Sunday, July 31, 2011

> ர‌ஜினி வந்தால் ராக்கெட் வேகத்தில் ராணா.

ர‌ஜினிக்கு பிடித்த இடம் ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டி. ஸ்கி‌ரிப்டுடன் உள்ளே நுழைந்தால் ஃபர்ஸ்ட் காப்பியுடன் திரும்பி வரலாம். ர‌ஜினிக்கு மட்டுமல்ல, பலருக்கும் பிடித்த ஸ்டுடியோ. அனைத்து வசதிகளும் உள்ளடக்கியது. ரசிகர்கள் தொந்தரவில்லாமல் படம் எடுக்க ஏற்ற இடம்.

ஏவி.எம். தயா‌ரித்த சிவா‌ஜி படத்துக்கே ராமோ‌ஜிராவில் அரங்கு அமைத்தார்கள். ராணா குறித்து சொல்லத் தேவையில்லை. அத்தியாவசியமான அவுட்டோர் ஷூட்டிங் தவிர்த்து மற்ற அனைத்தும் இங்கு தயாராகவுள்ளது. இதற்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

ர‌ஜினி வந்தால் ராக்கெட் வேகத்தில் ராணா பயணிக்க‌த் தொடங்கும்.

> ஈகோ என்றால் கிலோ என்ன விலை? ஆர்யா

ஈகோ என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் ஆர்யா. அந்தளவுக்கு ஜோவியல். அவன் இவன் படத்தில் விஷாலுக்கு முக்கிய வேடம் என்று தெ‌ரிந்தும் அவரை பாலாவிடம் அறிமுகப்படுத்தியவர்.

தெய்வத்திருமகள் படத்தைப் பார்த்து தனது வியப்பை வெளிப்படையாக காட்டியிருக்கிறார். விக்ரம் பிரமாதமான நடிகர். அவரைப் போல் என்னால் நிச்சயம் நடிக்கவே முடியாது. வளர்ந்த நபர் ஐந்து வயசு குழந்தையின் மனநிலையில் நடிப்பதெல்லாம் பெ‌ரிய விஷயம் என்று பாராட்டியுள்ளார்.

ஆடுகளம் தனுஷ், அவன் இவன் விஷால் ஆகியோரையும் பாராட்டியுள்ளார் ஆர்யா. உலகத்தரத்துக்கு இணையானது இவர்கள் நடிப்பு என்றும் தெ‌ரிவித்துள்ளார்.

> விஜய் விளக்கம் தந்தால் மட்டுமே பகலவன் உதிக்குமாம்?.

சீமான் விஜய்யை வைத்து இயக்கும் பகலவன் படத்தின் நிலை என்ன? சீமான் தரப்புக்கே அதன் உண்மை நிலவரம் தெ‌ரியவில்லை.

வேலாயுதம் படத்துக்குப் பிறகு விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நண்பன் பட வாய்ப்பு வந்தது. வேலாயுதத்தில் நடித்துக் கொண்டே நண்பனுக்கும் கால்ஷீட் தந்தார். வேலாயுதம் முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தறுவாயில் உ‌ள்ளது.

அடுத்து பகலவன்தானே என்று தயாரான நேரம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வந்தது. அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன். இதில் கௌதம் யோஹன்: அத்தியாயம் ஒன்று என்று படத்துக்கு பெயர் வைத்து விளம்பரமே செய்துவிட்டார். பகலவன் குறித்து எந்தப் பேச்சும் இல்லை.

விஜய் விளக்கம் தந்தால் மட்டுமே பகலவன் உதிக்குமா என்பது தெ‌ரியவரும்.

Saturday, July 30, 2011

> இதற்கு சிம்பு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கசப்பை கண்ணை மூடி விழுங்கிவிடுவதுதான் சினிமா நட்சத்திரங்களின் பழக்கம். கசப்பின் கொடுமையைப் பொறுத்து அது வெளியேயும் வருவதுண்டு. பரத் விஷயத்தில் அது வெளியே வந்திருக்கிறது.

வானம் படத்தில் சிம்புவைப் போல பரத்துக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது அனைத்து நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று இயக்குனர் க்ருஷிடம் உறுதி செய்து கொண்டுதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் நடந்தது வேறு.

படத்தின் விளம்பரங்களிலும் ப்ரமோஷன்களிலும் சிம்பு மட்டுமே முக்கியத்துவப்படுத்தப்பட்டார். பரத் நடித்ததற்கான சுவடே இல்லை. இதனை வெளிப்படையாக தெ‌ரிவித்திருக்கிறார் பரத். அத்துடன் இந்த கசப்பான அனுபவம் இனி பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதா என்று யோசிக்க வைத்திருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

இதற்கு சிம்பு என்ன பதில் சொல்லப் போகிறார்?

> சர்ப்ரைஸ் of முகமூடி.

யு டிவி தயா‌ரிப்பதாக இருந்த மிஷ்கினின் முகமூடி செப்டம்பர் மாதம் தொடங்கும் என‌த் தெ‌ரிகிறது. யு டிவியை வால்ட் டிஸ்னி வாங்கியிருப்பதால் தயா‌ரிப்பு என்னும் இடத்தில் வால்ட் டிஸ்னி பெயர் இடம்பெறும்.

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான இதில் ‌ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம். இதில் நரேன் நடிக்கிறார். ஹீரோயின் அனேகமாக மும்பை மாடலாக இருக்கலாம்.

செப்டம்ப‌ரில் படப்பிடிப்பை தொடங்கும் போது டீஸர் ஒன்றை வெளியிடும் திட்டம் இருக்கிறது மிஷ்கினிடம். படத்தைக் குறித்த முதல் பிரமிப்பாக இந்த டீஸர் இருக்கும் என்று இப்போதே பொடி வைக்கிறது மிஷ்கின் வட்டாரம்.

> வந்தான் வென்றான் ஜெயா தொலைக்காட்சியில்.

சென்ற ஆட்சியில் முக்கிய‌‌ப் படங்களின் தொலைக்காட்சி உ‌ரிமையை ஏகபோகமாக அனுபவித்து வந்தன சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள். ஆட்சி மாறியதால் காட்சியும் மாறுவதுதானே முறை. புதிய படங்களின் உ‌ரிமையை வாங்க கடந்த ஐந்து வருடங்களாக சுணக்கம் காட்டிய ஜெயா தொலைக்காட்சி இப்போது களத்தில் இறங்கியிருக்கிறது.

‌ஜீவா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கியிருக்கும் படம் வந்தான் வென்றான். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இந்த ஒளிபரப்பு உ‌ரிமைக்காக ஒன்றரை கோடி ரூபாய் ஜெயா தொலைக்காட்சி படத்தின் தயா‌ரிப்பாளருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

Friday, July 29, 2011

> 40 லட்சத்தை தாண்டியது தெய்வத்திருமகள் வசூல் U.Kயில்.

யுகே யில் தெய்வத்திருமகளின் வசூல் சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் 40 லட்சத்தை தாண்டியது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிசினஸ் கேந்திரமாகிவிட்டன வெளிநாடுகள். வெளிநாடு வர்த்தகத்தை வைத்தே பட்ஜெட்கள் போடப்படுகின்றன. ஹீரோக்களின் சம்பளத்தையும் இது பாதிக்கிறது.

விக்ரமின் தெய்வத்திருமகள் படம் யுகே யில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் ஐயம் சேம் படத்தின் காப்பியாக இருந்தும் படத்தை கவலையில்லாமல் ரசிக்கிறார்கள். சென்ற வார இறுதியில் 3 திரையிடல்களில் இப்படம் 11,058 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் யுகே யில் வசூலித்தது 56,499 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 40.85 லட்சங்கள்.

தெய்வத்திருமகளின் யுகே வசூல் 50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

> வேலாயுதம், மங்காத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு.

வேலாயுதம், மங்காத்தா படங்களின் ரிலீஸ் குறித்து சம்பந்தப்ஙபட்டவர்களே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கேரளா விநியோகஸ்தர்கள் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளனர்.

கேரளாவில் விஜய், அஜீத் இருவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜயக்கு தமிழ்நாட்டைப் போலவே ரசிகர்கள் நிறைந்து உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட விஜய் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.

மங்காத்தாவின் கேரள உரிமையை வாங்கியிருக்கும் விசியோகஸ்தர் மங்காத்தா ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மங்காத்தா ஆடியோ ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகும் என்று நேற்று முன்தினம்தான் தமிழகத்தில் அறிவித்தார்கள். கேரளாவில் ரிலீஸ் தேதியையே அறிவித்துவிட்டனர்.

