மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கொலை மிரட்டல் புகார் சிம்பு மீது.

நடிகர் சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் ஆகியோர் மீது திருச்சி வியோகஸ்தர் எஸ்.பி.ராமமூர்த்தி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு வெளியான மோனிசா என் மோனாலிசா படத்திற்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் ராமமூர்த்திக்கு 31 லட்சங்கள் தர வேண்டுமாம். இந்தப் பணத்தை அவர் பலமுறை கேட்டும் டி.ராஜேந்தர் தரவில்லையாம். இதற்காக எட்டு வருடங்கள் கழித்து 2007ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ராமமூர்த்தி.

இப்படி பல வருட பழக்கமுள்ள விஷயத்திற்காக டி.ஆ‌ரின் வீட்டிற்குச் சென்ற போது ஆட்சியே எங்க பக்கம்தான் என்று டி.ஆரும், சிம்புவும் அடித்து விரட்டினார்களாம். ஆட்சி மாறிய பிறகு, எந்த ஆட்சி வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உதைத்து அனுப்பினார்களாம். இவர்கள் இருவரால் எனது உயிருக்கு ஆபத்து என்று இருவர் மீதும் சென்னை மாநகர காவல்துறை ஆணைய‌ரிடம் புகார் தந்திருக்கிறார் ராமமூர்த்தி.

இந்த பன்னிரண்டு வருட பழக்கமுள்ள ராமமூர்த்தியின் திரைக்கதையை காவல்துறை நம்புமா என்பதே கேள்விக்குறி என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.