மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் பூமியை நோக்கி

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போது விழிப்படைந்துள்ள தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. 21-ஆம் நூற் றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரிய னிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். “சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக் கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக் கத்தை ஏற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரி யக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாது காக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக் கும். இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிர மான தாக்கத்தை நாம் உணர முடியும். இவை மனித இனத்தைப் பாதிக்கும் எனக் கூறப் படுகிறது. இது 2012-ஆம் ஆண்டில் நிகழலாம் என கூறப்பட்டுள்ளது. அதிதொழில்நுட் பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடு களின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கத்ரீனா சூறாவளி யினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.