அதேபோல் வேலாயுதம் படத்தின் ஆடியோ என்று வெளியிடப்படுகிறது என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை. ஆனால் கேரள உரிமையை வாங்கியிருப்பவர் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முஸ்லீம் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஓணத்தை ஒட்டிவரும் தேதி என்பதால் 31 ஆம் தேதி படத்தை கண்டிப்பாக வெளியிடுங்கள் என்று விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

> விமலா ராமன் பில்லா 2 லிருந்து விலகல்.

பில்லா படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட விமலா ராமன் அப்படத்திலிருந்து விலகியிருக்கிறார். இந்தி, தெலுங்கில் நடிப்பதால் பில்லா 2 வுக்கு கால்ஷீட் இல்லை என்று காரணம் கூறியுள்ளார்.

சக்‌ரி டோலட்டி இயக்கத்தில் பில்லா 2 படத்துக்காக வேலைகள் தொடங்கியுள்ளன. ஹுமா குரோஷி நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக விமலா ராமன் நடிப்பார் என்றனர். ஆனால் அவர் தற்போது நடிக்கவில்லை. இதனை விமலா ராமனே தெ‌ரிவித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்த விமலா ராமனுக்கு தற்போது இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சஞ்சய் தத் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனால் பில்லா 2 வுக்கு கால்ஷீட் இல்லை என்று தெ‌ரிவித்திருப்பவர், இரண்டாவது ஹீரோயினாக நடிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

Wednesday, July 27, 2011

> சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - தெய்வத்திருமகள் முதலிடம்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது விக்ரமின் தெய்வத்திருமகள். முதல்வார இறுதியில் வசூலானதைப் போலவே இரண்டாவது வார இறுதியிலும் இப்படம் வசூல் செய்திருப்பது சாதனை.

4. அவன் இவன்

பாலாவின் அவன் இவன் ஐந்து வாரங்கள் முடிவில் 4.93 கோடிகள் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 1.8 லட்சங்கள்.

3. வேங்கை

ஹ‌ரியின் வேங்கை பாக்ஸ் ஆஃபிஸில் பூனை அளவுக்கே பாய்ந்திருக்கிறது. இதுவரை 2.45 கோடிகள் வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 16.2 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. காஞ்சனா

லாரன்சின் பேய் படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 26.06 லட்சங்கள் வசூல் செய்துள்ளது.

1. தெய்வத்திருமகள்

விக்ரமின் மெலோட்ராமா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 80.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 2.53 கோடிகள்.

> இன்று SONY அறிவிக்கிறது மங்காத்தா ஆடியோ ?

மங்காத்தா ஆடியோ எப்போது வெளியிடப்படும் என்பதை இன்று சோனி நிறுவனம் அறிவிக்கிறது. ஆடியோ வெளியிடும் அன்று படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்படும்.

யுவன் இசையில் தயாராகியிருக்கும் மங்காத்தா பாடல்களுக்கு அமோக எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். இதில் விளையாடு மங்காத்தா என்ற பாடலை மட்டும் விளம்பரத்துக்காக ஏற்கனவே வெளியிட்டனர். பாடல் செம ஹிட்.

படத்தில் இடம்பெறும் மூன்று டூயட் பாடல்களில் ஒரு பாடலை கிருஷ், சுசித்ரா பாடியுள்ளனர். இன்னொரு பாடலை பாடியிருப்பவர்கள் எஸ்பிபி சரண், பவதா‌ரிணி. மூன்றாவது பாடலை யுவன் ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். உடன் பாடியிருப்பது மதுஸ்ரீ.

ஒரு பாடலில் படத்தின் தயா‌ரிப்பாளர் துரை தயாநிதியின் மனைவியும் பாடியிருக்கிறார். அவர் சினிமாவில் பாடுவது இதுவே முதல்முறை.

படத்தின் ஆடியோ உ‌ரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் ஆடியோ வெளியீடு எப்போது என்று இன்று அறிவிக்கிறது.

> தமன்னா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நாயகர்கள் அனேகமாக அனைவருடனும் நடித்திருக்கிறார் தமன்னா. விக்ரம் மட்டும் பாக்கி. அவருடன் ஜோடி சேர்ந்தால் இந்த வட்டம் முழுமையடையும்.

தமன்னாவுக்கு தற்போது தமிழில் படங்களில்லை. தெலுங்கில் இரு படங்கள் உள்ளன. இந்நிலையில் விக்ரமுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக வெளிப்படையாக தெ‌ரிவித்துள்ளார். தெய்வத்திருமகள் பார்த்த பிறகு விக்ரமுடன் இணைந்து நடிக்கும் விருப்பம் வலுப்பட்டிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

சுசீந்திரன் படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து தரணி, லிங்குசாமி உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார். இதை மனதில் வைத்தே தமன்னா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

> மீண்டும் ராசா பிரதமர் மீது குற்றச்சாட்டு - 2 G வழக்கு.

2ஜி வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கையோ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என இன்று காலை மறுப்பு தெரிவித்த ஆ.ராசா, மீண்டும் பிரதமரை குற்றம்சாட்டியுள்ளார்.

2ஜி வழக்கில் நேற்று ராசா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாகத் தெரிவித்திருந்தார்.

ராசா தரப்பிலான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை நடைபெற்ற வாதத்தின்போது, திடீரென ராசா தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

2ஜி வழக்கில் பிரதமரையோ, ப.சிதம்பரத்தையோ தாம் குற்றம்சாட்டவில்லை என்றும், அவர்களை சிக்கவைக்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கருதியதில்லை என்றும், ஊடகங்கள்தான் தவறாக செய்திவெளியிட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே சமயம் ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் வாதத்தில் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தின்போது, ராசா மீண்டும் பிரதமர் மீது குற்றம்சாட்டினார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வதற்காக அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் தவறிவிட்டார்.

2ஜி கோப்பை நான் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன்.அதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும்.

பிரதமர் எனக்கு மேலானவர்.அவர் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்திருக்க வேண்டும்.

இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்றும் ராசா தனது வாதத்தின்போது மேலும் கூறினார்.

Tuesday, July 26, 2011

> நமிதா கோபம் - சோனா நடிகையே இல்லை.

நமிதா இப்போது தமிழில் நடிப்பதில்லை. என்றாலும் அவரை வைத்து படங்களில் வசனங்கள் எழுதுகிறார்கள், காட்சிகள் அமைக்கிறார்கள். கோ படத்தில் கவர்ச்சியாக உடையணிந்து இரட்டை அர்த்த வசனம் பேசி நமிதாவைப் போல் மச்சான்ஸ் என்று வசனம் பேசி நடித்தார் சோனா. இந்தக் காட்சி அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. கவர்ச்சி நடிகை என்றாலும் இதுபோன்ற அருவருப்பான காட்சிகளில் எதுவும் நமிதா நடித்ததில்லை.

இது குறித்து நமிதாவிடம் கேட்ட போது பதில் பேசாமல் ஒதுங்கிக் கொண்டார். அவரே இப்போது இந்த‌க் காட்சி குறித்தும் சோனா குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை முழுவதும் நமிதாவின் கோபம் கொப்பளிக்கிறது.

கோ படத்தில் சோனா நடித்தது ஒரு துக்கடா காட்சி. ஆபாச உடையில் அதைவிட ஆபாச உடல் மொழியுடன் இரட்டை அர்த்த வசனம் பேசி நடிப்பின் அடிப்படையையே கொச்சைப்படுத்தியிருந்தார். இந்தக் காட்சியின் ஆபாசத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்துக்கே முழு பங்கு என்பதையும் தெ‌ரிவிக்க வேண்டும்.

இந்தக் காட்சியில் நடித்ததை ஏதோ பெ‌ரிய விஷயம் போல் சோனா மீடியாக்கில் தெ‌ரிவித்து வந்தார். உச்சகட்டமாக, இந்தக் காட்சிக்காக நமிதா என்னை பாராட்டியிருக்க வேண்டும், நான் எஸ்எம்எஸ் அனுப்பியும் அவர் பதில் தெ‌ரிவிக்கவில்லை என்று பேட்டிளித்தார். இதுதான் நமிதாவை கோபப்படுத்தியது.

சோனா நடிகையே இல்லை, அவருக்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கொந்தளித்துப் போய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நியாயமாக கே.வி.ஆனந்த்தான் நமிதாவின் கோபத்துக்கு பதிலளிக்க வேண்டும்.

> பரபரப்பில் ஹீரோக்கள் பாரதிராஜா படம்.

