Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, January 29, 2012

> விஸ்வரூபம் கிளைமாக்ஸ் வரை சைலண்ட்

விஸ்வரூபம் படத்தை சைலண்டாக எடுத்து வருகிறார் கமல்ஹாசன். படத்தின் ஸ்டில் முதற்கொண்டு எதுவும் வெளிவரவில்லை. கதையைப் பற்றிய அவுட்லைன் கூட யாருக்கும் தெ‌ரியாது. இத்தனை கறாராக கிளைமாக்ஸ் வரை படத்தை கொண்டு வந்துவிட்டார் என்பது ஆச்ச‌ரியம்.

ஜோர்டான், யுகே, அமெ‌ரிக்கா என பறந்து பறந்து படப்பிடிப்பை நடத்தியவர் தற்போது கிளைமாக்ஸை எடுக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக அனைத்து அனுமதியும் வாங்கப்பட்டிருப்பதாக விஸ்வரூபம் யூனிட் தெ‌ரிவிக்கிறது.

பூஜா குமார் நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஆ‌ண்ட்‌ரியா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடிக்கின்றனர்.
மேலும் அறிய

> த்‌ரிஷாதான் பெஸ்ட் கொண்டாடுகிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.

த்‌ரிஷா, வெங்கடேஷ் நடித்த தெலுங்கு பாடிகாட் வெளியாகியிருக்கிறது. இந்த ‌ரிலீஸுக்காகதான் த்‌ரிஷா காத்திருந்தது.

பாடிகா‌ர்டின் ஒ‌ரி‌ஜினலான மலையாளத்தில் நயன்தாரா நடித்திருந்தார். தமிழில் அசின். இவர்கள் செய்த அதே வேடத்தைதான் த்‌ரிஷா தெலுங்கில் செய்திருந்தார். ஒரு வேடத்தை மூன்று மொழிகளில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கும் போது யார் பெஸ்ட் என்ற கேள்வி வருமல்லவா?

இந்த கேள்விக்கு ஆந்திரா ரசிகர்கள் த்‌ரிஷாதான் பெஸ்ட் என கொண்டாடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் த்‌ரிஷாவை அந்த காலத்து சாவித்தி‌ரியுடன் ஒப்பிடுகிறார்களாம்.

த்‌ரிஷா சந்தோஷப்படவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம்.
மேலும் அறிய

> மீண்டும் தேதி மாறியிருக்கிறது சகுனி படம்

மாஸ் ஹீரோக்களின் படங்கள் திருவிழா தினங்களில்தான் வெளியிட வேண்டும் என்று பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், தீபாவளி என ஐந்து தினங்களை மட்டுமே தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த புதிய விதிமுறையால் பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த சகுனி ‌ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த தனுஷின் கொலவெறி படமும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
மேலும் அறிய

Saturday, January 28, 2012

> சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின்

வாலி வந்த போதே இசை என்றொரு சப்ஜெக்ட் வைத்திருப்பதாக கூறி வந்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்தி, தெலுங்கு என்று அலைந்ததில் இப்போதுதான் இசைக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்திலும் சூர்யாதான் ஹீரோ. அவரே இயக்கி நடிக்கிறார். ஹீரோயின்? சூர்யாவின் சாய்ஸ் சிம்ரன். இன்றைய தேதியில் சிம்ரனை ஹீரோயினாக்கினால் குழந்தைகள் பயந்துவிடும் என்பதால் அவரது சாயலில் மும்பை மாடல் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம். 100 பேரை பார்த்து அதில் இவர் தேர்வாகியிருக்கிறார்.

நூறில் ஒருத்தி.
மேலும் அறிய

> அமிதாப், ர‌ஜினி ஒரே படத்தில் இனைகிறார்கள்.

மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய பிசினஸ்மேன் தூக்குடு அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் பூ‌ரி ஜெகன்நாத்தின் முகத்தில் பிரகாசம் பின்னியெடுக்கிறது. காரணம் ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப் போகிறார்.

இந்தியில் அமிதாப்பச்சனை இயக்கிய பூ‌ரி ஜெகன்நாத் மீண்டும் அவரை வைத்து ஒரு படம் பண்ணுகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி ர‌ஜினியிடம் கேட்டிருக்கிறார். அமிதாப், ர‌ஜினி உறவு இந்தியா அறிந்த ஒன்று. உடனே ஓகே சொல்லியிருக்கிறார் ர‌ஜினி.

