மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஈரமில்லாத ‘ஈரம்’ ஆதி!

“ஆதியோட பாதி முகத்தை முன்னாடி பார்த்தேன். மீதி முகத்தை இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப டேஞ்சர்பா...” இப்படி அதிர்ச்சியோடு புலம்பிக் கொண்டிருப்பது யாரோ அல்ல. ஆதியை தமிழில் அறிமுகப்படுத்திய டைரக்டர் சாமி. ஒண்ணு மண்ணுமா இருந்தாங்களே, இப்போ என்னாச்சு இவங்களுக்குள்ளே?

திடீர்னு கொம்பு முளைச்சிருச்சு ஆதிக்கு. அதுதான் பிரச்சனை! தெலுங்கில் 200 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார் ஆதியின் அப்பா. ஆனால், தனது விருப்பம் தமிழில் அறிமுகம் ஆவதுதான் என்று காத்திருந்தார் ஆதி. அந்த நேரத்தில்தான் மிருகம் கதையை சொல்லி ஆதியை தமிழுக்கு கொண்டு வந்தார் சாமி. அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முன்னணி நடிகர்கள் கூட சாமியின் படத்தில் நடிக்க விரும்பினார்கள். ஆனால், எனது அடுத்த படத்திலும் ஆதிதான் ஹீரோ என்று சொல்லி தனது சரித்திரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் சாமி. அந்த படம் முடிவதற்குள் ஷங்கரின் ஈரம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது ஆதிக்கு. சரித்திரம் படப்பிடிப்பு நேரத்தில், தனது அடுத்த படத்திலும் நீயே நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சாமி, அதற்கு அட்வான்சாக இரண்டு லட்சத்தை கொடுத்தாராம்.

சரித்திரம் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதால் இடையில் தனது சொந்தப்படத்தை துவங்கலாம் என்று எண்ணிய சாமி, ஆதியிடம் கால்ஷீட் கேட்டால் “இப்போது தர முடியாது” என்று கூறிவிட்டாராம். “சரி போகட்டும். கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுங்கள்” என்று கேட்டதற்கு, ஒருமையில் பேசிய ஆதி, “தர முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ, செஞ்சுக்க...” என்கிறாராம்.

மீண்டும் முதல் பாராவை படிக்கவும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.