மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஐஸ்வர்யாராய் எச்சரிக்கை! மீடியா அதிர்ச்சி

ஐஸ் எப்போதுமே ஜில் என்றுதானே இருக்கும்? அந்த எண்ணத்தில் கொதிக்க கொதிக்க கோபத்தை ஊற்றியிருக்கிறார் ஐஸ்வர்யாராய். திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் நினைத்திருந்தது உலகம். ஆனால், அதன்பிறகும் அவர் இந்தியிலும், தமிழிலும் நடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம். அதற்கு அவரது மாமனார் குடும்பத்தினர் சம்மதித்திருப்பது அதைவிட ஆச்சர்யம்.

இந்நிலையில், தனது அழகை பராமரிக்க வேண்டும் என்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை என்று மீடியாக்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. இதனால் கடும் கோபமுற்ற ஐஸ், தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் வழக்கறிஞர் கூறியிருப்பது என்ன?

ஐஸ்வர்யாராய் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. பொய்யானவை. இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக அவரை பற்றி அவது£றாக செய்தி வெளியிட்டால் வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தன் திருமணத்திற்கு பிறகும் அவர் நடித்து வருகிறார். அவர் ஒரு நாடறிந்த நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும் மருமகளாகவும் இருந்து இந்திய சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஹா... பூவுக்குள் பூகம்பம்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.