Tuesday, January 31, 2012

> ர‌ஜினி நடித்ததாக சொன்னது வதந்தி சௌந்தர்யா விளக்கம்.

கோச்சடையான் என்ற படத்தில் ர‌ஜினி நடிக்கிறார் என்றதும் அது யார்யா கோச்சடையான் என்று அகழ்வாராய்ச்சியில் இறங்கின சில பத்தி‌ரிகைகள். அந்தளவுக்கு ஆழமாகப் போக முடியாதவர்கள் அவரவர் அபிப்பிராயங்களை எழுத, ஏ‌ரியாவில் பெரும் குழப்பம். அதில் முக்கியமானது, கோச்சடையான் ஷூட்டிங்கில் ர‌ஜினி கலந்து கொண்டார் என்பது.

ஆனால் உண்மை வேறு. ர‌ஜினியின் விதவிதமான புகைப்படங்களை சேக‌ரித்து கம்ப்யூட்ட‌ரில் ப்ரெஷ்ஷாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற கிரவுண்ட் வொர்க்தான் தொடங்கப்பட்டிருக்கிறதே தவிர, படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அப்படியானால் ர‌ஜினி நடித்ததாக சொன்னது?

அது சும்மா வதந்தி. இதனை சௌந்தர்யாவே தெ‌ளிவாக தெ‌ரிவித்திருக்கிறார்.
மேலும் அறிய

Monday, January 30, 2012

> வெங்கட்பிரபு படத்தில் காமெடி வேடத்தில் சூர்யா

யார் சூர்யாவை வைத்து படம் செய்தாலும் இடையில் அவரை வைத்து படம் பண்ணுவார் ஹ‌ரி. வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் அதன் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி தனது வேல் படத்தை வெற்றிகரமாக முடித்தார் ஹ‌ரி. ஆனால் யானைக்கும் அடி சறுக்குமில்லையா?

மாற்றானுக்குப் பிறகு ஹ‌ரிதான் சூர்யாவை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த புராஜெக்ட் ட்ராப். அவருக்குப் பதில் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

இது வெங்கட்பிரபு பாணியில் அமைந்த காமெடிக் கதையாம். மாயாவிக்குப் பிறகு சூர்யா காமெடி வேடத்தில் நடிப்பதால் படத்தைப் பார்க்க எல்லோருக்கும் ஆர்வம். ஷூட்டிங் எப்போ போகப் போறீங்க?
மேலும் அறிய

> கௌதமும், ஹா‌ரிஸும் இப்போதைக்கு இணையப் போவதில்லை.

கௌதமும், ஹா‌ரிஸும் மீண்டும் இணைகிறார்கள். சென்னை குடிசையை ஆக்கிரமிக்கும் தீ மாதி‌ரி இந்த‌ச் செய்தியை அடிக்கடி கொளுத்திப் போடுகிறார்கள். இந்த‌ச் சூடு ஹா‌ரிஸ் காதுவரைக்கும் சென்றிருக்கிறது. இதற்கு தனது பாணியில் சூசகமாக பதிலளித்திருக்கிறார்.

நண்பன் படத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டை பற்றி குறிப்பிடும் போது நடுவில் கௌதம் மேட்டரையும் சேர்த்திருக்கிறார். கௌதமுடன் வேலை பார்ப்பீர்களா என்று கேட்கிறார்கள். நான் இது பற்றியெல்லாம் யோசிக்கிற நிலையில் இல்லை, வேறு படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று விட்டேத்தியாக அவர் சொன்ன பதிலிலுக்கு ஒரேயொரு அர்த்தம்தான்.

இப்போதைக்கு இவர்கள் இணையப் போவதில்லை.
மேலும் அறிய

Sunday, January 29, 2012

> பாலு மகேந்திரா சசிகுமார் தயா‌ரிப்பில்.

ஏறுகிற மேடைகளில் எல்லாம் படம் தயா‌ரிக்க கோடிகள் வேண்டாம் லட்சங்கள் போதும் என்று எகிறி அடிப்பவர் பாலு மகேந்திரா. சொன்னதை இவர் செயலிலும் காட்டப் போகிறார் என்பதுதான் அதிரடி.

