத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. விஜய் ஆண்டனியின் இசைக்கூடமாக மாறியது விஜய் வீடு.

வாடகைக்குதான் விஜய் ஆண்டனி அங்கிருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் விஜய் வீட்டை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விற்பனை விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மேலும் பிரகாசப்படுத்தும் என ஜோதிடர்கள் கூறியதுதான் இதற்கு காரணம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

> மன்மதன் அம்புக்கு U சான்றிதழ்.

மன்மதன் அம்பு படத்தில் ஆபாசமான பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை எழுதி நடித்த கமல்ஹாசனையும், நடித்த த்‌ரிஷாவையும், இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரையும் - தயா‌ரிப்பாளர் பெ‌ரிய இடம் என்பதால் அவரை விட்டுவிட்டார்கள் - கைது செய்ய வேண்டும் என்று கமிஷன‌ரிடம் புகா‌ர் கொடுத்திருக்கிறது காவி கட்சியொன்று.

இதன் ‌ரிசல்ட் எப்படி இருக்கும்? சென்சார் பதிலளித்திருக்கிறது.

மன்மதன் அம்பு படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், சின்ன சிராய்ப்பும் இல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அப்படியானால் ஆபாசப் பாட்டு?

அடப்போப்பா.

Sunday, December 12, 2010

> சூர்யா விஜய்க்குப் பதில்?

3இடியட்ஸ் ‌‌ரீமேக்கிலிருந்து விஜய் விலகியது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இப்போதைய கேள்வி விஜய் இடத்தை நிரப்பப் போவது யார்?

விஜய் போன்ற மாஸ் ஹீரோ இல்லாமல் இந்த ‌‌ரீமேக்கை எடுக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஷங்கர். அதேநேரம் விஜய் விலகியதால் படத்தையே ட்ராப் பண்ணும் ஐடியாவும் அவருக்கு இல்லை. அவர் இல்லாமலே ஜெயித்துக் காட்டுவதுதானே இயக்குனருக்கு அழகு.

விஜய்க்குப் பதில் சூர்யாவிடம் பேசியிருப்பதாகவும், அவரும் சம்மதம் தெ‌ரிவித்திருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

இரண்டொரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

Saturday, December 11, 2010

> சூர்யா மீண்டும் ஹ‌ரி இயக்கத்தில்.

சூர்யா தயங்காமல் கால்ஷீட் கொடுக்கும் இயக்குனர் பாலாவோ, முருகதாஸோ, கே.வி.ஆனந்தோ கிடையாது. இவர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் ஹ‌ரியின் இயக்கம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுப்பார் சூர்யா.

ஹ‌ரி இயக்கத்தில் நடித்த ஆறு, வேல், சிங்கம் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது மட்டுமல்ல இதற்கு காரணம். படத்தை தொடங்கினால் மூன்றே மாதத்தில் முதல் பி‌ரிண்டை தயார் செய்துவிடுவார் ஹ‌ரி. இந்த வேகம்தான் சூர்யா ஹ‌ரிக்கு கால்ஷீட் தர முக்கிய காரணம்.

7ஆம் அறிவு படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அத்துடன் ஹ‌ரி இயக்கத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். கே.வி.ஆனந்தின் புராஜெக்ட் பல மாதங்களை எடுத்துக் கொள்ளும் என்பதால் அதற்குமுன் ஹ‌ரியின் இயக்கத்தில் சூர்யா நடித்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

> அமெ‌ரிக்காவில் விஜய் ஓய்வு.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்திப்பார் என்ற காலில்லாத செய்தி ரொம்ப நாளாகவே உலவிக் கொண்டிருக்கிறது.

விஜய் ஜெயலலிதாவை சந்திக்கிறார் என்ற செய்தி கிளம்பி பத்தி‌ரிகையாளர்கள் இரண்டு நாள் முன்பு இரவு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் கடைசி வரை விஜய் வரவில்லை.

