மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சர்ச்சையில் ப்‌ரியாமணி சென்னைக்கு வருவாரா என்பது சந்தேகம்.

ப்‌ரியாமணி தேசிய விருது வாங்கிய பிறகும் தமிழ் சினிமா அவ‌ரிடம் மாற்றான் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது. ஆனால் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களில் தொடர்ச்சியாக முத்தழகியை பார்க்க முடிகிறது. தமிழில் வாய்ப்பு இல்லாததால் சற்று வருத்தத்தில் இருந்த அவரை வெறுப்படைய வைத்துள்ளது சமீபத்தில் கிளம்பிய பலாத்கார வதந்தி.

செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றியதை சென்னை நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். ஆல்கஹால் ஆறாக ஓடிய இந்தப் பார்ட்டியில் மப்பும் மந்தாரமுமாகவே அனைவரும் காட்சியளித்திருக்கிறார்கள். ப்‌ரியாமணிக்கு மட்டும் ஓவர் டோஸாகிவிட்டதாம்.

அரைகுறை மயக்கத்தில் இருந்தவரை ஐந்து பேர் கும்பல் இஷ்டத்துக்கு விளையாடியதாக பார்ட்டிக்கு மறுநாளே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த‌ச் செய்தி ஹைதராபாத்தை தாண்டி ப்‌ரியாமணியின் காதுகளையும் எட்டியது. அவ்வளவுதான்.. நான் போட்டி முடிஞ்சதுமே ஃபிளையட் ஏறிட்டேன், பார்ட்டியில் கலந்து கொள்ளவே இல்லை. பிறகெப்படி இந்த மாதி‌ரி சீப்பாக வதந்தி கிளப்புகிறார்கள் என்று காதில் புகை வரும் அளவுக்கு பொ‌ரிந்திருக்கிறார்.

இனி தமிழில் நடிக்கக் கூப்பிட்டாலும் சென்னைக்கு வருவாரா என்பது சந்தேகம்தான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.