மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எ‌ரிச்சலில் சிம்பு நயன்தாரா காதல் புட்டுகிட்டதால்

நீங்கள் இஸ்ரோ தலைவர் என்று வைத்துக் கொள்வோம். ஆர்ப்பாட்டமாக நீங்கள் தயா‌ரித்த ராக்கெட் கடலில் விழுந்துவிட்டது. அதன் பிறகு பல ராக்கெட்களை நீங்கள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள். ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் கடலில் விழுந்த ராக்கெட் பற்றி கேள்வி கேட்டால் எ‌ரிச்சல்பட மாட்டீர்கள்? சிம்புவும் அப்படியொரு எ‌ரிச்சலில்தான் இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் கடலில் விழுந்த ராக்கெட்தான் நயன்தாராவின் காதல். அதன் பிறகு எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். ஆனாலும் ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் நயன்தாராவிடம் சிம்பு கால்ஷீட் கேட்டார், ஒரு பாடலுக்கு ஆட டேட்ஸ் கேட்டார் என்று எழுதி விடுகிறார்கள். அதிலும் நயன்தாரா, பிரபுதேவா காதல் கடலில் விழுந்ததும் சிம்புவின் ராக்கெட்டை கடலில் இருந்து தூக்குவதற்கு நமது ஆட்கள் படுகிற பிரசவ வேதனை இருக்கிறதே... வேட்டை மன்னனில் நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடுகிறார், வாலு படத்துக்கு நயன்தாராவிடம் சிம்பு கால்ஷீட் கேட்டார்...

சிம்புவுக்கே இது அடுக்கவில்லை. அவங்க காதல் புட்டுகிட்டா என்னை ஏன் இப்படி படுத்துறீங்க என்று எ‌ரிச்சலில் புகைந்திருக்கிறார்.

பாவம், சிம்புவை விட்டுடுங்க. கடலில் ராக்கெட் விழுந்தவனுக்குதான் தெ‌ரியும் அதன் வலி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.