![](http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/trisha04.jpg)
செல்லுமிடமெல்லாம் வில்லங்கம்! இதுதான் த்ரிஷாவின் ஸ்டைல் போலிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஒட்டல் ஒன்றில் கிரிக்கெட் வீரர் பதானியுடன் மல்லு கட்டினார் த்ரிஷா என்ற செய்தி வெளியானது. இது திட்டமிட்டே கிளப்பிவிடப்பட்ட வதந்தி. இனிமேலும் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் த்ரிஷ்.
கடந்த சில மாதங்களாகதான் த்ரிஷாவை பற்றிய பெரிய வதந்திகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்பு வாரம் ஒரு வதந்தி, பத்து நாளுக்கொரு பஞ்சாயத்து என்ற ஸ்டைலில்தான் நடந்து வந்தார் த்ரிஷா. பலரும் அட்வைஸ் செய்ததால் சற்றே அதற்கெல்லாம் ஓய்வு கொடுத்திருந்தார். இப்போது பதானி விவகாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, நான் இன்னும் சென்னையிலேதான் இருக்கேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
“நான் அவரை பார்த்தது கூட கிடையாது. உண்மை அப்படியிருக்க, இப்படி ஒரு வதந்தியை ஏன் கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியலே” என்று அப்பாவியாக மறுக்கம் த்ரிஷா, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட போகிறாராம். சாயங்காலம் ஏழு மணிக்கு மேலே வீட்டை விட்டு வெளியே போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பாரோ? அதெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறாராம். தனது வழக்கறிஞருடன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.