இன்னும் இருபது வருடங்களுக்கு பேசப்படும் படமாக எனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் இருக்கும் என அறிவித்திருக்கிறார் பாரதிராஜா. பல வருட உழைப்பை இந்தப் படத்தின் திரைக்கதைக்காக அவர் செலவிட்டுள்ளார்.

தனது சொந்த பூமியில் இந்தப் படத்தை இமயம் இயக்குகிறார். படத்துக்காக லொகேஷன்களை அவர் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

பாரதிராஜா படத்தில் அறிமுகமாவது கௌரவம். அவர் படத்தில் நடிப்பது பெருமை. அன்னக்கொடியும் கொடிவீரனும் இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு சவாலாக இருக்கும் என்று அவரே தெ‌ரிவித்திருப்பதால் அதில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்குமே ஆவல் உள்ளது. படத்தின் பெயரை வெளியிட்ட பாரதிராஜா இதுவரை நடிக்கப் போவது யார் என்று சொல்லவில்லை. இதனால் நமக்கும் வாய்ப்பு இருக்கும் என்று முந்தாநாள் மேக்கப் டெஸ்ட் போட்ட கத்துக் குட்டியும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

> தாப்ஸி இயக்குனருக்கு சொன்ன நன்றி.

தாப்ஸி இதுவரை ஆறு படங்களில் நடித்திருக்கிறார். முதல் ஐந்து படங்களில் கிடைக்காத கௌரவம் ஆறாவது படத்தில் கிடைத்திருக்கிறது.

வேறொன்றுமில்லை. சமீபத்தில் தாப்ஸி, ‌ஜீவா நடித்த வந்தான் வென்றான் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டதல்லவா. இந்தப் படத்தின் பாடல் சிடிகளில் தாப்ஸியின் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை என்னுடைய படத்தை நான் நடித்தப் படங்களின் ஆடியோ சிடிகளில் வெளியிட்டதில்லை, இதுதான் முதல்முறை, தாங்க்ஸ் கண்ணன் என்று வந்தான் வென்றான் படத்தின் இயக்குனர் கண்ணனுக்கு நன்றி தெ‌ரிவித்துள்ளார் தாப்ஸி.

எழுபது எம்எம் ஸ்கி‌‌ரீனில் வந்தாலும் உள்ளங்கை சிடிக்கும் மனசு அலைபாயதான் செய்யுது.

> ரஹ்மானும் ர‌ஜினியும் - வேகம் நல்ல சகுனம்.

ரஹ்மானின் கால்ஷீட்டுக்காக மற்றவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ர‌ஜினி ஸ்டைலே தனி. இதோ வருகிறேன் என்று செய்தி அனுப்பிவிட்டு பின்னாலேயே கிளம்பி வருவார். எத்தனை பிஸி என்றாலும் ரஹ்மானால் மறுக்க முடியாது. இதுவரை மறுத்ததுமில்லை.

ராணா படத்தைப் பொறுத்தவரை நான்கு டியூன்கள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறார் ரஹ்மான். பொதுவாக படப்பிடிப்பு தொடங்கி பாதி முடிந்த பிறகுதான் கம்போஸிங்கிலேயே உட்கார்வார். ராணாவுக்கு அப்படியே நேரெதிர். நான்கு டியூன்கள் தயார். ர‌ஜினி ஓகே சொன்னால் அடுத்த டியூனுக்கு போய்விடுவார் இசைப்புயல்.

ர‌ஜினி எல்லா வகையிலும் தனக்கு ஸ்பெஷல் என்றும், அவ‌ரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் தெ‌ரிவித்திருக்கிறார் ரஹ்மான்.

தடைபட்டு நிற்கும் ராணாவுக்கு இசைப்புயலின் இந்த வேகம் நல்ல சகுனம் என்று மகிழந்து போயிருக்கிறது ராணா யூனிட்.

Monday, July 25, 2011

> அ‌ஜ்மல் நட்சத்திர பேட்டி - ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம்.

அஞ்சாதேயில் அறிமுகமான அ‌ஜ்மல் இப்போது அனைவரும் அறிந்த நடிகர். கோ அவரது சினிமா க்ராஃபை உயர்த்தியிருக்கிறது. தெலுங்கிலும் இந்தப் படம் அழுத்தமான அறிமுகத்தை அ‌ஜ்மலுக்கு தந்திருக்கிறது. அவருடனான உரையாடலிலிருந்து...

ஒரு மருத்துவரான நீங்கள் சினிமாவை தேர்வு செய்தது எப்படி?

சின்ன வயசிலிருந்தே நடிகராக வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. ஆனால் அப்பாவுக்கு நான் டாக்டராகவோ, இன்‌ஜினியராகவோ ஆகணுங்கிற பிடிவாதம் இருந்தது. என்னுடைய கசின்ஸ் எல்லோருமே வெல் எஜுகேட்டட். டாக்டர், இன்‌ஜினியர்னு பெ‌ரிய பொசிஸன்ல இருக்காங்க. அப்பாவோட ஆசையை நிறைவேற்ற நான் டாக்டருக்குப் படித்தேன். இப்போ என் விருப்பத்துக்காக சினிமாவில் நடிக்கிறேன்.

கேரளாவில் நிறைய மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் போது எதற்கு உக்ரைன் நாட்டில் எம்பிபிஎஸ் படித்தீர்கள்?

என்னுடைய இன்டர்மீடியட்டை - ப்ளஸ் டூ - முடித்த நேரம் ஆக்சிடெண்டில் கால் எலும்பு முறிஞ்சிடுச்சி. அதனால் கேரளாவில் அப்ளை பண்ண முடியாமப் போச்சு. அந்த நேரத்தில் என்னுடைய ஃப்ரெண்ட் உக்ரைன் நாட்டிலுள்ள மெடிக்கல் காலேஜுக்கு அப்ளை பண்ணியிருந்தான். ச‌ரி, நாமும் அங்கே அப்ளை பண்ணலாம்னு பண்ணினேன். சீட் கிடைச்சிடுச்சி.

மெடிக்கல் படிப்பு நடிப்புக்கு தடையா இருந்திச்சா?

இல்லை. படிக்கிறப்போ நான் மிஸ்டர் ஹேண்ட்ஸம் ஃபோஸாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நிறைய விளம்பரங்களில் நடிச்சேன். இந்தியாவில் ரேமண்ட் விளம்பரத்தில் என்னை நீங்க பார்த்திருக்கலாம். மாடலிங்கும் செய்தேன்.

சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

படிப்பு முடிந்த பிறகு கொஞ்ச காலம் மும்பையில் நடிக்க ட்ரை பண்ணினேன். சான்ஸ் ‌கிடைக்கலை. மும்பையிலிருந்து கேரளா வரும்போது ஃபிளைட்டில் புரொடியூசர் ஒருத்தரை மீட் பண்ணுனேன். அவர் என்னுடைய ஃபோட்டோஸை வாங்கிக் கிட்டார். கேரளா வந்த கொஞ்ச நாள்ல இயக்குனர் உதயன் அனந்தனிடமிருந்து ஃபோன் வந்தது. அவரோட படத்தில் அறிமுகமானேன்.

மலையாள சினிமா அதன் நிறத்தை இழந்துவிட்டதாகவும், அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நீங்கள் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தீர்கள்...?

உண்மைதான். ஒருகாலத்தில் ப‌ரிசோதனை முயற்சிப் படங்கள் மலையாளத்தில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. இப்போது கமர்ஷியலுக்கு அவர்கள் மாறிவிட்டார்கள். தமிழில்தான் இப்போது வெரைட்டியான படங்கள் வருகின்றன.

மிஷ்கின், கே.வி.ஆனந்த் என்ற இருவேறு இயக்குனர்களுடன் பணிபு‌ரிந்திருக்கிறீர்கள்...?

மிஷ்கின் என்னுடைய பிக் பிரதர். நடிப்பு பற்றி பல விஷயங்கள் எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். கே.வி.ஆனந்த் பெர்பெக்சனிஸ்ட். தான் விரும்பியது கிடைக்கும் வரை பொறுமையாக சொல்லித் தருவார். அவரைப் போல் ஒரு பொறுமைசாலியை நான் பார்த்தில்லை.

பிரசன்னா, நரேன், ‌ஜீவா... இவர்கள் மூவ‌ரில் யாருடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புறீங்க?

பிரசன்னாவும், ‌ஜீவாவும் என்னை விட சீனியர்ஸ். வொர்க்கிங் ஸ்பாட்டில் எனக்கு ‌நிறைய சொல்லித் தந்திருக்காங்க. நரேன் என்னுடைய ஃப்ரெண்ட். ஆனால் ஸ்கி‌ரிப்ட் என்ன கேட்குதே அதன்படி நடிக்கதான் எனக்கு விருப்பம். என்னுடைய விருப்பத்தைவிட ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம்.

அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

கதிர்வேல் படப்பிடிப்பு இப்போது முடிஞ்சிடுச்சி. அடுத்து கருப்பம்பட்டியில் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். பிரபு என்பவர் இயக்குகிறார். இதில் ஃபிரெஞச் நாட்டைச் சேர்ந்தவர் எனக்கு ஜோடியாக நடிக்கிறார்.

> சினிமாக்காரர்கள் சித்து விளையாட்டில்.

தெய்வத்திருமகள் வெளியான அதே நாள் அப்படத்தில் நடித்த அமலாபால் சிந்து என்ற சினிமாப்பட போஸ்ட‌ரில் சி‌ரித்துக்கொண்டிருந்தார். ஏறக்குறைய காலைக்காட்சிப் படங்களின் தரத்தில் அந்த போஸ்டர் டிஸைன் செய்யப்பட்டிருந்தது. அமலா பால் எப்போது சிந்து என்ற படத்தில் நடித்தார்? திரையுலகைச் சார்ந்தவர்கள் மனதில் எழுந்த கேள்வி இது. சாதாரண ரசிகனின் மனதில் எழுந்த சந்தேகம் வேறு. அமலாபால் எப்போது ஏ படத்தில் நடித்தார்? ஒருவேளை ரதிநிர்வேதம் ஸ்வேதா மேனன் போன்று மலையாளத்தில் ஏதேனும் படத்தில் நடித்திருப்பாரோ?

சென்னையில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் சிந்துவை திரையிட்டிருந்தனர். ஏதோ புதிய படம் என்று இளைஞர்கள் கூட்டம் திரையரங்கை மொய்த்ததை காண முடிந்தது. அமலாபாலின் ரசிகர்களும் அந்தக் கூட்டத்தில் இருக்கலாம். இளமை ததும்பும் காட்சிகளுக்காக திரண்டவர்களும் இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்திருக்கும். சிந்து என்ற பெய‌ரில் அவர்கள் திரையிட்டப் படம் சாமி இயக்கத்தில் அமலாபால் நடித்த சிந்து சமவெளி.

சாமிக்கு கனத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்த இந்தப் படத்தில் மாமனாருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சியில் அமலாபால் நடித்திருந்தார். அப்போது அவரது பெயர் அனகா. படம் எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்க கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொடுத்ததால் அனகா என்ற அவரது பெயரையே மாற்ற வேண்டி வந்தது. அனகா அமலாபாலானார்.

குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் கேள்விகள் அமலாபாலை ரொம்பவே நோகடித்தது. இப்படியொரு கேரக்ட‌ரில் ஏன் நடித்தாய் என்று சுற்றியிருப்பவர்கள் கேட்பதாக பேட்டியில் கதறினார். சில இடங்களில் கண்ணீரும் சிந்தியதாக கேள்வி. நல்லவேளையாக மைனா அவரை காப்பாற்றியது. அதன் பிறகு அமலாபாலின் கெத்தும் முறுக்கும் அனைவருக்கும் தெ‌ரிந்ததே. விக்ரம், ஆர்யா என்று அமலாபாலின் டய‌ரியில் முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து இடம் பிடிக்கிறார்கள்.

அமலாபாலின் அனகா எபிசோடை ஜனங்கள் மறந்திருந்த நேரத்தில்தான் சிந்து சமவெளி சிந்து என்ற பெய‌ரில் வெளியாகியிருக்கிறது. அமலாபாலுக்கு இது பேரதிர்ச்சி. என்னுடைய பெயரை கெடுக்கிறார்கள் என்று மூக்கு சிந்துகிறார். அமலாபாலுடன் சேர்ந்து கர்சீப்பை நனைப்பதல்ல நமது நோக்கம். ஏற்கனவே வெளியான படத்தை வேறு பெய‌‌ரில் வெளியிட்டு எப்படி ரசிகர்களை ஏமாற்றலாம் என்பதே. சிந்து சமவெளி படத்தை சிந்து என்ற பெய‌ரில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். அது தெ‌ரிந்தே சிந்து என்ற பெ‌ரிய எழுத்தின் அருகில் கண்ணுக்கு தெ‌ரியாத அளவில் சமவெளி என எழுதியிருக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நக்கீரனின் நெற்றிக்கண் இருந்தாலும் சமவெளியை கண்டுபிடிக்க முடியாது. அப்படியொரு தமிழ், ஆங்கில காம்பினேஷன்.

இதுபோன்ற மோசடிகள் திரையுலகில் நடப்பது முதல் முறையல்ல. பத்து வருடத்துக்கு முந்தைய ஜாக்கிசானின் படமாக இருக்கும். ஆனால் போஸ்ட‌ரில் முறைத்துக் கொண்டிருப்பவர் முந்தாநாள் ஜாக்கிசானாக இருப்பார். அதிரடி வீரன் என்றோ அசகாய சூரன் என்றோ தமிழில் பெயர் இருப்பதால் ஜாக்கிசானால்கூட அது தனது பழைய படம் என்பதை கண்டு பிடிக்க முடியாது. பத்துமுறை பார்த்த படத்தையே புதிய படம் என்று நினைத்து ஏமாந்து போவான் ரசிகன்.

இந்தவகை மோசடிகள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ளனவா என்பது தெ‌ரியவில்லை. தமிழில் இதுபோன்ற மோசடிகள் அதிகம். இதுகுறித்து யாரும் இதுவரை புகார் தெ‌ரிவித்ததாகவும் செய்தியில்லை.

பொழுதுபோக்குக்கான விஷயங்கள் அதிக‌ரித்து வருருகின்றன. அதனால் திரையரங்குகளுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கிறது. இதுபோன்ற சூழலில் திரையரங்குக்கு வருகிற குறைவான ரசிகர்களும் ஏமாற்றப்பட்டால் அது திரையுலகைதான் முதலில் பாதிக்கும். அவர்கள் மீதான கொஞ்ச நஞ்ச ம‌ரியாதையையும் காலி செய்துவிடும். சிந்துவுக்கு எதிரான முதல் குரல் திரையுலகிலிருந்து ஒலிப்பதுதான் முறையாகவும், ச‌ரியானதாகவும் இருக்கும்.

Sunday, July 24, 2011

> சீயானின் சுற்றுப் பயணம் படப்பிடிப்பு தேதி அனுமதிக்குமா?

வந்திட்டு ஓடிட்டாரு என்று தெய்வத்திருமகளின் தெலுங்கு டப்பிங் உ‌ரிமையை வாங்கியவர்கள் புலம்பிக் கொண்டிருக்க, சென்னையில் தொடங்கிய ரசிகர்கள் சந்திப்பை தென் தமிழ்நாடு முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

பல கோடி கொடுத்து இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உ‌ரிமையை வாங்கினார்களாம். படத்தை புரமோட் செய்ய ஆந்திராவில் சில நாட்களாவது சீயான் இருப்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஹைதராபாத் சென்று ஒரே நாளில் திரும்பிவிட்டார். ஆந்திராவில் இருந்தால் அன்னை தமிழகத்தை யார் பார்ப்பது?

படம் வெளியான முதல்நாள் சென்னை ரசிகர்களை திரையரங்கில் சந்தித்த சீயான் திருச்சி சென்று ரசிகர்களை சந்தித்தார். தமிழகம் முழுக்க போகும் ஆவல் அவருக்கு இருக்கிறது. படப்பிடிப்பு தேதி அனுமதிக்குமா என்றுதான் தெ‌ரியவில்லை.

> நழுவுற மீனாக விக்ரம் பற்றி விஷால்.

இந்த வருட தேசிய விருது விஷாலுக்கா, விக்ரமுக்கா? ஏதோ இவர்கள் நடித்த படம் மட்டுமே திரைக்கு வந்திருப்பது போல் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மீடியாக்கள் வேறு தங்கள் பங்குக்கு கருத்துக் கணிப்பு நடத்துகின்றன.

இப்படியொரு சந்தர்ப்பத்தில் விஷாலை சந்திக்க நேர்ந்தால் விடுவார்களா? தெய்வத்திருமகள் வரும் வரை உங்களுக்குதான் தேசிய விருது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது விக்ரமும் சேர்ந்திருக்கிறாரே என்று கோர்த்துவிட்டார்கள் நிருபர்கள். விஷால் வெகு நிதானம். அவர் பெ‌ரிய நடிகர். என்னைவிட சீனியர். அவருக்கு கிடைச்சாலும் சந்தோஷம்தான் என்றார் நழுவுற மீனாக.