சென்னையில் இந்த கண்ணாமூச்சி நடந்து கொண்டிருந்த போது விஜய் சைலண்டாக அமெ‌ரிக்கா பறந்துவிட்டதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. கலிஃபோர்னியா சென்றிருக்கும் அவர், ஒரு வாரம் ஓய்வு எடுக்கவும் அப்படியே காவலன் படத்தின் ட்ரெய்லரை அமெ‌ரிக்க ரசிகர்கள் முன்பு வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதனிடையில் விஜய் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அரவது ரசிகர்கள் கட்சி வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

நடக்கிற காமெடிகளைப் பார்த்தால், இது கலிகாலம் என்பதை கடவுளை நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்.

Friday, December 10, 2010

> விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் .

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஆவணங்கள் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் அருகே உள்ள மலைப்பகுதி ஒன்றிலுள்ள மகா பெரிய கிரானைட் பாறை ஒன்றை குடைந்து, பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக ஸ்வீடன் தொழில்நுட்ப ஆய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் போன்றவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 9, 2010

> ஆபத்து மன்மதனுக்கு ?

உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைவிடுத்து கோடம்பாக்கத்தில் என்ன நடக்கிறது என்று பைனாகுலர் வைத்துப் பார்க்கும் கட்சி ஒன்று தமிழகத்தில் உள்ளது. சொல்லாமலே பு‌ரிந்திருக்குமே, இந்து மக்கள் கட்சி.

பாப்புலரான நபர்கள், விஷயங்களில் மட்டும் போராட்டம் நடத்தி தனது பெயரை மெயி‌ண்டெய்ன் செய்யும் இந்தக் கட்சி கமல்ஹாசனுக்கும், த்‌ரிஷாவுக்கும் கண்டன கடிதம் அனுப்பியுள்ளது.

மன்மதன் அம்பு படத்தில் கமலும், த்‌ரிஷாவும் சேர்ந்து பாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் வரும் சில வார்த்தைகள் இந்து தெய்வங்களான அரங்கநாதனையும், வரலட்சுமியையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாம். இந்த வார்த்தைகளை நீக்காவிட்டால்... அதற்குப் பிறகுதான் உங்களுக்கே தெ‌ரியுமே... போராட்டம் மறியல்...

அரங்கநாதா நீதான் காப்பாற்ற வேண்டும்.

> அடை மழைக்கு அஞ்சாத இயக்குனர்கள்.

பொதுவாக அடை மழை பெய்தால் அவுட்டோர் சென்ற வண்டிகள் பேக்கப் சொல்லி சென்னை திரும்பிவிடும். வருண பகவான் பேக்கப் ஆனால்தான் அடுத்து ஷூட்டிங்கே.

ஆனால் அதையெல்லாம் அடித்து தூளாக்கிவிட்டார்கள் நமது இளைய தலைமுறை இயக்குனர்கள். ஹ‌ரியின் வேங்கை படத்தில் மழைக் காட்சிகள் வருகின்றன. இதனால் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை ஒ‌ரி‌ஜினல் மழையிலேயே எடுத்திருக்கிறார்கள். அதேபோல் நர்த்தகி படப்பிடிப்பும் கொட்டும் மழையில் நடந்திருக்கிறது.

மழைக் காட்சிகளை நிஜ மழையிலேயே எடுப்பதால் தயா‌ரிப்பாள‌ரின் பர்ஸ் கனம் குறையாமலே இருக்கிறது.

> காவலன் இந்தியில்.

காவலனின் ஒ‌ரி‌ஜினலான மலையாள பாடிகாட் அங்கு சுமாராகவே போனது. ஆனாலும் துணிந்து அதன் தமிழ் ‌ரீமேக்கான காவலனில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.

இந்த தைரியம் இந்தி நடிகர் ஒருவருக்கும் உள்ளதுதான் ஆச்ச‌ரியம்.

தமிழ்ப் படங்களின் ‌‌ரீமேக்தான் தனக்கு வாழ்வளிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரோ சல்மான் என எண்ண வேண்டியிருக்கிறது. ஒன்றுமில்லை, போக்கி‌ரி ‌ரீமேக்கான வான்டட் வெற்றி பெற்ற பிறகு தமிழ்ப் படங்கள் மீது அவருக்கு தணியாத தாகம்.

