
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேவுக்கு சர்வதேச சமூகம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவரைப் போர் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் கை கோர்த்துள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை சென்ற அமிதாப் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்து விழா குறித்து பேசியதுடன் சிங்களர்களை வெகுவாகப் புகழ்ந்து பேட்டியளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அமிதாப் விருது விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் இயக்கத்தினர் கடந்த ஞாயிறன்று அமிதாப்பின் வீட்டு முன் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீட்டிலிருந்த அமிதாப் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து விவரங்களைத் தெரிந்து கொண்டார்.
இதுகுறித்து தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் அமிதாப், தமிழர்களின் சென்டிமெண்ட்டை தான் மதிப்பதாகவும், விருது விழா நடத்துகிறவர்களிடம் இது குறித்து பேசயிருப்பதாகவும், விருது விழா குறித்த முடிவை மறு பரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமிதாப்பச்சனின் இந்த முடிவுக்கு சீமான் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.