பாலு மகேந்திராவின் படங்களில் ஆடம்பர ஷாட் ஒன்றுகூட இருக்காது. சிக்கனமாக படமெடுப்பதில் இவரை அடிக்க ஆளில்லை. இவரது எல்லாப் படங்களும் லட்சங்களுக்குள் அடங்குபவை.

அடுத்து சசிகுமார் தயா‌ரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் ஜஸ்ட் 90 லட்சங்கள். கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கு ஒரு கோடி செலவளித்தேன் என்று வீண் ஜம்பம் பேசுகிறவர்களுக்கிடையில் கேமரா கவிஞர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.
மேலும் அறிய

> விஸ்வரூபம் கிளைமாக்ஸ் வரை சைலண்ட்

விஸ்வரூபம் படத்தை சைலண்டாக எடுத்து வருகிறார் கமல்ஹாசன். படத்தின் ஸ்டில் முதற்கொண்டு எதுவும் வெளிவரவில்லை. கதையைப் பற்றிய அவுட்லைன் கூட யாருக்கும் தெ‌ரியாது. இத்தனை கறாராக கிளைமாக்ஸ் வரை படத்தை கொண்டு வந்துவிட்டார் என்பது ஆச்ச‌ரியம்.

ஜோர்டான், யுகே, அமெ‌ரிக்கா என பறந்து பறந்து படப்பிடிப்பை நடத்தியவர் தற்போது கிளைமாக்ஸை எடுக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக அனைத்து அனுமதியும் வாங்கப்பட்டிருப்பதாக விஸ்வரூபம் யூனிட் தெ‌ரிவிக்கிறது.

பூஜா குமார் நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஆ‌ண்ட்‌ரியா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடிக்கின்றனர்.
மேலும் அறிய

> த்‌ரிஷாதான் பெஸ்ட் கொண்டாடுகிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.

த்‌ரிஷா, வெங்கடேஷ் நடித்த தெலுங்கு பாடிகாட் வெளியாகியிருக்கிறது. இந்த ‌ரிலீஸுக்காகதான் த்‌ரிஷா காத்திருந்தது.

பாடிகா‌ர்டின் ஒ‌ரி‌ஜினலான மலையாளத்தில் நயன்தாரா நடித்திருந்தார். தமிழில் அசின். இவர்கள் செய்த அதே வேடத்தைதான் த்‌ரிஷா தெலுங்கில் செய்திருந்தார். ஒரு வேடத்தை மூன்று மொழிகளில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கும் போது யார் பெஸ்ட் என்ற கேள்வி வருமல்லவா?

இந்த கேள்விக்கு ஆந்திரா ரசிகர்கள் த்‌ரிஷாதான் பெஸ்ட் என கொண்டாடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் த்‌ரிஷாவை அந்த காலத்து சாவித்தி‌ரியுடன் ஒப்பிடுகிறார்களாம்.

த்‌ரிஷா சந்தோஷப்படவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம்.
மேலும் அறிய

> மீண்டும் தேதி மாறியிருக்கிறது சகுனி படம்

மாஸ் ஹீரோக்களின் படங்கள் திருவிழா தினங்களில்தான் வெளியிட வேண்டும் என்று பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம், தீபாவளி என ஐந்து தினங்களை மட்டுமே தயா‌ரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கியிருக்கிறது.

இந்த புதிய விதிமுறையால் பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த சகுனி ‌ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி பிப்ரவ‌ரியில் வெளியாவதாக இருந்த தனுஷின் கொலவெறி படமும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
மேலும் அறிய

Saturday, January 28, 2012

> சிம்ரன் சாயலில் S.J.சூர்யாவின் இசை ஹீரோயின்

வாலி வந்த போதே இசை என்றொரு சப்ஜெக்ட் வைத்திருப்பதாக கூறி வந்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்தி, தெலுங்கு என்று அலைந்ததில் இப்போதுதான் இசைக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்திலும் சூர்யாதான் ஹீரோ. அவரே இயக்கி நடிக்கிறார். ஹீரோயின்? சூர்யாவின் சாய்ஸ் சிம்ரன். இன்றைய தேதியில் சிம்ரனை ஹீரோயினாக்கினால் குழந்தைகள் பயந்துவிடும் என்பதால் அவரது சாயலில் மும்பை மாடல் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம். 100 பேரை பார்த்து அதில் இவர் தேர்வாகியிருக்கிறார்.