உங்ககிட்ட போராட்ட மனசு இல்லியே பாஸ்.

> ஹர்பஜன் தோனி சர்ச்சை விளம்பரம் Videos !!.

தோனி நடித்த மதுபான விளம்பரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் தோனி, ஹர்பஜன் இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு மதுபான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இதில் பிரபல தொழிலதிபர், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மதுபான விளம்பரத்தில் தோனி நடித்துள்ளார். இந்த விளம்பரம் ஹர்பஜன், அவரது குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தை கிண்டல் செய்வது போல அமைந்துள்ளது.
இதையடுத்து ஹர்பஜன் சிங் சார்பில் அவரது தாயார் அவ்தார் சிங், விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Dhoni Controversial McDowells Platinum Ad

Royal Stag Bhajji Have a made it Large Harbhajan Sing

இதில்,”"மதுபான விளம்பரத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குலையும். தவிர, எங்களது சமூகத்தையும் கிண்டல் செய்கிறது. இதனால் இந்த விளம்பரம் குறித்து ஹர்பஜன் சிங் குடும்பத்தினரிடம், அனைத்து பத்திரிகைகள் மற்றும் “டிவி’க்களில், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விளம்பரத்தை மூன்று நாட்களில் திரும்பபெற வேண்டும். தவிர, நோட்டீஸ் அனுப்புவதற்கு செலவான ஒரு லட்ச ரூபாயையும், இழப்பீடாக தரவேண்டும்,” என, கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் வக்கீல் வெளியிட்ட செய்தியில்,”" நாங்கள் அனுப்பிய நோட்டீஸ், உங்களது தவறுகளை சரிசெய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் குறிப்பிட்டபடி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கிரிமினல் சட்டப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 23, 2011

> எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது K.S ரவிக்குமா‌ர்.

ராணா பற்றி சின்னதாக செய்தி வந்தாலே அடித்துப் பிடித்து அறிக்கைவிடுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இடியே விழுந்தாலும் கலங்காத மிஸ்டர் கூலுக்கு என்னாச்சு?

ராணா பெயரை சென்டிமெண்ட் கருதி மாற்றப் போவதாக சின்னதாகதான் செய்தி போட்டார்கள். பி‌ரிண்ட் செய்த மை உலர்வதற்குள் ரவிக்குமா‌ரிடமிருந்து மறுப்பு. பெயரை மாற்றும் ஐடியாவெல்லாம் இல்லை என்றிருக்கிறார் கறாராக. செப்டம்ப‌ரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் அழுத்தமாக கூறி வருகிறார்கள்.

எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது.

> சர்ப்ரைஸ் of மங்காத்தா.

ர‌ஜினி படம் பற்றிய தகவல் நாளுக்கு ஒன்றாக வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தும். மங்காத்தா அதை மிஞ்சிவிட்டது. நாளைக்கு இரண்டு செய்திகள். உபயம் ட்விட்டர்.

மங்காத்தா எப்போது வெளியாகும் என்பது முடிவாகவில்லை. ஆனால் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று இரண்டு தகவல்கள். ஒன்று, ஜார்‌ஜ் குளூனியின் நரைத்த முடி கெட்டப்பில் படம் முழுக்க வரும் அ‌ஜீத், படத்தின் இறுதியில் ஸ்மார்ட் கெட்டப்பில் நரைமுடியில்லாமல் தோன்றுகிறார்.

இரண்டாவது இன்னும் புதிது. ஜாக்கிசான் படங்களில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸியமான விஷயங்களை தொகுத்து அளிப்பார்களே... அதேமாதி‌ரி மங்காத்தா படப்பிடிப்பில் நடந்தவற்றை தொகுத்து அளிக்கிறாராம் வெங்கட்பிரபு.

ஃபுல் மீல்ஸுக்கு அப்புறம் பீடா... ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Friday, July 22, 2011

> பெயர் மாறுகிறது ராணா ?

சென்டிமெண்டில் அதிக நம்பிக்கை உள்ளவர் ர‌ஜினி. ஒருமுறை வேண்டாம் என்று மனதில் தோன்றிவிட்டால் பிறகு அதை அவர் தொடுவதில்லை.

ஜக்குபாய் கதை விவாதம் முடிந்து, விளம்பரமும் கொடுத்த பிறகு, ஜக்குபாய் நமக்கு ச‌ரிவராது என்று ர‌ஜினி முடிவெடுத்தார். அந்த முடிவு இறுதி வரை மாறவில்லை. அவர் மனசுக்குள் மணி அடித்தால் மட்டுமே எந்த விஷயத்தையும் செயல்படுத்துவார்.

ராணா படத்தின் முதல்நாள் ர‌ஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றதால் படத்தின் பெயரை மாற்றலாமா என ர‌ஜினியை சார்ந்தவர்கள் யோசித்து வருகின்றனர். மேலும் பெயர் மாறும் போது படத்துக்கு ஒரு புதிய முகமும் கிடைக்கும்.

விரைவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Thursday, July 21, 2011

> தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம்

எதிர்பார்த்ததைப் போல் விக்ரமின் தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அவன் இவன் படத்தின் கலெக்சன் நான்காவது வாரமே பெ‌ரிய ச‌ரிவை கண்டிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 4.87 கோடிகள்.

ஹ‌ரியின் கமர்ஷியல் ரூட் இந்தமுறை தவறாகியிருக்கிறது. முதல் வார இறுதியில் 89 லட்சங்களுக்கு மேல் வசூலித்த ஹ‌ரியின் வேங்கை இரண்டாவது வார இறுதியில் அதாவது சென்ற வார இறுதியில் 30.47 லட்சங்களாக கீழிறங்கியிருக்கிறது. இதன் பத்து நாள் சென்னை வசூல் 1.93 கோடி.

விக்ரமின் தெய்வத்திருமகள் ஆர்ட் ஃபிலிம் என்ற தப்பான எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் விதைத்திருந்தது. பொழுதுபோக்கை விரும்புகிறவர்களுக்கு இது ஏமாற்றமான விஷயமே. இருந்தும் முதல் மூன்று தினங்களில் இப்படம் 80.4 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தைப் பற்றி நேர்மறை விமர்சனங்கள் வரும் நாட்களில் வசூலை அதிகப்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம்.

> இந்திக்கு செல்லும் தமன்னா ?

தென்னிந்திய படங்களின் மீதிருந்த இந்தி நடிகர்களின் மோகம் அப்படியே நடிகைகளின் மீதும் தாவியிருக்கிறது. தமன்னாவும் விரைவில் இந்தியில் நடிப்பதற்கான அறிகுறிகள் தெ‌ரிகின்றன.

சிங்கம் படத்தின் இந்தி ‌ரீமேக்கில் நடித்திருக்கும் அஜய்தேவ்கான் தெலுங்கில் வெளியான ம‌ரியாதை ராமனா படத்தில் மனதை பறிகொடுத்திருக்கிறார். இந்தியில் இந்தப் படத்தை ‌ரீமேக் செய்யும் எண்ணம் அவருக்கு இருக்கிறது.


இந்த ‌ரீமேக்கில் தமன்னா அவர் ஜோடியாக நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

ராஜமௌலி இயக்கிய ம‌ரியாதை ராமனா படம் ஹாலிவுட்டில் வெளியான மவுனப் படம் ஒன்றின் காப்பி என்பது பலரும் அறியாதது.

Tuesday, July 19, 2011

> திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது.

அடுத்தவன் படுக்கையறையை மோப்பம் பிடித்தே பிரபலமாக நினைக்கும் சூ‌ரிய தொலைக்காட்சிக்கு இன்னும் புத்தி வந்ததாக‌த் தெ‌ரியவில்லை.

தனக்கு யார் பகையோ அவர்களை தனது மீடியா பவரால் கீழ்மைப்படுத்துவதை நெடுங்காலமாக சூ‌ரிய தொலைக்காட்சி செய்து வருகிறது. கற்பு சர்சசையில் அந்த நடிகையை கதறவிட்டவர்களும் இவர்கள்தான். இப்போது இருவரும் ஒன்றுக்குள் ஒன்று என்பது வேறு விஷயம்.

சட்டமன்ற தேர்தலில் சூ‌ரிய குடும்ப‌ம் படுதோல்வியடைய செந்தமிழனும் ஒரு காரணம். அந்த வன்மத்தில், பார்ப்பவரை எல்லாம் காதலிச்சு ஏமாற்றினார் என்று புகார் கொடுக்கும் நடிகைக்கு ஆதரவாக செந்தமிழன் மீது சேறு அடிக்கும் பணியை தொலைக்காட்சி தொடங்கியிருக்கிறது. திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது போலிருக்கிறது.