ஷூட்டிங் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று காலண்டரை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அறிய

> ஜீவாவுடன் த்‌ரிஷா தமன்னா?

ஜீவா நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக த்‌ரிஷா நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. வாமனன் படத்தை இயக்கிய அகமதுதான் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். வாமனன் ஹாலிவுட் படத்தின் அட்டை காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

விஷயம் அதுவல்ல. தெலுங்கில் மார்க்கெட் இறங்கியதால் தமிழில் ‌‌ரீ-எ‌ண்ட்‌ரியாகத் துடிக்கும் தமன்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். சென்ற வருடம் வரை சோலோவாக ஷோ காட்டியவர் இந்த டபுள் கேமிற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்பதுதான் தெ‌ரியவில்லை.
மேலும் அறிய

> சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று அமீர் கூறியதற்கு இயக்குனர்கள் சங்கத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சேரன் அதனை வெளிப்படையாகவே காட்டியிருப்பது சூழலை மேலும் சூடாக்கியிருக்கிறது.

பெப்சியும் தயா‌ரிப்பாளர்கள் சங்கமும் முட்டிக் கொண்டடிருப்பதால் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழலில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்நிலையில்தான் பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார் அமீர். சின்ன தயா‌ரிப்பாளர்களை கணக்கில் எடுக்காமல் அமீர் பேசியிருக்கிறார். இயக்குனர்கள் சங்கம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இடையேயான பனிப்போர் விரைவில் நிஜப்போராகிவிடும்.
மேலும் அறிய

Friday, January 27, 2012

> சமந்தா நட்சத்திர பேட்டி நானும் தமிழ்ப் பொண்ணுதான்.

கௌதம் வாசுதேவ் மேனனின் கண்டுபிடிப்பு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோல். ஆனால் அதன் தெலுங்கு ‌ரீமேக்கில் சமந்தாதான் ஹீரோயின். படம் ஹிட்டாக, இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று அழகாக உதட்டை பிதுக்கிக் காட்டுகிறார் இந்த பளிங்கு சிலை. அவருடன் ஒரு மினி பேட்டி.

கௌதமின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே...?

ஆமாம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்தேன். அதே படத்தின் தெலுங்கு ‌ரீமேக்கில் நான்தான் நாயகி. அப்புறம் நடுநிசி நாய்கள் படத்தில் சின்னதாக ஒரு வேடம் தந்தார். மீண்டும் இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹீரோயின்.

இந்தத் தொடர் வாய்ப்புகளுக்கு என்ன காரணம்?

அதை நீங்கள் கௌதமிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் சிறந்த டைரக்டர். அவரது படங்களில் நடிப்பது கம்ஃபர்ட்டாக இருக்கிறது. ஆனால் காரணமே இல்லாமல் சிலர் என்னையும், அவரையும் இணைத்து காஸிப் எழுதுகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.

நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?

ஹலோ... நானும் தமிழ்ப் பொண்ணுதான். படித்ததும் வளர்ந்ததும் இதே சென்னையில்தான். அப்புறம் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர்னு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். படிக்கிற போது விடுமுறையில் இதிலுள்ள ஏதாவது ஒரு ஊர்லதான் இருப்பேன். எங்களுக்கு இந்த ஊர்களிலெல்லாம் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.


நீங்கள் நடிக்கிற நீதானே என் பொன்வசந்தம் படத்தைப் பற்றி...?

முதலில் அந்த டைட்டில். எனக்குப் பிடிச்ச வைரமுத்து சாரோட பாடலின் முதல்வ‌ரியைதான் கௌதம் தலைப்பா வச்சிருக்கார். அவருக்கும் வைரமுத்துசார்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தில் நான் நித்யா என்கிற கேரக்ட‌ரில் வர்றேன். நானும் ‌ஜீவாவும் காலே‌ஜ் ஸ்டூடண்ட். நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு எப்படி காதலா மாறுகிறது என்பதுதான் கதை. தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படத்தை எடுக்கயிருக்கிறார் கௌதம்.

இந்த மூன்றிலும் நீங்கதானே ஹீரோயின்?

ஆமா. தமிழில் ‌ஜீவா ஹீரோ. தெலுங்கில் நானி. இந்தியில் ஆதித்யா. ஒரே கதைன்னாலும் வேற வேற ஹீரோக்களுடன் நடிப்பதால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக ஃபீல் பண்றேன்.
மேலும் அறிய

Thursday, January 26, 2012

> மவுசு குறையாத மாற்றானின் சாதனை.

படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருந்தாலும் மாற்றானுக்கு மவுசு குறையவில்லை. படம் வெளிவரும் முன்பே கலெக்சனில் பட்டையை‌க் கிளப்புகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஏறக்குறைய 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தற்போது தெலுங்கு உ‌ரிமையும் விற்பனையாகியிருக்கிறது. தெலுங்கு உ‌ரிமை மட்டும் 17 கோடிகள். பெல்லம்கொண்ட சுரேஷ் தெலுங்கு உ‌ரிமையை வாங்கியுள்ளார்.
மேலும் அறிய

> விரைவில் அனன்யாவுக்கு திருமணம்

நடிகை அனன்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருக்கிறது. இதனை அவர் தெ‌ரிவித்துள்ளார்.

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தவர், மலையாளப் படம் நந்தனத்தின் தமிழ் ‌ரீமேக்கான சீடனில் நடித்தார். அவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான எங்கேயும் எப்போதும் கலெக்சனுடன் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றது.

அனன்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்போது மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்பவர்தான் அனன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தத் தகவலை அனன்யாவே மீடியாவிடம் தெ‌ரிவித்துள்ளார்.

மேலும் அறிய

> வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பாரா ?

ராதாமோகனின் அடுத்தப் படம் பயணம் போலவே தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்தப் படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார்.

ராதாமோகனின் இந்த புதிய படத்தை நாகார்ஜுனின் அன்னபூர்ணா பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. ஹீரோ.. சொல்லத் தேவையில்லை, அவரது மகன் நாக சைதன்யா. இந்தப் படத்துக்கு கௌரவம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. சமீபத்தில் இவரும் நாக சைதன்யாவும் கலந்து கொண்ட போட்டோசெஷன் நடந்தது.
மேலும் அறிய

> ர‌ஜினியை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டும் நண்பன்.

இப்போதெல்லாம் ர‌ஜினி புகழ் பாடுவதை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டுகிறார். யார் அவர்? வேறு யார் விஜய்தான்.

தனது நண்பன் படத்தை இவர் கமலுக்காக ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தை ரசித்த கமல், விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கலெக்சனை பார்க்கும் விஜய் முதல்முதலில் நடித்துப் பார்த்தப் படம் நண்பன். சூப்பர் நடிகரே பாராட்டிவிட்டார், குஷியில் இருக்கிறார் விஜய்.
மேலும் அறிய

Wednesday, January 25, 2012

> ஜெய் கௌதம் படத்தில்.

கௌதம் வாசுதேவ மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஜெய்தானாம். வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் த்‌ரிஷாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பறிபோனது.

தற்போது கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் தயா‌ரிக்கும் படமொன்றில் ஹீரோவாகியிருக்கிறார். பிரபுதேவாவின் அசிஸ்டெண்ட் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜோடி இன்னும் முடிவாகவில்லை.

விரைவில் கௌதம் இயக்கத்திலும் நடிக்கயிருக்கிறாராம்.
மேலும் அறிய

> ஐட்டம் சாங்க்கு நோ சொன்ன ரிச்சா.

பேமெண்ட் ‌ரிச்சாக இருந்தால் எந்த ஹீரோயினும் ஒரு பாடலுக்கு ஆடுவார் என்று சொல்ல முடியாது. மும்பையில் ஐட்டம் சாங் சகஜம் என்றாலும் நம்மூ‌ரில் இன்னமும் சங்கோஜம்தான்.

மயக்கம் என்ன ‌ரிச்சா இந்தி ரவுடி ரத்தோ‌ரில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு. இது அப்படியே அச்சேற, ஆவேசமாகிவிட்டார். நான் நடிக்க வந்தது நல்ல படங்களில் நடிக்கத்தானே தவிர ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு அல்ல என்று தனியாவர்த்தனமே செய்திருக்கிறார்.

ரவுடி ரத்தோர் தமிழ் சிறுத்தையின் இந்தி ‌ரீமேக் என்பதும், பிரபுதேவா இதனை இயக்குகிறார் என்பதும் முக்கியமானது.
மேலும் அறிய

> மோதிக் கொள்ளும் கோடம்பாக்கத்தினர்.

பெப்சி அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை நிர்ணயித்ததால் தயா‌ரிப்பாளர்கள் நேற்று அவசரக் கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை எடுத்தனர். இந்தத் தீர்மானத்தால் பெப்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது. எந்நேரத்திலும் போராட்டம் வெடிக்கக் கூடிய சூழல் நிலவுகிறது.