நூறில் ஒருத்தி.
மேலும் அறிய

> அமிதாப், ர‌ஜினி ஒரே படத்தில் இனைகிறார்கள்.

மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய பிசினஸ்மேன் தூக்குடு அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் பூ‌ரி ஜெகன்நாத்தின் முகத்தில் பிரகாசம் பின்னியெடுக்கிறது. காரணம் ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப் போகிறார்.

இந்தியில் அமிதாப்பச்சனை இயக்கிய பூ‌ரி ஜெகன்நாத் மீண்டும் அவரை வைத்து ஒரு படம் பண்ணுகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி ர‌ஜினியிடம் கேட்டிருக்கிறார். அமிதாப், ர‌ஜினி உறவு இந்தியா அறிந்த ஒன்று. உடனே ஓகே சொல்லியிருக்கிறார் ர‌ஜினி.

ஷூட்டிங் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று காலண்டரை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அறிய

> ஜீவாவுடன் த்‌ரிஷா தமன்னா?

ஜீவா நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக த்‌ரிஷா நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. வாமனன் படத்தை இயக்கிய அகமதுதான் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். வாமனன் ஹாலிவுட் படத்தின் அட்டை காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

விஷயம் அதுவல்ல. தெலுங்கில் மார்க்கெட் இறங்கியதால் தமிழில் ‌‌ரீ-எ‌ண்ட்‌ரியாகத் துடிக்கும் தமன்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். சென்ற வருடம் வரை சோலோவாக ஷோ காட்டியவர் இந்த டபுள் கேமிற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்பதுதான் தெ‌ரியவில்லை.
மேலும் அறிய

> சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று அமீர் கூறியதற்கு இயக்குனர்கள் சங்கத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சேரன் அதனை வெளிப்படையாகவே காட்டியிருப்பது சூழலை மேலும் சூடாக்கியிருக்கிறது.

பெப்சியும் தயா‌ரிப்பாளர்கள் சங்கமும் முட்டிக் கொண்டடிருப்பதால் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழலில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்நிலையில்தான் பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார் அமீர். சின்ன தயா‌ரிப்பாளர்களை கணக்கில் எடுக்காமல் அமீர் பேசியிருக்கிறார். இயக்குனர்கள் சங்கம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.

இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இடையேயான பனிப்போர் விரைவில் நிஜப்போராகிவிடும்.
மேலும் அறிய

Friday, January 27, 2012

> சமந்தா நட்சத்திர பேட்டி நானும் தமிழ்ப் பொண்ணுதான்.

கௌதம் வாசுதேவ் மேனனின் கண்டுபிடிப்பு நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோல். ஆனால் அதன் தெலுங்கு ‌ரீமேக்கில் சமந்தாதான் ஹீரோயின். படம் ஹிட்டாக, இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று அழகாக உதட்டை பிதுக்கிக் காட்டுகிறார் இந்த பளிங்கு சிலை. அவருடன் ஒரு மினி பேட்டி.

கௌதமின் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே...?

ஆமாம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்தேன். அதே படத்தின் தெலுங்கு ‌ரீமேக்கில் நான்தான் நாயகி. அப்புறம் நடுநிசி நாய்கள் படத்தில் சின்னதாக ஒரு வேடம் தந்தார். மீண்டும் இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஹீரோயின்.

இந்தத் தொடர் வாய்ப்புகளுக்கு என்ன காரணம்?

அதை நீங்கள் கௌதமிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அவர் சிறந்த டைரக்டர். அவரது படங்களில் நடிப்பது கம்ஃபர்ட்டாக இருக்கிறது. ஆனால் காரணமே இல்லாமல் சிலர் என்னையும், அவரையும் இணைத்து காஸிப் எழுதுகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது.

நன்றாக தமிழ் பேசுகிறீர்களே?

