ஒருநபர் எந்தவொரு இனம், மதம்மாக இருந்தாலும் இந்த மண்ணில் பிறக்கும் சகலருக்கும் இலங்கையர் என்ற ஒரே ஒரு அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாடு இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்ற பொதுத்தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழாகட்டும், சிங்களமாகட்டும், முஸ்லிமாகட்டும், நாம் இந்த நாட்டில் பிறந்தோம், நாம் இலங்கையர் என்ற அடையாளமே போதுமானதாக இருக்கவேண்டும் இன, மத, பிரதேசவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என குறிபிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு விவசாய மாவட்டம். ஆகவே இந்த மாவட்டத்தின் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் இங்கு சுற்றுலாதுறையையும் ஊக்குவிக்க வேண்டும். இதனடிப்படையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு உள்ளூர் வானுர்தி சேவையை ஆரம்பிக்குமாறு தாம் கோரியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.