மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வைகைப் புயல் வர்றார்யா 16ஆம் தேதி திரைக்கு.

சன் பிக்சர்ஸுடன் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சமரசம் செய்து கொண்டதால் மம்பட்டியான் 16ஆம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இது மற்ற எல்லோரையும்விட வடிவேலுக்கு முக்கியமான படம்.

ஆட்சி மாறிய பிறகு எந்தப் புதிய படத்திலும் வடிவேலு ஒப்பந்தமாகவில்லை. அவர் நடித்த ஒரு படமும் வெளியாகவுமில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவர் நடித்தப் படமொன்று வெளியாகிறது. அது மம்பட்டியான்.

சென்ற ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் படம் நெடுக வருகிறார் வடிவேலு. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வடிவேலின் மார்க்கெட் ஆடாமல் அசையாமல் இருக்கிறதா என்பதை அறிய இந்தப் படம் உதவும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.