Tuesday, October 13, 2009

> பிரேமின் வழிப்போக்கன்

நாடாறு மாதம் காடாறு மாதம் என்பார்களே... அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ பிரேமுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

ஒரு படத்தில் நடிப்பது, பிறகு ஆறு மாதத்துக்கு கோடம்பாக்கத்தை எட்டியே பார்க்காமல் விலகி இருப்பது. கடந்த பல வருடங்களாக இப்படிதான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது திரையுலக வாழ்க்கை. அசோகா படத்துக்குப் பிறகு பிரேமை சென்னையிலேயே பார்க்க முடியவில்லை.

ஏறக்குறைய அனைவரும் அவரை மறந்த நிலையில் மீண்டும் அவரைப் பற்றி செய்தி. புதிய படத்தை விரைவில் தொடங்கயிருக்கிறாராம்.

படத்துக்கு வழிப்போக்கன் என்று பெயர் வைத்திருக்கிறார். எப்போதும்போல படத்தை இயக்கி பிரேமே ஹீரோவாக நடிக்கிறார். படத்தை தயா‌ரிப்பது இந்திரா பிரேம். ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் கிராமத்து கதையை பாசம், காதல், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் கலந்து சொல்லப் போகிறாராம்.

அதாவது வழக்கமான கமர்ஷியல் மிக்ஸ். அசத்துங்க ‌ஜி.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.