மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்

இலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக‌ரித்து வருகிறது. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து அதற்கு மதிப்பளிக்கும் அவர்களுக்கு முதலில் நமது நன்றிகள்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெய‌ரில் அறியப்பட்டாலும், இந்த விருது விழாவில் இந்திப் படங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்திப் படங்களுக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

அதேநேரம் விழாவின் மதிப்பை அதிக‌ரிக்கும் பொருட்டு இந்தி அல்லாத பிற மொழி கலைஞர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். அவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள்.

ஒருமுறை இந்த விழாவில் கலந்து கொண்ட மம்முட்டி, இந்திய திரைப்பட விழா என்று பெயர் வைத்து இந்திப் படங்களுக்கு மட்டும் விருது கொடுப்பதை மேடையிலேயே சுட்டிக்காட்டி கண்டித்தார். ஆனாலும் விழா நடத்துகிறவர்களின் தடித்த தோலை அந்த கண்டனம் ஊடுருவிச் செல்லவில்லை.

இலங்கையில் நடக்கும் விழாவுக்கும் மம்முட்டிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பை நிராக‌ரித்த மம்முட்டி, தமிழர்களின் உணர்வை தான் மதிப்பதாகவும், அவர்களின் மனதை புண்படுத்தும் ஒரு நிகழ்வில் நான் பங்கேற்பேன் என்று எப்படி எதிர்பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் அழைப்பு அனுப்பப்பட்ட மோகன்லால், புனித் ரா‌ஜ்குமார் போன்ற நடிகர்களும் விழாக் குழுவின‌ரின் அழைப்பை நிராக‌ரித்துள்ளனர்.

யார் எது செய்தாலும் விழாவில் பங்கேற்பேன் என்று கச்சைகட்டும் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோ‌ரின் படங்களை புறக்கணிக்க தமிழர்கள் மட்டுமின்றி பாசிசத்தில் நம்பிக்கையில்லாத அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

4 நான் சம்பாதிச்சது:

  1. நீங்கள் இந்தியாவில் இருந்து கத்திக் கொண்டிருந்தால் ஈழம் கிழடைத்து விடப் போவதில்லை.நீங்கள் எல்லோரும் இலங்கைக் கு வந்து பார்க்க வேண்டும்.இங்கு என்ன நடந்தது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று.பாசிசப் புலிகளின் ஆட்சியில் இருந்து இப்போதுதான் விடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.என்னைப் பொறுத்தவரை இந்திய தமிழ் சினிமாக்களை அரசாங்கம் இலங்கையில் தடை செய்ய வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்வதற்கு எங்களது நாட்டு அரசாங்கம் தமிழ் நாட்டுக்காரர்களைப் போல் போக்கிரிகள் அல்ல.ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.தனி நாடு என்பதை விட எல்லோருக்ககும் எல்லாம் கிடைக்கவேண்டும். அவ்வாறான ஆட்சியை எங்கள் மேன்மை தங்கிய சனாதிபதி அவர்கள் நிச்சயம் ஏற்படுத்துவார்.அப்போது உங்களைப் போன்னறவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்ததைப்போல இருக்கும்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நடுநிலை பேனும் எம் தளத்தில் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளிக்கிறோம். கருத்துக்களை பகிரும் போது ஆபாச சொற்களை தவிர்க்கும் படி தயவாக வேண்டுகிறோம். ஒரு நண்பரின் ஆபாசம் கலந்த சொல் நீக்க பட்டு அவரது கருத்து இங்கு பிரசுரிக்க படுகிறது.

    // Anonymous said...

    Hi Mr Jana!
    What the hell u know about LTTE? If u want u can stay with Sinhala Goverment! Jana u what is goin on in Jaffan? How many kidnap n Rappin? Who is doin these things? ****** If it is happend 2 ur sister u will write like this?
    Finaly, எங்கள் மேன்மை தங்கிய சனாதிபதி!!!!!!!! he is a ****** ******.//

    ReplyDelete
  4. திருவாளர் வணக்கம்
    யாழ்ப்பாணத்தில் யாரால் பிரச்சனை ஏற்பட்டது.ஆளுக்கொரு கட்சியும் சகோதர படுகொலைகளையும் மறந்து விட்டீர்களா ? அல்லது இந்தியப்படை எமது பெண்களை சூரையாடியதைத்தான் மறந்து விட்டீர்களா?சிங்கள அரசை சரி என்று கூற வரவில்லை.போராட்டம் யாராக இருந்தாலும் உயிரிழப்புக்களைத்தான் ஏற்படுத்தும். அமைதி வழியே என்றும் சிறந்தது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.