தமிழ்ப் படம் என்றதும் முதல்வரின் பேரன் தயாரித்த படம் என்று துணுக்குற வேண்டாம். தடை போடும் நிலைமை அவர்களுக்கு ஏற்படாது என்பதை நாடறியும்.
இந்தத் தடை தமிழில் 12 தினங்களில் தயாரான சுரேஷ் ஜோகிமின் சிவப்பு மழை படத்துக்கு.
இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன் இலங்கை மந்திரியின் மகளை கடத்துகிறான். இந்தக் கதையை பாசிஸ ராஜபக்சேயின் அரசு எப்படி திரையிட அனுமதிக்கும்?
இந்தத் தடையின் காரணமாக ஈழத் தமிழர்களின் உணர்வை அப்படியே இப்படம் பிரதிபலித்திருப்பதாக யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இந்தப் படத்தை அந்நியமாகவே பார்க்கிறார்கள். கருத்துப்பிழைகள் ஏராளம் உள்ளதுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணம்.
தமிழ்நாட்டிலும் இந்த கின்னஸ் சாதனைப் படத்துக்கு வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.