
விஜய்க்காக லிங்குசாமி ஒரு கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தார். விஜய்யிடம் கதையை கூறும்முன் பத்திரிகைகளில் இந்த செய்தியை பரவவிட்டார் லிங்கு. இந்த யுக்திக்கு கைமேல் பலன்.
விஜய்யே லிங்குசாமியை கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார். கதையை கேட்டவர் அங்கேயே அப்போதே சேர்ந்து பண்ணுவோம் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.
லிங்குசாமியின் அடுத்தப் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள். சுறாவில் நடித்து வரும் விஜய் அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிப்பாரா இல்லை லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுப்பாரா என்று குழம்பிப் போய் தலையை தடவிக் கொண்டிருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.