மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வளரும் நடிகை... விரட்டும் வதந்தி!

கந்தா வரட்டும். கல்லா நிரம்பும் என்று காத்துக் கொண்டிருக்கிறார் மித்ரா. பாபு கே விஸ்வநாத் இயக்கும் இந்த படத்தில் கரணுக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்த இளம் தென்றல். அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், த்ரிஷா என்று சேச்சிகளின் ஆட்சியில் திக்குமுக்காடும் தமிழ்சினிமா மித்ராவுக்கும் ஒரு மிலிட்டரி சல்யூட் அடிக்க தயாராகி வருகிறது. ஆனால்...?

என்ன ஆனால்? சிங்கத்துக்கே முக்காடு போடுற ஆளுங்க, சில் வண்டு மித்ராவை சும்மா விடுவாங்களா? பொண்ணுக்கு நடிப்பே வரலே தெரியுமா? படாத பாடு படுறாரு டைரக்டர் என்றும், அந்த பொண்ணுக்கு எல்லாம் நல்லாயிருக்கு. டான்ஸ் மட்டும்தான் சுட்டு போட்டாலும் வரலே என்றும் அவர் காதுபடவே கிசுகிசுக்கிறார்களாம். அதனால் வர்ற வாய்ப்புகள் எல்லாம் அணைகட்டி அப்படியே நிக்குது. கந்தா வரட்டும். கால்ஷீட் கேட்டுக்கலாம் என்று கவனமாக ரிவர்ஸ் அடிக்கும் இவர்களை நினைத்து கண்ணீர் நனைகிறாராம் மித்ரா.

இப்படிதான் கண்ணு சரியில்லே, மூக்கு சரியில்லே என்று வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சுனைனா இன்றைய தேதியில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பெரிசுங்க கூடவே நடிக்கிறாரே, நமக்கு சரிபட்டு வருமா என்று இளம் ஹீரோக்களால் ஒதுக்கப்பட்ட நயன்தாரா, இன்றைய தேதியில் ஒரு கோடி சம்பளத்தை நெருங்கிவிட்டார். அதனால....?

என்ன அதனால? மித்ராவை இப்பவே புக் பண்ணினா அது எதிர்கால இன்வெஸ்மென்ட்டா கூட இருக்கலாம்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

  1. சரியாக சொன்னீர்கள் தலைவா உண்மையிலேயே மித்ரா திறமையான பெண் தான.

    ReplyDelete
  2. I have seen her no: of interviews to malayalam channels after seeing her mind blowing appearence in kaavalan.Such a brilliant interviews that i had never seen before in other leading actor or actresses.She is very natural and less sophsticated in her life.By seeing her interview itself we can able to know about her whole nature.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.