நேற்றைய கூட்டத்தில் தயா‌ரிப்பாளர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றினர்.

பெப்சி தொழிலாளர் அமைப்பு தன்னிச்சையாக சம்பளத்தை உயர்த்தியது விதி மீறிய செயலாகும். இதனால் இனி பெப்சியுடன் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது.

தயா‌ரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். அப்படி தொழில் செய்ய முன்வருகிறவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து அதை அனைத்து தயா‌ரிப்பாளர்களும் கடைபிடிக்க வலியுறுத்தும். மீறுகிறவர்களுக்கு தமிழக திரைப்பட தயா‌ரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் நல்காது.

இந்தத் தீர்மானம் பெப்சி தொழிலாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

பெப்சி யூனியனில் சில அமைப்புகளுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பள விவரம்.
  • லைட்மேன் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 530
  • ஜூனியர் ஆர்டிஸ்ட் ரூ. 250 புதிய சம்பளம் ரூ. 320
  • மகளிர் யூனியன் ரூ. 290 புதிய சம்பளம் ரூ. 400
  • செட் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 525
  • டிரைவர்ஸ் யூனியன் ரூ. 270 புதிய சம்பளம் ரூ. 415
  • காஷ்ட்யூம் அசிஸ்டென்ட் ரூ. 700 புதிய சம்பளம் ரூ. 850
  • புரொடக்ஷன் அசிஸ்டென்ட் ரூ. 350 புதிய சம்பளம் ரூ. 550
மேலும் அறிய

> அசைக்க முடியாத முதலிடத்தில் நண்பன் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.

4. மௌனகுரு
சென்ற வாரத்தின் அதே நான்காவது இடத்தில் மௌனகுரு. இதுவரை சென்னையில் 1.42 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 3.3 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 5.7 லட்சங்களை வசூலித்துள்ளது. பத்து தினங்களில் இதன் வசூல் 24 லட்சங்கள்.

2. வேட்டை
லிங்குசாமியின் படம் சென்ற வார இறுதியில் 63.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.91 கோடி.

1. நண்பன்
கடைசியில் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் படம் கிடைத்திருக்கிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.38 கோடி வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் மட்டும் 4.95 கோடிகள்.
மேலும் அறிய

Tuesday, January 24, 2012

> அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?

மைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல்லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார்களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயுடுகளின் தேசத்தில் மையம் கொண்டிருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந்திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக.

முதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?

எனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப்பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கிறது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா வராதுன்னு அம்மா சொல்லிட்டாங்க.

அப்புறம் எப்படி சம்மதிக்க வச்சீங்க?

சிம்பிள். நாலு நாள் ச‌ரியா சாப்பிடாம சோகமா தி‌ரிஞ்சேன். அதைப் பார்த்துட்டு அப்பாதான் அம்மாவை கன்வின்ஸ் செய்து எனக்கு நடிக்க பர்மிஷன் வாங்கித் தந்தார்.

உங்க முதல் படமே தமிழ்தானா?

இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்கள் நடிச்ச பிறகுதான் தமிழுக்கு வந்தேன்.

மைனா உங்களுக்கு இப்படியொரு பெயர் வாங்கித் தரும்னு நினைச்சீங்களா?

என்னோட நடிப்பு பாராட்டப்படும்னு தொரியும். ஆனா இப்படியொரு சக்சஸ் எதிர்பார்க்கலை. என்னுடைய கே‌ரிய‌ரில் மைனா மிக முக்கியமான படம்.

இப்போ என்னென் படங்கள் நடிச்சிட்டிருக்கீங்க?

அதர்வா ஜோடியா முப்பொழுதும் உன் கற்பனைகள். இது தவிர சித்தார்த் ஜோடியா, காதலில் சொதப்புவது எப்படி. இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகுது.

தெலுங்குக்குப் போன பிறகு நீங்க தமிழ்ப் படங்களுக்கு ச‌ரியாக கால்ஷீட் கொடுக்காமல சொதப்புவதாக புகார் இருக்கே?

உண்மையில் நான் கால்ஷீட் சொதப்புறது கிடையாது. இது என்னோட டைரக்டர்ஸுக்கு தெ‌ரியும். மூணு படங்களில் நடிக்கிறபோது சில வேளை ஒரு படத்துக்கு ஒரு நாள் அதிகமாக கால்ஷீட் தர வேண்டியிருக்கும். அந்த மாதி‌ரி சந்தர்ப்பத்தில் மத்தப் பட இயக்குனர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பார். இது டைரக்டர்ஸுக்காக பண்றதே தவிர எனக்காக பண்ணிக்கிறதில்லை.