> விஜய் சேலத்தில் சில சீட்களாவது பிடிப்பார்.

ஊருல உள்ள பாதி பேரை விஜய் மக்கள் இயக்கத்துல சேருங்க... அம்மாகிட்ட சொல்லி எலக்சன்ல நிற்க சீட் வாங்கி‌த் தர்றேன் என்று வருகிற பஞ்சாயத்து எலெக்சனுக்கு இப்போதே பந்தக்கால் போட்டிருக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். உள்ளாட்சி தேர்தல்தான் இவர்களின் முதல் இலக்கு. இதிலிருந்துதான் விஜயகாந்தே விஸ்வரூபமெடுத்தார்.

மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம்தோறும் செல்வது, ந‌ற்பணிகள் செய்வது, இயக்க‌த் தொண்டர்களை உற்சாகப்படுத்துவது என்று கொள்கை பி‌ரித்திருக்கிறார்கள். நேற்றைய விசிட் சேலம். சும்மாவே சேலம் மக்கள் சினிமா ப்‌ரியர்கள். விஜய் வந்தால்...? தடியடி நடத்திதான் அவர்களை கலைக்க வேண்டியிருந்தது. இந்த களேபரத்துக்கு நடுவில் பல லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் விஜய்.

சேலத்தில் சில சீட்களாவது பிடிப்பார்கள் என்றுதான் தெ‌ரிகிறது.

> ர‌ஜினி குரு‌ஜி விழாவில்.

சிங்கப்பூ‌ரில் சிகிச்சையை முடித்து சென்னை திரும்பியிருக்கும் ர‌ஜினி விரைவில் ஒரு முக்கியமான விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆச்ச‌ரியமான தகவல் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அடித்துச் சொல்கிறார்கள், ர‌ஜினி கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்.

ர‌ஜினியின் ஆன்மிக ஈடுபாடு அனைவரும் அறிந்தது. கோயம்புத்தூரில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சதாபிஷேகம் இம்மாதம் 20-22 மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. இதில் ர‌ஜினி கலந்து கொள்வார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெ‌ரிவித்துள்ளனர். மேலும் சுவாமியுடனான தனது ஆன்மிக அனுபவங்களை ர‌ஜினி பகிர்ந்து கொள்வார் எனவும் அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

ர‌ஜினியின் இன்றைய நிலையில் அவர் கோயம்புத்தூர் விழாவுக்கு செல்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

> அ‌‌ஜீத் 50வது படம் ஐயம் ஹேப்பி.

அ‌‌ஜீத்துக்கு இத்தனை திருப்தியுடன் ஒரு படம் இதுவரை அமைந்திருக்குமா தெ‌ரியாது. மங்காத்தா குறித்த பேச்சில் திருப்தி வழிகிறது. ஒவ்வொரு வார்‌த்தையின் இறுதி ஐயம் ஹேப்பி என்பதாகவே இருக்கிறது.

மங்காத்தா அ‌‌ஜீத்தின் 50வது படம். 50வது படமும், 100வது படமும் காலை வாரும் என்பது கோடம்பாக்க சென்டிமெண்ட். விதிவிலக்கு எம்‌ஜிஆரும், விஜயகாந்தும். இந்த வ‌ரிசையில் அ‌‌ஜீத்தையும் மங்காத்தா இடம்பெற வைக்கும்.

மங்காத்தாவில் தனது கதாபாத்திரம் குறித்து அ‌‌ஜீத் முதல் முறையாக பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் நான் கெட்டவனாக வருகிறேன். மொத்தம் 5 கெட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். அவர்களில் நான்தான் ரொம்ப கெட்டவன். நான் வொர்க் பண்ணியதில் வெங்கட்பிரபுவின் டெடிகேஷன் யா‌ரிடமும் பார்த்தில்லை. அவரது டெடிகேஷன் காரணமாக மங்காத்தா சிறப்பாக வந்திருக்கிறது ஐயம் ஹேப்பி.

யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Monday, July 18, 2011

> ஆட்சி மாறினால் என்னவெல்லாம் மாறுகிறது.

இன்றைய தேதியில் பிஸியான நடிகர் என்றால் அது சந்தானம்தான். வருகிற படங்களில் பாதி படங்கள் இவரை நம்பியே வருகின்றன. பிசினஸும் இவரை வைத்தே.

சந்தானம் நடிக்கும் படங்களின் எண்ணைக்கை டஜனை தாண்டும். இவருக்காக காத்திருந்துதான் படப்பிடிப்பையே நடத்துகிறார்கள். உதாரணம் ஒரு கல் கரு கண்ணாடி.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தை ராஜேஷ் எம். இயக்குகிறார். இவ‌ரின் முதலிரண்டு படங்களிலும் ஹீரோ அளவுக்கு சந்தானத்தின் ரோலும் இருக்கும். ஒரு கல் ஒரு கண்ணாடி மூன்றாவது படம். இதிலும் ஹீரோவுக்கு இணையான ரோல்.

எப்போதோ பூசணிக்காய் உடைத்திருக்க வேண்டிய படம் சந்தானத்தின் ஆப்சென்டால் அரை கிணறே தாண்டியிருக்கிறது. கழக ஆட்சியின் போது படம் தொடங்கப்பட்ட நேரம் கால்ஷீட்டை அள்ளித் தந்தார். இப்போது கழகம் கம்பிக்குப் பின்னால் சந்தானமும் கால்ஷீட்டில் கறாராகவிட்டார். மற்ற படங்களுக்கு கொடுக்கும் ம‌ரியாதைதான் இதற்கும்.

ம்... ஆட்சி மாறினால் என்னவெல்லாம் மாறுகிறது.

> நண்பன் படப்பிடிப்பு சென்னையில்.

ஷங்கரின் மிக வேகமான படம் நண்பன். இதுதான் அவரது முதல் ரீமேக். முதல்வனை இந்தியில் ரீமேக் செய்திருந்தாலும் இன்னொருவரின் படத்தை ரீமேக் செய்வது இதுதான் முதல்முறை.

ஊட்யில் தொடங்கி வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து சென்னையிலும் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கினார். ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் படமானது கேயம்பேட்டிலுள்ள வாட்டர் டேங்க் அமைந்துள்ள பகுதியில். இங்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் இயங்கி வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் சிலவற்றை ஷங்கர் இங்கு படமாக்கினார்.

தீபாவளிக்கு நண்பன் வெளிவருவது கடினம் என்பதே யூளிட்டின் பேச்சு. நண்பன் வெளியீடு கிறிஸ்துமஸ் இல்லை பொங்கலா? ஷங்கரின் பதிலுக்கு திரையுலகம் காத்திருக்கிறது.

> விஜய்யும் சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்க அதிக சாத்தியங்கள்

காவலன் படத்தை வெளிவர விடாமல் சன் குழுமம் ஏற்படுத்திய பிரச்சனைகள் குறித்து நடிகர் விஜய் முன்பே ‌வி‌ரிவாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்கள் ஆட்சி என்பதால் அது பேட்டியுடன் முடிந்து போனது. ஆனால் இன்று அவர்களே அடுக்கடுக்கான புகார்களின் பே‌ரில் உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

காவலனில் ஏற்பட்ட இழப்புக்கும், அவமானத்துக்கும் விஜய் பழி வாங்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின், நலம் விரும்பிகளின் விருப்பம். விஜய்யிடமும் அந்த கோபம் இருப்பதாக சொல்கிறார்கள். காவலன் படத்துக்கு நெருக்கடி கொடுத்தது, கடைசிநேர நெருக்கடியால் பல கோடி ரூபாய் ஓபனிங் இழப்பு ஏற்பட்டது இவையெல்லாம் விஜய்யின் மனதிலும் வடுவாக உள்ளது.

காவலன் சார்பில் விஜய்யும் சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்க அதிக சாத்தியங்கள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரி விக்கின்றன. சன் பிக்சர்ஸ் இதுவரை சந்தித்தது தலைவலி என்றால் இனி சந்திக்கப் போவது திருகுவலி என்கிறார்கள்.

Friday, July 15, 2011

> காஜல் அகர்வால் ஜோடி மகேஷ்பாபு.?

எந்த நடிகைக்கு எதிராக திரையுலகம் போர்க்கொடி தூக்குகிறதோ அந்த நடிகைக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இந்த விதிமீறல் அசின் விஷயத்தில் உண்மையானதை கண்டோம். இப்போது காஜல் அகர்வால்.

