மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கடைசி நேரத்தில் தப்பித்தார் ஜெனிலியா

கடைசி நேரத்தில் இலங்கைக்கு செல்லாமல் பயணத்தை ரத்து செய்ததால் வேலாயுதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார் ஜெனிலியா.

இலங்கையில் நடந்த படவிழாவில் ஜெனிலியா கலந்து கொண்டதாக செய்தி வெளியானதும் அவர் நடிக்கும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று நடிகர் சங்கமும், பெப்சி அமைப்பும் அறிவித்தது.

சங்கம் சொல்லும் எதற்கும் கட்டுப்படுவோம் என்று அறிவித்தார் ஜெனிலியா ஹீரோயினாக நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் இலங்கை செல்லவேயில்லை என்று விளக்கம் அளித்தார் ஜெனிலியா. ஆனால் அவரது பேச்சை ஒருவரும் நம்பவில்லை.

தற்போது திடீர் திருப்பமாக அவர் மீதான நடவடிக்கையை சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன. ஜெனிலியா இலங்கை செல்லவில்லை, அதனால் அவர் மீது சங்கங்கள் நடவடிக்கை எடுக்காது என்று ஸ்டுடியோ வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மேலும் வேலாயுதம் படத்தில் திட்டமிட்டபடி அவர் நடிப்பார் எனவும் தெ‌ரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஜெனிலியாவுடன் இன்னொரு ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இதன் போட்டோசெஷன் சாலிக்கிராமத்தில் உள்ள பாலுமகேந்திராவின் ஸ்டுடியோவில் நடந்து முடிந்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.