வேட்டை எப்படி வந்திருக்கு?

ரொம்ப நல்லா வந்திருக்கு. லிங்குசாமி சார் கடுமையா உழைச்சிருக்கார். நாங்களும்தான். வேட்டை ஷுட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்ததுன்னு சொல்லலாம்.

தெய்வத்திருமகளில் நடிச்சிருந்தாலும் நீங்க விக்ரமின் ஜோடி கிடையாது. அதுல வருத்தம் இருக்கா?

அந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியே கிடையாதே. பிறகு எப்படி வருத்தம் வரும். என்னுடைய கேரக்டர் எல்லோருக்கும் பிச்சிருந்தது. நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க. அது எனக்குப் போதும்.

விக்ரமின் ராஜபாட்டையிலும் நீங்க நடிக்கிறதா முதலில் செய்தி வந்ததே... என்னாச்சு?

ராஜபாட்டையில் நடிக்க என்னிடம் கேட்கவே இல்லை. பிறகு எப்படி அந்த மாதி‌ரி செய்தி வந்ததன்னு தெ‌ரியலை. ஆனா விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிற படத்தில் நடிக்கிறதுக்கு பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.

தெலுங்கில் கவனம் செலுத்துறதால தமிழ்ப் பக்கம் நீங்க அதிகம் வர மாட்டீங்கன்னு சொல்லப்படுதே?

விக்ரம் புராஜெக்ட் தவிர வேறு இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிகிட்டிருக்கோம். இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா?



மேலும் அறிய

> யார் ஆதி யார் பகவான் ? ஜெயம் ரவி விளக்கம்

அமீ‌ரின் ஆதிபகவான் பகவானை காணப் போன யாத்திரைப் போல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு விளக்கமளித்துள்ளார் படத்தின் நாயகனான ஜெயம் ரவி.

படம் தாமதமானதற்கு பல காரணங்கள் உண்டு. இப்போது எல்லாம் ச‌ரியாகி வேகமாக படப்பிடிப்பும் மற்ற வேலைகளும் நடந்து வருகின்றன. சில படங்களுக்கு காலதாமதம் தவிர்க்க முடியாதது. அப்படியொரு படம்தான் இதுவும் என்றிருக்கிறார் ஜெயம் ரவி.

ஆதிபகவான் யார் என்ற கேள்விக்கு, ஆதி நான் பகவான் அமீர் என்று பதிலளித்திருக்கிறார் பவ்யமாக.
மேலும் அறிய

> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை

உலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.

சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற நட்பு வலைத்தளத்தின் மீதான வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதே இதற்குக் காரணம். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இது பொதுமக்கள் பங்கேற்ப்புக்கு திறக்கபட்டது.

ஆனால் கூகுளின் போட்டி நிறுவனமான ஃபேஸ்புக் இதே 9 கோடி பயனாளர் எண்ணிக்கையை எட்ட 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் உலகம் முழுதும் இன்று 80 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது.

இது குறித்து கூகுள்+ இன் தலைமைச் செயலதிகாரி லாரி பேஜ் கூறுகையில், "நான் அதிகப்படியான மகிழ்ச்சியில் உள்ளேன், இன்று உலகம் முழுதும் 9 கோடி பயனாளர்கள் உள்ளனர். இது 3 மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்திருந்ததை விட இரு மடங்கு அதிகமாகும்" என்றார்.
மேலும் அறிய

Monday, January 23, 2012

> மீண்டும் தேதி மாறியிருக்கிறது அதர்வா படம்

அதர்வா, அமலா பால் நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் ‌ரிலீஸ் தேதி தள்‌ளி‌ப் போயிருக்கிறது.

எல்ரெட் குமார் தயா‌ரித்து இயக்கியிருக்கும் இப்படம் டிசம்ப‌ரிலேயே திரைக்கு வருவதாக இருந்தது. சில காரணங்களால் பிப்ரவ‌ரி 14 காதலர் தினத்துக்கு தேதியை மாற்றினர். இப்போது தேதி மீண்டும் மாறியிருக்கிறது.

இறுதியாக பிப்ரவ‌ரி 17ஆம் தேதியை ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.