மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நடிகர் தற்கொலை

ரயில் பயணங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீநாத் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது ஐம்பது.

டி.ராஜேந்த‌ரின் ரயில் பயணங்கள் படத்தில் அறிமுகமான ஸ்ரீநாத் மலையாளப் படங்கள் சிலவற்றிலும் நடித்தார். அதில் மம்முட்டி, முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்த ஒரு சிபிஐ டை‌ரி குறிப்பு முக்கியமானது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோத‌ரி சாந்தி கிருஷ்ணாவை ஸ்ரீநாத் திருமணம் செய்து கொண்டார். சாந்தி கிருஷ்ணாவும் ஒரு நடிகை. பன்னீர் புஷ்பங்களில் நடித்திருக்கும் இவர் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர். சிறிது காலம் தனிமையில் வாழ்ந்த ஸ்ரீநாத் வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீநாத் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மோகன்லாலின் ஷிகார் என்ற படத்தில் நடிப்பதற்காக எர்ணாகுளம் வந்த ஸ்ரீநாத் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் போலீஸ் முன்னிலையில் அறைக் கதவை திறந்து பார்த்தனர். உள்ளே கை அறுபட்ட நிலையில் ஸ்ரீநாத் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெ‌ரிவித்தனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.