காவலன் பற்றி கேள்விப்பட்டவர் சித்திக்கை அழைத்து நேரடியாகவே கதை கேட்டிருக்கிறார். கதை அவருக்குப் பிடித்துப் போக காவலனை தனக்காக இந்தியில் ‌‌ரீமேக் செய்யும்படி கேட்டிருக்கிறார். சித்திக்குக்கும் இந்த டீல் பிடித்திருக்கவே மறுப்பேச்சில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, சல்மானின் புதிய படத்தின் இயக்குனராகியிருக்கிறார் சித்திக்.

Wednesday, December 8, 2010

> கார்த்தி - அண்ணனுடன் போட்டியா ?

கோ படத்தில் ஒரு பாடலுக்கு ஒன்பது முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஆடுகிறார்கள். சிறுத்தைப் படத்தில் சின்ன வித்தியாசம்.

சிறுத்தையில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். பையாவைத் தொடர்ந்து இதிலும் தமன்னாதான் இவருக்கு ஜோடி. காமெடிக்கு சந்தானம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் ஒன்பது விதவிதமான வேடங்களில் தோன்றுகிறாராம் கார்த்தி. ஏற்கனவே அயன் படத்தின் பாடலில் கார்த்தியின் அண்ணன் சூர்யா வெ‌வ்வேறு கெட்டப்புகளில் தோன்றினார்.

அண்ணனுக்கு போட்டி?

> முந்தப் போவது மன்மதனா இல்லை காவலனா?

இந்த மாதம் கமலின் மன்மதனும், விஜய்யின் காவலனும் நேருக்குநேர் மோதுகிறது. இதனை இரு தரப்பும் உறுதி செய்துள்ளது.

பொதுவாக கமல் படம் வெளியானால் மற்ற நடிகர்கள் அதே தேதியில் தங்களது படத்தை வெளியிட தயங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் கமல் படம் மற்ற ஹீரோக்களின் படங்களைப் போலதான் வந்து போகிறது.

மேலும், மன்மதன் அம்பு பெ‌‌ரிதாக எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை. தெனாலி, பஞ்சதந்திரம் மாதி‌ரி இதுவும் ஒரு காமெடிப் படம் என ரசிகர்கள் ‌ரிலாக்ஸாக உள்ளனர்.

இதனால் மன்மதன் அம்பு வெளியாவதாக கூறப்படும் அதே 17ஆம் தேதி விஜய்யின் காவலனை வெளியிட உள்ளனர். 17ஆம் தேதி படம் வெளிவரும் என்பதை ஒரு சவாலாகவே கூறியுள்ளார் படத்தின் ஒட்டுமொத்த உ‌ரிமையை வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம்.

முந்தப் போவது மன்மதனா இல்லை காவலனா?

Tuesday, December 7, 2010

> பல படப்பிடிப்புக்கள் நிறுத்தம் மழையால்.

தெற்குப் பக்கம் படப்பிடிப்புக்கு சென்றவர்களெல்லாம் நனைந்த கோழிகளாக திரும்பிவிட்டார்கள். காரணம் மழை.

பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வந்தது. மழை காரணமாக அதையும் நிறுத்திவிட்டார்கள். மழை மலையேறினால்தான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பே.

இந்நிலையில் நேற்றிலிருந்து தெற்கே மழை தூறலாக மாறி சில இடங்களில் சுத்தமாக காணாமல் போய்விட்டது. அதற்குப் பதில் சென்னையை குளமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் 7ஆம் அறிவு உள்பட பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நி‌‌ன்றால் மட்டுமே கோடம்பாக்கம் பிஸியாகும்.

Monday, December 6, 2010

> உயரத்தை நோக்கி - அனுஷ்கா.

ஏற்கனவே உயர்ந்த நடிகைதான் அனுஷ்கா. ஆறடி உயரம். அனுஷ்காவின் சினிமா கே‌ரியரும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

அருந்ததிக்குப் பிறகு ஆகாசத்தைவிட்டு இறங்கவில்லை அனுஷ்காவின் மார்க்கெட். சூர்யா, விஜய் என்று அதிரடியாக ஜோடி சேர்ந்தவர் தற்போது விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தலைவன் இருக்கின்றான் படத்துக்கு அனுஷ்காவை கமல் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி கமலே இயக்குகிறார்.