தென்னிந்திய சினிமாவை தரக்குறைவாக விமர்சித்த காஜல் அகர்வால் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்திலும், ஆந்திராவிலும் உ‌ரிமைக் குரல்கள் எழுந்தன. ஆனால் அதில் எந்த பயனுமில்லை. தமிழில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பு‌ரி ஜெகன்நாத் இந்தி மற்றும் தெலுங்கில் பிசினஸ்மேன் என்ற படத்தை இயக்குகிறார். இந்தியில் அபிஷேக்பச்சனும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

காஜல் இன்னும் மோசமாக திட்டியிருந்தால் மேலும் சில வாய்ப்புகள் கிடைத்திருக்குமோ என்னவோ.

Thursday, July 14, 2011

> ஸ்ரேயா நயன்தாராவுக்குப் பதில்?

ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சிம்பு நயன்தாராவிடம் கேட்டது இந்நேரம் தமிழகமெங்கும் தெ‌ரிந்திருக்கும். ஒஸ்தியின் ஒ‌ரி‌ஜினல் தபாங்கில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது. குத்துப் பாடல்.

ஆட முடியாது என்று கறாராக மறுத்திருக்கிறார் நயன்தாரா. தாரா இல்லாவிட்டால் வீணா விடமுடியுமா? அவருக்குப் பதில் ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆடுவது ஸ்ரேயாவுக்கு புதிதல்ல.

வடிவேலின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்துக்காக அவருடன் ஒரு பாடலுக்கு ஆடினார். ஸ்ரேயாவுக்காக பல லட்சங்கள் வா‌ரியிறைத்தார் வடிவேலு. வேறொன்றுமில்லை ஆடுவதற்குதான். பணம் கிடைத்தது... ஆனால் அ‌ஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதனால் ஸ்ரேயாவுக்கு பறிபோனது.

சிம்புவுடன் ஆடுவதால் அப்படியொரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஸ்ரேயா கண்டிப்பாக ஆடுவார் என்றே தோன்றுகிறது.

> UTVயின் விசாலமான வியாபாரம்.

இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யுடிவி நிறுவனம் தனது கவனத்தை தமிழ் பக்கமும் திருப்பியுள்ளது. பட விநியோகம், தயா‌ரிப்பு என இந்நிறுவனம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

தெய்வத்திருமகள் படத்தை இந்நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் சேரன் தயா‌ரித்து நடித்திருக்கும் முரண் படத்தின் விநியோக உ‌ரிமையும் இப்போது இதன் வசமே உள்ளது. லிங்குசாமி இயக்கும் வேட்டை, அவரது திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கும் வழக்கு எண் 18,9, கும்கி ஆகிய படங்களின் உ‌ரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கியுள்ளது. மிஷ்கினின் முகமூடி படத்தின் தயா‌ரிப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.

யுடிவி யின் இந்த விசாலமான வியாபாரம் தமிழ் திரையுலகில் ஏற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

> எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு.

எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர்பார்த்திராத புதிய மாற்றங்களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மார்ச் 20, 2010-இல் ஐஸ்லாந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறித்து இவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அந்த எரிமலை வெடித்து வானில் மிகப்பெரிய் அளவில் சாம்பல் புகையை கக்கி ஐரோப்பா முழுதும் அது பரவிய விதத்தை பிரான்ஸில் உள்ள ஆய்வு நிலையத்திலிருந்து இந்த ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

இந்த சாம்பல் மூலக்கூறுகள் விண்வெளியில் உள்ள மற்ற ரசாயனக் கூறுகளுடன் எவ்வாறு வினையாற்றியுள்ளன என்பதையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

வெடிப்பிலிருந்து கிளம்பிய ரசாயனக்கூறுகளில் பெரும்பாலும் கந்தக அமிலக் கூறுகள் இருந்துள்ளது. கந்தக அமிலக்கூறுகள் மிகப்பெரிய அளவில் விண்வெளியைச் சூழ்ந்தால் அது மேகக்கூட்டத்தை உருவாக்கும் இந்த மேகக்கூட்டம் வானிலையில் தாக்கம் செலுத்தும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

நாம் நினைப்பதைவிட 100மில்லியன் மடங்கு அதிகமாக சாம்பல் புகையை இந்த எரிமலைகள் தோற்றுவிக்கின்றன. இந்த சாம்பல் புகை மண்டலம் விண்வெளியில் குறைந்த உயரத்தில் மேகக்கூட்டங்களை உருவாக்கும் என்று தெரிகிறது.

ஆனால் இதனால் என்னவிதமான வானிலை மாற்றங்கள் விளையும் என்பதை மேலும் ஆய்வுக்குட்படுத்தும்போதுதான் நாம் கண்டறிய இயலும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, July 12, 2011

> சல்மான்கான் ஒஸ்தி விழாவில்?

சல்மான்கானின் தபாங் தமிழ் ‌ரிமேக்கான ஒஸ்தி வேகமாக வளர்ந்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இப்போதே பிரமிப்பாக பேசுகின்றனர்.

ஒஸ்தி தொடக்க விழாவில் சல்மான்கானின் தம்பியும், தபாங் தயா‌ரிப்பாளருமான அர்பாஸ்கான் கலந்து கொண்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்படியும் சல்மான்கானை பங்கு பெற செய்தாக வேண்டும் என விரும்புகிறாராம் சிம்பு. சல்மான் தனது சம்மதத்தை தெ‌ரிவித்தால் விழாவை பிரமாண்டப்படுத்தி அசத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதி பாடவும் செய்திருக்கிறார் சிம்பு.

> திரையரங்கு உ‌ரிமையாளர்களை நஷ்டத்தில் தள்ளிவிட்டது சன் பிக்சர்ஸ் ?

எந்திரன் படம் இந்திய திரையுலகில் 100 கோடி வசூலை கடந்த ஆறு திரைப்படங்களில் ஒன்று. இந்திய அளவில் வசூலில் 3இடியட்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

ஆனால் இந்த லாபத்தை ச‌ரிசமமாகப் பி‌ரித்துக் கொடுக்காமல் திரையரங்கு உ‌ரிமையாளர்களை நஷ்டத்தில் தள்ளிவிட்டது சன் பிக்சர்ஸ் என்ற குற்றச்சாற்று முன்பே எழுந்தது. ஆட்சி மாறியதால் ஆறு பேர் இதனை புகாராகவே போலீஸிடம் தந்திருக்கிறார்கள்.

எந்திரன் மிகப் பெ‌ரிய வெற்றியை பெற்றதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மிகப் பெ‌ரிய தொகைக்கு எந்திரனை வாங்கியதால் பலரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. இதுதான் இப்போது பிரச்சனையை கிளப்பியுள்ளது. இந்த புகார் எந்திரன் வசூல் குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொண்டு வரும் என்கிறார்கள்.

> குமார் சங்ககாரவின் லோர்ட்ஸ் உரை தமிழில் ஒலி வடிவம்.

கடந்த வெள்ளி இரவு வெற்றி FM வானொலியில் ஒலிபரப்பாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்ற குமார் சங்ககாரவின் லோர்ட்ஸ் உரை தமிழில் ஒலி வடிவம்.





வெற்றி FM வானொலியின் அந்த சுட்டி.

நன்றி : வெற்றி F.M, லோஷன், கன்கோன் கோபி, ஷமீல்

Monday, July 11, 2011

> சீக்ரெட் of மங்காத்தா.

மங்காத்தாவில் ஹாலிவுட் நடிகர் ஜார்‌ஜ் குளூனியின் நரைத்த கெட்டப்பில் படம் நெடுக வருகிறார் அ‌ஜீத். இதில் அவருக்கு நெகடிவ் கேரக்டர். அவரை துரத்தும் போலீஸ் அதிகா‌ரியாக அர்ஜுன்.

இதில் தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய கெட்டப்பில் இறுதிக் காட்சியில் மட்டும் தோன்றுகிறாராம் அ‌ஜீத். அந்த கெட்டப்பை ரகசியமாக வைத்துள்ளது மங்காத்தா யூனிட்.

பில்லா இரண்டாம் பாகத்துக்காக இப்போதே இளைக்க ஆரம்பித்துவிட்டார் அ‌ஜீத். படு இளமையாக இந்தப் படத்தில் அவர் தொpந்தாக வேண்டும். இதற்காகதான் இந்த உடல் இளைப்பும் பயிற்சியும். இந்த இளமை கெட்டப்பில் மங்காத்தாவின் இறுதி காட்சியில் தோன்றப் போகிறாராம். தல தலைமுடி நரைச்சிடுச்சே என்று வருத்தப்படும் ரசிகர்களை இந்த ஒத்தை காட்சி ஆற்றுப்படுத்தும்.

