
சித்திக் மலையாளத்தில் இயக்கிய பாடிகார்ட் படம் அங்கு சுமாரான வரவேற்பை பெற்றது. திலீப், நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்தை தமிழில் விஜய்யை வைத்து சித்திக் இயக்கியிருக்கிறார்.
விஜய்யின் கடந்த ஆறு படங்கள் எங்களுக்கு நஷ்டத்தையே தந்தன என விநியோகஸ்தர்கள் குற்றம்சாற்றியிருக்கும் நிலையில் காவலன் திரைக்கு வருகிறது.
தீபாவளிக்கு வர வேண்டிய இத்திரைப்படம் சில காரணங்களால் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
படம் இன்னும் முடியாத நிலையில் காவலனின் வெளிநாட்டு உரிமையை தந்த்ரா பிலிம்ஸ் ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.