Friday, April 20, 2012

> இன்று ஏழு ( 7 ) படங்கள் வெளியாகின்றன.

இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகச் சொற்பப் படங்களே லாபம் கண்டன. மினிமம் பட்ஜெட்டில் தயாரானப் படங்கள் அனேகமாக எதுவுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை. ச‌ரியாகச் சொன்னால் அனைத்தும் அட்டர் ப்ளாப்.

இந்நிலையில் இன்று ஏழு படங்கள் வெளியாகின்றன. இந்து, சூ‌ரியன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி காணாமல் போன பவித்ரனின் மாட்டுத்தாவணி நாளை வெளியாகிறது. பல வருடங்கள் தயா‌ரிப்பில் இருந்த படம் இது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பின்னணியில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

தக்காளி சீனிவாசனின் திகில் படம் அடுத்தது இன்று திரைக்கு வருகிறது. திகில் படமான அம்புலி நல்ல வரவேற்பைப் பெற்றதால் அடுத்தது படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசர், ஸ்ரீமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சரத்குமார் மலையாளத்தில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தப் படம் நரசிம்மன் ஐபிஎஸ் என்ற சரத்குமா‌ரின் கேரக்டர் பெய‌ரில் வெளியாகிறது. மலையாளத்தில் பரவலான கவனிப்பை பெற்ற படமிது.

ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி முதல் முதலாக நடித்திருக்கும் படம் ஊலலலா. வியாபார சிக்கல் காரணமாக ஒரு வருடத்திற்கு மேல் பெட்டியில் இருந்த இந்தப் படமும் நாளை ‌ரிலீஸாகிறது. ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை வைத்தே ஜோதி கிருஷ்ணா தனது நடிப்பு வாழ்க்கையை தீர்மானிக்க உள்ளார்.

இவை தவிர பத்மாலயா சினி விஷன்ஸின் மை, விவகாரம், ஹாலிவுட் டப்பிங்கான பேட்டில்ஷிப் ஆகிய படங்களும் இன்று வெளியாகின்றன. இதில் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்கள் எதுவுமில்லை என்பது ஒருவகையில் ஏமாற்றம்தான்.
மாட்டுத்தாவணி, அடுத்தது, ஊலலலா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.