Sunday, July 10, 2011

> மாற்றான் காதலி மாறுகிறார் ?

மாற்றான் படத்தில் சூர்யா ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் காஜல் மாற்றப்படுவார் என தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படத்தின் படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சூர்யா ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் நடித்துவரும் இவருக்கு முதல் முறையாக இந்தியில் அஜய்தேவ் கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தெனாவெட்டில் என்னை தென்னிந்திய நடிகை என்று குறிப்பிடுவது பிடிக்கவில்லை, நான் மும்பையைச் சேர்ந்தவள் என்று மும்பை மீடியாவுக்கு பேட்டியளித்தார். இது அவரை வைத்து படம் எடுத்த அனைவரையும் காயப்படுத்தியுள்ளது.

காஜலை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, காஜல் மன்னிப்பு கேட்காவிடில் அவரை படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு திரையுலகிலும் காஜலை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதன் காரணமாக மாற்றானிலிருந்து காஜல் நீக்கப்படலாம் என்கிறார்கள்.

அதேநேரம் இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும், ஹீரோ சூர்யாவுக்கும் அப்படியான எண்ணம் ஏதுமில்லை என்கிறது அவர்களுக்கு நெருக்கமான வட்டாரம்.

> மம்தா மோகன்தாஸ் மீண்டும் தமிழில்.

அழகும், திறமையும் இருந்தும் திரும்பிப் பார்க்கப்படாத நடிகைகளில் மம்தா மோகன்தாஸும் ஒருவர். இவரைப் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது மலையாள சினிமா. மம்தா மோகன்தாஸ் மலையாளத்தில் இப்போது பிஸி நடிகை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உபயம் அருண் விஜய்யின் தடையற தாக்க.

இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தமான பிராச்சி தேசாய் சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கு ஃபிளைட் ஏறினார். பின்லேடனையே பிடித்துவிட்டார்கள். பிராச்சி இன்னும் மாட்டவில்லை. அவர் மீது ஒரு வழக்கு போட்டுவிட்டு ராகுல் ப்‌‌ரீ‌த் சிங் என்பவரை ஒப்பந்தம் செயதனர். படத்தில் இரு ஹீரோயின்கள். இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் மம்தா மோகன்தாஸ்.

மம்தாவுக்கு இந்தப் படம் மறு வாழ்வாக அமையட்டும்.

> விமலா ராமன் பில்லா2 வில்.

விமலா ராமனுக்கு 2011 நன்றாக தொடங்கியிருக்கிறது. பொய்யில் அறிமுகமான இந்த‌த் திறமையான நடிகையை தமிழ் திரையுலகம் கண்டு கொள்ளாமல் இருந்தது. ராமன் தேடிய சீதை படத்தில் நல்ல நடிப்பை தந்தும் விமலா ராமனை திரும்பியும் பார்க்கவில்லை.

தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வந்தவருக்கு முதல்முறையாக இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிந்தா ஜோடியாக நடிக்கிறார். தமிழிலும் ஒரு வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

அ‌‌ஜீத்தின் பில்லா இரண்டாம் பாகத்தில் விமலா ராமனும் நடிக்கிறார். முக்கியமான வேடம், ஆனால் கதாநாயகி அல்ல. கதாநாயகியாக மும்பை மாடல் ஹ்யூமா குரோஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

> சிம்பு கௌதம் வட்டத்தில்.

கௌதமின் அடுத்தப்பட ஹீரோ ‌ஜீவா என்பது உறுதியாகியிருக்கிறது. காதல் கதையாம். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக கௌதமின் ஃபேவரைட் சமந்தாவாக இருக்கலாம்.

ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறார்கள்.

சூர்யா, கமல், தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் இருவர் என கௌதம் படம் பண்ணுவார் என நம்பப்படும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. இதில் சிம்புவும் இணைந்திருக்கிறார்.

கௌதமுடன் மீண்டும் இணைவதில் சந்தோஷம். நாங்கள் இணையும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமா அல்லது முற்றிலும் புதிய ஸ்கி‌ரிப்டா என்பது தெ‌ரியாது. எதுவாக இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் பல்ஸ் தெ‌ரிந்தவர் கௌதம் என புகழ்ந்திருக்கிறார்.

ஆக, கதை எதுவானாலும் கௌதமின் வட்டாரத்தில் சிம்புவும் இருப்பது உறுதியாகியிருக்கிறது.

> வேங்கை எடுக்க விரும்பாத ரிஸ்க்.

வேங்கை வெளிவந்திருக்கிறது. கூடவே வெறுப்பும். ஹீரோ மீதான கசப்பை காட்டமாகவே வெளியிட்டிருக்கிறார் இயக்குனர்.

வேங்கை படப்பிடிப்பின் போது தனுஷுக்கும், ஹ‌ரிக்கும் நடுவில் மோதல் ஏற்பட்டது தமிழகம் அறிந்த செய்தி. இந்த மோதல் கடைசிவரை மோதலாகவே நீடித்தது. படம் வெளியான பிறகு அது வெறுப்பாக வெளிவந்துள்ளது.

ஹ‌ரி இயக்கத்தில் நடிப்பதில்லை என தனுஷும், தனுஷை இயக்குவதில்லை என ஹ‌ரியும் தனித்தனியே சபதம் எடுத்துள்ளனர். இதன் உச்சக்கட்டம் பத்தி‌ரிகையாளர் சந்திப்பு. தனுஷ் ‌ரிஸ்க் எடுக்க விரும்பலை அதனால் சண்டைக் காட்சிகளில் டூப்பை பயன்படுத்தினோம் என தனுஷை வா‌ரினார் ஹ‌ரி. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. சூர்யாதான் பெஸ்ட்... டூப்பே போட்டுக்கிறதில்லை என விமர்சனத்தின் சூட்டை மேலும் அதிகமாக்கினார்.

தனுஷிடமிருந்து இதற்கு இன்னும் பதில் வரவில்லை. பக்குவப்பட்டவரல்லவா...?

Friday, July 8, 2011

> கேள்விக்குறி போட்ட விஜயகாந்த்.

தொடர்ந்து படங்கள் ஓடாவிட்டாலும் பி, சி சென்டர்களில் விஜயகாந்துக்கென்று ம‌ரியாதையும், வசூல் மகசூலும் இருக்கத்தான் செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவரை திரையில் ஹீரோவாகப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அவர்கள் எதிர்பார்ப்பை உணர்ந்தவர் போல, சினிமா எனது தொழில் அதை ஒருபோதும் விடமாட்டேன் என்று அறிவித்தார் விஜயகாந்த். தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்த‌ப் பொன்னாள் எப்போது என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இதற்கு காரணம் இருக்கிறது.

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் தொகுதியில் தங்கியிருந்து கண்டிப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் விஜயகாந்த். இதன் காரணமாக படத்தயா‌ரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தனது தயா‌ரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தையே மூடிவிட்டார். விஜயகாந்திடமிருந்து அடுத்த சிக்னல் வரும்வரை எந்தப்படத் தயா‌ரிப்புமில்லை என்று உறுதியாக தெ‌ரிவித்துள்ளார். இதே நிலையில்தான் இருக்கிறார் நடிகரும் தயா‌ரிப்பாளருமான அருண் பாண்டியன்.

தொண்டர்களே இப்படியென்றால் தலைவர் எப்போது சினிமா பக்கம் திரும்புவார் என்பதுதான் ரசிகர்களின் கேள்விக்குறி.

> வேலாயுதம் குழுவின் படப்பிடிப்பால் நன்மைகள்.

சினிமாவால் நன்மை இருக்கிறதோ இல்லையோ... சினிமா படப்பிடிப்பால் பல்வேறு நன்மைகள்.

விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி அருகிலுள்ள வல்லா குண்டாபுரத்துக்கு போயிருக்கிறார்கள். கதைப்படி அங்கு கிணறு வெட்டுவது போல் காட்சி. நிஜமாகவே கிணறு வெட்டி படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். கிணறு வெட்டுவது ஒரு செலவு என்றால் வேலை முடிந்த பிறகு அதை மூடுவது தனிச் செலவு. அந்த‌ச் செலவு எதற்கு என்று ஊர் மக்களுக்கே கிணறை தானமாக தந்திருக்கிறார்கள். செலவும் மிச்சம், ஜனங்களுக்கும் சந்தோஷம்.

ஒரு முக்கியமான விஷயம். இந்த வல்ல குண்டாபுரம்தான் கவுண்டமணியின் சொந்த ஊராம்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.