கர்ணன் போட்டப் போடில் கதிகலங்கிக் கிடக்கிறது திரையுலகம். படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸுக்கு இதுவரை லாபம் நான்கரை கோடிக்கும் மேல். செட்டிலாயிட்டோம்டா என்று கூத்தாடுகிறார் படத்தை வெளியிட்டவர்.
இந்த குபேர வசூல் காரணமாக சிவாஜி, எம்ஜிஆரின் படங்கள் அடுத்தடுத்து டிஜிட்டலில் வெளிவருகின்றன. முதல்கட்டமாக இருவரின் தலா இரு படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறுகின்றன. சிவாஜியின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம். எம்ஜிஆரின் அரசகட்டளை, படகோட்டி. ஆயிரத்தில் ஒருவன் சில காரணங்களால் டிஜிட்டலுக்கு மாறுவது தாமதமாகிறது.
கர்ணன் வசூலை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்று கங்கணம்கட்டி திரிகிறார்கள் எம்ஜிஆர் பக்தர்கள். அரசகட்டளையையும், படகோட்டியையும் ஆளுக்கு நூறுமுறை பார்த்தாலும் ஆச்சரியமில்லை. பழைய படங்கள் வைத்திருப்பவர்களின் பாக்கெட் பண மழையால் நிறையப் போகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.