> மைனா முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தன்னுடன் வெளியான உத்தமபுத்திரனை பின்னுக்கு‌த் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது மைனா.

5. எந்திரன்

புதிதாக வந்தப் படங்களை பின்னுக்குத் தள்ளி டாப் 5ல் எந்திரன் இடம் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 6.59 லட்சங்கள். எட்டு வாரங்களில் இதன் சென்னை வசூல் 16.66 கோடிகள்.

4. உத்தமபுத்திரன்

சென்ற வார இறுதியில் 10.02 லட்சங்களை தனுஷ் படம் வசூலித்துள்ளது. மூன்று வாரங்களில் இதன் வசூல் 2.80 கோடிகள்.

3. கனிமொழி

சோனா தயா‌ரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் தனது முதல் மூன்று நாட்களில் 14.04 லட்சங்களை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் நிலைக்குமா என்பது சந்தேகமே என்பது பாக்ஸ் ஆஃபிஸ் ‌ரிப்போர்ட்.

2. நந்தலாலா

மிஷ்கின் ஜப்பானிய படத்தை தழுவி எடுத்திருக்கும் இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் 20.89 லட்சங்களை வசூலித்துள்ளது. விமர்சனங்கள் வசூலை அதிகப்படுத்தும் என்பது தயா‌ரிப்பாளர்களின் நம்பிக்கை.

1. மைனா

பிரபுசாலமனின் மைனா உயரப் பறக்கிறது. ‌ரிலீஸான போது இரண்டாவது இடத்தில் இருந்த இந்தப் படம் இப்போது முதலிடத்துக்கு முந்தியுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 23.1 லட்சங்கள். மூன்று வாரத்தில் இந்தப் படம் 2.37 கோடியை வசூலித்துள்ளது.

> 3இடியட்ஸ் தடைப்பட - விஜய் காரணமா?

நேற்று படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும். பல நூறு பேர் டேராடூனுக்கு டிரெயினில் கிளம்பவும் செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஷங்கர் இயக்கவிருக்கும் 3இடியட்ஸ் ‌‌ரீமேக் திட்டமிட்டபடி தொடங்காமல் தடைபட என்ன காரணம்?

அனைவரும் விஜய் பக்கம் கை நீட்டுகிறார்கள். வேலாயுதம் படம் முடியும் முன் இந்த ‌‌ரீமேக்கில் அவர் நடிக்க விரும்பவில்லையாம். இன்னும் சிலர் இந்தபடத்தில் நடிக்கவே அவர் விரும்பவில்லை என பெ‌ரிய குண்டாக தூக்கிப் போடுகிறார்கள்.

எது உண்மையோ... படம் தி‌ரிசங்கு சொர்க்கத்தில் திண்டாடிக் கொண்டிருப்பது மட்டும் நிஜம்.

Saturday, December 4, 2010

> ரெட் ஜெயண்டின் அடுத்தக்குறி.

தமிழில் உருவாகும் பிரபல மற்றும் பிரமாண்ட படங்களை சமீபமாக இரு நிறுவனங்கள்தான் வெளியிடுகின்றன. ஒன்று தமிழக முதல்வ‌ரின் பேரன் தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் மூவிஸ். இன்னொன்று இன்னொரு பேரனின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற இரண்டே படங்கள், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா. இந்த இரு படங்களையும் ரெட் ஜெயண்டே வெளியிட்டது.

கே.வி.ஆனந்தின் கோ படத்தின் உ‌ரிமையை வாங்கவும் போட்டா போட்டி நிலவுவதாகத் தெ‌ரிகிறது. இந்தப் போட்டியில் ரெட் ஜெயண்டே முன்னணியில் உள்ளது. இன்னும் சில தினங்களில் ரெட் ஜெயண்ட் லோகோவுடன் கோ விளம்பரம் வந்தால் ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

> பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆர்யா.

