
இந்தியில் அரை டஜன் ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழில் இரண்டு பேர் இணைந்து நடிப்பதே அபூர்வம். இந்த ஈகோ யுத்தத்துக்கு தங்கள் அளவில் முடிவு கட்டியிருக்கிறார்கள் சிம்புவும், பரத்தும்.
தெலுங்கில் வெளியான வேதம் படமே வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்டான இதில் சிம்புடன் மனோஜ் நடிப்பார் என கூறப்பட்டது. எதிர்பாராத விதமாக மனோஜ் விபத்தில் மாட்டிக் கொள்ள அந்த வேடத்தில் நடிக்க பரத்தை கேட்டிருக்கிறார் சிம்பு. அவரும் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.
சென்ற வாரம் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.