
ஒரு படத்தில் நடிப்பது, பிறகு ஆறு மாதத்துக்கு கோடம்பாக்கத்தை எட்டியே பார்க்காமல் விலகி இருப்பது. கடந்த பல வருடங்களாக இப்படிதான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது திரையுலக வாழ்க்கை. அசோகா படத்துக்குப் பிறகு பிரேமை சென்னையிலேயே பார்க்க முடியவில்லை.
ஏறக்குறைய அனைவரும் அவரை மறந்த நிலையில் மீண்டும் அவரைப் பற்றி செய்தி. புதிய படத்தை விரைவில் தொடங்கயிருக்கிறாராம்.
படத்துக்கு வழிப்போக்கன் என்று பெயர் வைத்திருக்கிறார். எப்போதும்போல படத்தை இயக்கி பிரேமே ஹீரோவாக நடிக்கிறார். படத்தை தயாரிப்பது இந்திரா பிரேம். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் கிராமத்து கதையை பாசம், காதல், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் கலந்து சொல்லப் போகிறாராம்.
அதாவது வழக்கமான கமர்ஷியல் மிக்ஸ். அசத்துங்க ஜி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.