மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நமிதாவின் நன்றிக்கடன் பெருசு

இலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பலரும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இவர்களில் மணிரத்னம், அர்ஜுன் ராம்பால், ஐஸ்வர்யாராய் ஆகியோர் முக்கியமானவர்கள்.

ர‌ஜினி, கமல் ஆகியோர் யாரும் கருத்து கூறும் முன்பே இலங்கைப் பட விழாவுக்கு வந்த அழைப்பை நிராக‌ரித்தனர். இவர்களுடன் நமிதாவும் இணைந்திருக்கிறார்.

இலங்கை திரைப்பட விழாவின் தொடக்க நாளில் நடனமாட விழா ஏற்பாட்டாளர்கள் நமிதாவை அணுகினர். இதற்காக பெரும் தொகையும் பேசப்பட்டது. ஆனால் இந்த அழைப்பை நமிதா நிராக‌ரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடுதான் எனக்கு சோறு போட்டது. என்னை வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என அதில் தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.