Monday, July 20, 2009

> இந்திக்கு போகும் நயன்? சூடுபிடிக்குது போட்டி!

வெறிச்சுன்னு கிடக்குது வேடந்தாங்கல். அசின், த்ரிஷா, ரெண்டு பேரும் இந்திக்கு போயிட்டாங்க. ஸ்ரேயா, ரீமாசென் என்ற அடுத்த லெவல் அழகிகள், கிட்டதட்ட அலுத்துப் போய்விட்டார்கள். இந்த நிலையில் ஒண்ணே ஒன்ணு, கண்ணே கண்ணு என்றிருந்த நயன்தாராவையும் இந்திக்கு கொண்டு போக போகிறாராம் பிரபுதேவா.

வெறும் நடிகரா தமிழ் நாட்டில் மட்டும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த பிரபுதேவா, இயக்குனர் ஆனதும் "தென்னாடுடைய தலைவா போற்றி"ன்னு அவரது புகழ்பாட ஆரம்பிச்சிட்டாங்க ரசிகர்கள். அப்படியே வடநாட்டையும் வளைத்து போட்டு தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழி வேந்தன் ஆகிவிட்டார் பிரபுதேவா. தற்போது இவர் நடித்து வரும் 'களவாடிய பொழுதுகள்' படத்தை முடித்துவிட்டு சல்மான்கான் நடிக்கும் இந்திபடம் ஒன்றை இயக்கப்போகிறாராம்.

இவர் இந்திக்கு போவது தெரிந்தேதான் பிரபுதேவாவை தன் வலையில் வீழ்த்தினார் நயன்தாரா என்றும் கிசுகிசுக்கிறார்கள். அசின், த்ரிஷா என்று தனது போட்டியாளர்கள் அங்கே போய்விட்டதால் சற்று போரடித்துப் போயிருந்தார் நயன். மார்க்கெட்டில் முன்னணியில் இருந்தாலும் தமன்னாவெல்லாம் தனக்கொரு போட்டியா என்று யோசித்திருப்பார் போலும். அசின், த்ரிஷாவை தேடிப் போய் 'தில்' காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

இப்படி எல்லா 'பபுள்கம்'களையும் ஏற்றுமதி செய்துவிட்டு வெறும் வாயை மெல்லப் போகிறான் தமிழன்!

2 நான் சம்பாதிச்சது:

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

அட்டெண்டன்ஸ்!

நிகழ்காலத்தில்... said...

அட்டெண்டன்ஸ்!

போட்டாச்சு

kinly remove word verification

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.