மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சபாஷ் ச‌ரியான ஆள் K.S ரவிக்குமார்.

செ‌ன்னையில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழா இந்த முறையும் சிறப்பாக நடந்துள்ளது. ஐசிஏஎஃப் இதற்காக முதலீடு செய்யும் உழைப்பும், அர்ப்பணிப்பும் வணக்கத்துக்கு‌ரியது.

ஆனால் நம்மை உறுத்தக்கூடிய ஒரு செய்தியும் உள்ளது.

திரைப்பட விழாவில் திருட்டு விசிடி ஒழிப்பை முன்னிட்டு லோகோ ஒன்றை வெளியிட்டனர் 'ஸே நோ டூ பைரஸி' என்ற அந்த லோகோவை வெளியிட்டது இயக்குனர் கே.எ‌ஸ்.ரவிக்குமார். திருட்டு விசிடி-யில் படம் பார்க்கக் கூடாது என்பது எவ்வளவு ச‌ரியோ அதைவிட முக்கியமானது, திருட்டு விசிடி-யில் இன்னொருவ‌ரின் படத்தைப் பார்த்து அவரது அனுமதி இல்லாமலே அதனை காப்பி அடிப்பது.

வசாபி திரைப்படத்தைப் பார்த்து அப்படியே கே.எஸ்.ரவிக்குமார் அடித்த காப்பிதான் ஜக்குபாய். திருட்டு விசிடி-யில் படம் பார்க்கக் கூடாது என்று சொல்ல மிகச் ச‌ரியான நபர்.

கேரளாவில் இந்த மாதம் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்கநாள் விழாவில் முதல்வர் அச்சுதானந்தன், செய்தித்துறை அமைச்சர் பேபியுடன் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் சர்வதேச விருதுகள் பெற்றவரான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், பழம் பெரும் கவி ஓஎன்வி குரூப் போன்றவர்கள். மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கோ, கவர்ச்சி கன்னிகளுக்கோ அங்கு இடமில்லை. ஹானரபிள் சீஃப் மினிஸ்டர் என்பதற்கு மேலாக அச்சுதானந்த‌னின் பெயரை அங்கு யாரும் பயன்படுத்தவுமில்லை. இங்கோ மேடையில் கச்சே‌ரி நடத்தியவர்கள் குஷ்பு, சுஹாசினி...

நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.