ஹலோ... நானும் தமிழ்ப் பொண்ணுதான். படித்ததும் வளர்ந்ததும் இதே சென்னையில்தான். அப்புறம் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர்னு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான எல்லா ஊர்களுக்கும் போயிருக்கேன். படிக்கிற போது விடுமுறையில் இதிலுள்ள ஏதாவது ஒரு ஊர்லதான் இருப்பேன். எங்களுக்கு இந்த ஊர்களிலெல்லாம் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.


நீங்கள் நடிக்கிற நீதானே என் பொன்வசந்தம் படத்தைப் பற்றி...?

முதலில் அந்த டைட்டில். எனக்குப் பிடிச்ச வைரமுத்து சாரோட பாடலின் முதல்வ‌ரியைதான் கௌதம் தலைப்பா வச்சிருக்கார். அவருக்கும் வைரமுத்துசார்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தில் நான் நித்யா என்கிற கேரக்ட‌ரில் வர்றேன். நானும் ‌ஜீவாவும் காலே‌ஜ் ஸ்டூடண்ட். நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு எப்படி காதலா மாறுகிறது என்பதுதான் கதை. தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் படத்தை எடுக்கயிருக்கிறார் கௌதம்.

இந்த மூன்றிலும் நீங்கதானே ஹீரோயின்?

ஆமா. தமிழில் ‌ஜீவா ஹீரோ. தெலுங்கில் நானி. இந்தியில் ஆதித்யா. ஒரே கதைன்னாலும் வேற வேற ஹீரோக்களுடன் நடிப்பதால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக ஃபீல் பண்றேன்.
மேலும் அறிய

Thursday, January 26, 2012

> மவுசு குறையாத மாற்றானின் சாதனை.

படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருந்தாலும் மாற்றானுக்கு மவுசு குறையவில்லை. படம் வெளிவரும் முன்பே கலெக்சனில் பட்டையை‌க் கிளப்புகிறது.

கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஏறக்குறைய 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தற்போது தெலுங்கு உ‌ரிமையும் விற்பனையாகியிருக்கிறது. தெலுங்கு உ‌ரிமை மட்டும் 17 கோடிகள். பெல்லம்கொண்ட சுரேஷ் தெலுங்கு உ‌ரிமையை வாங்கியுள்ளார்.
மேலும் அறிய

> விரைவில் அனன்யாவுக்கு திருமணம்

நடிகை அனன்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கயிருக்கிறது. இதனை அவர் தெ‌ரிவித்துள்ளார்.

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அனன்யா. அதன் பிறகு தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்தவர், மலையாளப் படம் நந்தனத்தின் தமிழ் ‌ரீமேக்கான சீடனில் நடித்தார். அவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான எங்கேயும் எப்போதும் கலெக்சனுடன் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றது.

அனன்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்போது மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்பவர்தான் அனன்யாவை திருமணம் செய்யவிருக்கிறார். இந்தத் தகவலை அனன்யாவே மீடியாவிடம் தெ‌ரிவித்துள்ளார்.

மேலும் அறிய

> வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பாரா ?

ராதாமோகனின் அடுத்தப் படம் பயணம் போலவே தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இந்தப் படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார்.

ராதாமோகனின் இந்த புதிய படத்தை நாகார்ஜுனின் அன்னபூர்ணா பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது. ஹீரோ.. சொல்லத் தேவையில்லை, அவரது மகன் நாக சைதன்யா. இந்தப் படத்துக்கு கௌரவம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. சமீபத்தில் இவரும் நாக சைதன்யாவும் கலந்து கொண்ட போட்டோசெஷன் நடந்தது.
மேலும் அறிய

> ர‌ஜினியை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டும் நண்பன்.

இப்போதெல்லாம் ர‌ஜினி புகழ் பாடுவதை விட்டு கமலுடன் நெருக்கம் காட்டுகிறார். யார் அவர்? வேறு யார் விஜய்தான்.

தனது நண்பன் படத்தை இவர் கமலுக்காக ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தை ரசித்த கமல், விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கலெக்சனை பார்க்கும் விஜய் முதல்முதலில் நடித்துப் பார்த்தப் படம் நண்பன். சூப்பர் நடிகரே பாராட்டிவிட்டார், குஷியில் இருக்கிறார் விஜய்.
மேலும் அறிய

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.