மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல்ஹாசன் மீதான வழக்கு தள்ளுபடி

தசாவதாரம் படம் உலகமெங்கும் வெளியாகி பெரும் லாபத்தை சம்பாதித்தது. உலக தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பும் செய்துவிட்டனர். இருந்தும் படம் மீதான வழக்கு மட்டும் தூவானம் போல் தூறிக் கொண்டிருந்தது.

தசாவதாரம் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெ‌ரியும். கமல்ஹாசனின் கதையையும், செந்தில்குமா‌ரின் கதையையும் படித்துப் பார்த்த நீதிபதிகள் இரண்டு‌க்கு‌ம் சம்பந்தமில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் கமலும், அவரது மேனேஜரும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புதுப் புகார் தந்தார் செந்தில்குமார். புகார் தந்தும் அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது செந்தில்குமா‌ரின் குற்றச்சாற்று.

இதனை மறுத்த வழக்கறிஞர், கமல்ஹாசன் மீதும் அவரது மேனேஜர் மீதும் எந்த‌த் தவறும் இல்லை, இதுவொரு பொய் வழக்கு என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றச்சாற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.