மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்

காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான இந்த ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது.

கதையில் நிறைய டெவலப் செய்ய வேண்டியிருந்ததால் இந்தியனி’ல் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு கமல்கிட்ட போனால் கதையில் இருவரும் சமாதானம் அடையவில்லை.


இந்த நிலையில் ஷாருக்கான் கூப்பிட்டு தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணச்சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர்.

தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், கதையை முழுமை படுத்திட்டு வாங்க என்று சொன்னார். கதை முழுமை படுத்த டயம் பிடித்ததால் ரஜியை வைத்து சிவாஜியை முடிடுத்திட்டார்.

பின்பு, முழுமை படுத்துறேன் என்று பட்ஜெட்டை ஏகத்துக்கும் ஏத்திவிட்டு கதையை முழுமைபடுத்தியிருந்தார் ஷங்கர்.

அதிர்ச்சியடைந்த ஷாருக், பட்ஜெட் குறைவாக இருக்கும்படி கதையை மாற்றி அமையுங்க என்று சொன்னதும் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டார் ஷங்கர்.

தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்தார். அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, ஷாருக் கடுப்பாகி மவனே நீ ரோபோ டைட்டிலேயே நினைச்சுப்பார்க்கக்கூடாது என்பது மாதிரி ரோபோ ரோபோன்னு ஆயிரத்தெட்டு ரோபோ டைட்டிலை பதிவு செய்துவிட்டார்.
யாருக்கிட்ட...அதுக்கு வேற எவனாச்சும் பாரு என்பது மாதிரி எந்திரன்’கிளம்பியாச்சு.

120 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராய்,ஏ.ஆர்.ரகுமான் என்று ராக்கெட் வேகத்தில் கிளம்பியாச்சு.

பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டாலும் படத்தின் 60சதவிகித படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி,சிறுசேரி,மயிலாப்பூர் சிட்டிசெண்டர், கானாத்தூர் மாயாஜால், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

2010ல் ஜனவரி-1 அல்லது பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது எந்திரன்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று எந்திரன் தரப்பினர் சொல்லிவருவது தெரிந்த விசயம்.

மூன்றாவதாகவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதுதான் எந்திரன் என்கிறார்கள்.

அந்த நாவல்தான் கதைக்கு எனர்ஜியாம். அதனால்தான் படம் முழுக்கவே க்ளைமாக்கிஸின் பரபரப்பு இருக்குமாம்.

எந்திரனுக்காக தழுவப்பட்ட அந்த மூன்றாவது முக்கியமான நாவல் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு நாவல் என்கிறார்கள்

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.