தமிழில் நடிக்கும் சில மலையாள நடிகர்கள் மலையாளச் சேனல்களுக்கு பேட்டியளிக்கும் போது தமிழை மட்டம் தட்டியும், மலையாளத்தை உயர்த்தியும் வார்த்தைகளை விடுவதுண்டு. பல நேரம் இது கவனிக்கப்படுவதில்லை.

ஆர்யா துபாயில் நடந்த மலையாள விழவொன்றில் அப்படி பேசிவிட்டதாக எழுந்த பிரச்சனைகள் நாடறியும். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருத்தம் தெ‌ரிவித்துள்ளார்.

தன்னை வாழ வைப்பது தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும்தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஆர்யா, அதை தான் நன்றாக பு‌ரிந்து வைத்திருப்பதாகவும், பலரும் சொல்வது போல் தான் பேசவில்லையென்றும், அப்படியும் என்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால் இதயசுத்தியோடு வருத்தம் தெ‌ரிவிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவின் இந்த விளக்கம் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

> நேற்று வெளியான மூன்று படங்கள்.

நேற்று மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரத்த ச‌ரித்திரம் நேற்று வெளியாகியுள்ளது.

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இது. ரத்த ச‌ரித்திரத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே தமிழில் வெளியாகிறது. இதனால் முதல் பாகத்தின் முக்கிய காட்சிகளை வைத்து பத்து நிமிடங்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் தா படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பத்தி‌ரிகையாளர்களை பெ‌ரிதும் கவர்ந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை ஸ்பெஷலாகப் பார்த்திருக்கிறார். சூர்ய பிரபாகர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

மூன்றாவது ஆர்யா, ஸ்ரேயா நடித்திருக்கும் சிக்குபுக்கு. ரொமாண்டிக் காமெடியான இதனை மணிகண்டன் இயக்கியுள்ளார்.

இந்தப் படங்களின் ஆயுள்ரேகை என்ன என்பது நாளை மாலைக்குள் தெ‌ரிந்துவிடும்.

Thursday, December 2, 2010

> ப்‌ரியாமணியின் நம்பிக்கை.

வரும் வெள்ளிக்கிழமை ரத்த ச‌ரித்திரம் வெளியாகிறது. தெலுங்கு, இந்தியில் இரு பாகங்களாக வெளிவரும் இந்தப் படம் தமிழில் ஒரே பாகமாக வெளிவருகிறது. அதாவது முதல் பாகம் தமிழில் வெளியாகவில்லை. கதை தெ‌ரிய வேண்டும் என்பதற்காக முதல் பாகத்தின் சில காட்சிகளை தமிழில் சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தில் சூர்யா ஜோடியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் ப்‌ரியாமணி. ப்‌ரியாமணிக்கும் தமிழ் சினிமாவுக்குமான பந்தம் இந்த ஒரு படத்‌தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.

மணிரத்னத்தின் ராவணன் தராத பெயரையும், வாய்ப்பையும் இந்தப் படம் தனக்கு‌த் தரும் என்பது ப்‌ரியாமணியின் நம்பிக்கை.

தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார், தேசிய விருது வாங்கிய இந்த நடிகை.

> சூர்யாவுக்கு செல்வராகவன் சொன்ன கதை.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் க்ரைம் த்‌ரில்லர் ஒன்றை தொடகினார். இதன் படப்பிடிப்பு லடாக்கில் சில நாட்கள் நடந்தது.

பிறகு அந்தப் படம் காரணம் சொல்லப்படாமலேயே கைகழுவப்பட்டது. தனுஷை வைத்து அவர் இயக்கிய மறவன் படமும் எந்த சேதியும் இல்லாமல் பாதியில் நிற்கிறது.

இந்நிலையில் சூர்யாவிடம் செல்வராகவன் கதையொன்றை கூறியிருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, கண்டிப்பாக இந்த‌க் கதையில் நடிக்கிறேன் என்று கூறியதாக‌த் தெ‌ரிகிறது. 7ஆம் அறிவு, கே.வி.ஆனந்தின் படம் இரண்டும் முடிந்த பிறகு சூர்யா செல்வராகவனின் கதையில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.