மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரசாந்த் தடகளப் போட்டியில் !

புதிய ‘மலையூர் மம்பட்டியான்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய இரண்டு படங்களைத் தவிர நடிகர் பிரசாந்துக்கு வேறு படங்கள் இல்லை. அதிலும் ‘மலையூர் மம்பட்டியான்’ தனது சொந்த தயாரிப்பு.

வழக்கு சம்பந்தமான காலங்களில் அடிக்கடி மீடியாவில் தென்பட்ட பிரசாந்த், தற்போது நடிப்பு ஒன்றையே குறிக்கோளாக‌‌க் கொண்டிருப்பதோடு, அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

அடு‌த்த மாத‌ம் ஆசிய கிராண்ட்பி‌ரிக்ஸ் தடகள போட்டிக‌ள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கின்றன. அந்த‌ப் போட்டிக்கான லோகோவை நடிகர் பிரசாந்த் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்தார். நாற்பது நாடுகளைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர்.

இவ்விழாவில் இப்போட்டிக்கான அமைப்புகுழு சேர்மன் தேவாரம், நீலசிவலிங்கம், வைத்தியநாதன் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனைகளான ஷைனி வில்சன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுல கலந்துக்க அப்பா சொல்லி அனுப்பிச்சாரா... நீங்களா முடிவெடுத்து வந்தீங்களா பிரசாந்த்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.