
கோவிலுக்கு போவதும், கும்பிட்டு தொழுவதும் கூட இயற்கைதான். ஸ்ரேயா செய்த இன்னொரு பூஜைதான் என்னவோ, ஏதோ என்று புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. காளஹஸ்தி கோவில் நாக சர்ப தோஷம் உள்ளவர்களுக்கு விசேஷமானது. திருமணம் தள்ளி போகிறதே என்று கவலைப்படுகிறவர்களை இங்கே அனுப்பி சர்பதோஷ பரிகாரம் செய்ய சொல்வது பண்டிதர்களின் வழக்கம்.
இங்கு வந்த ஸ்ரேயா, இந்த நாக சர்ப தோஷ பிரார்த்தனையும், அதற்கான நிவாரண பூஜையும் செய்தாராம். ஒருவேளை ஸ்ரேயாவுக்கு கல்யாண ஆசை வந்திருச்சோ என்னவோ? அது போகட்டும்... இவர் வந்திருப்பதை அறிந்த திருவாளர் பொதுஜனம், விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைய முயல, போலீஸ் வந்து காப்பாற்றியதாம் ஸ்ரேயாவை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.