
ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும் என ரஜனிகாந்த் தெரிவித்தார். திருப்பதிக்கு வந்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
பூரண உடல்நலம் பெற்ற ரஜினி நேற்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். சாமி கும்பிட்டபின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கேள்விகள் பெரும்பாலும் ராணாவை பற்றியதாகவே இருந்தன.
இதற்குப் பதிலளித்த ரஜினி, ராணா தொடங்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும். காரணம் இது பிரமாண்ட படம். காஸ்ட்யூம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எப்படியும் ஜனவரி மாதம் படம் தொடங்கிவிடும் என்றார்.
பேட்டியின் போது அவர் தனது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.