Thursday, May 17, 2012

> அ‌‌ஜீத் ஆர்யா படம் மும்பையில் தொடங்கிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தல் அ‌‌‌ஜீத் நடிக்கும் படத்தின் வேலைகள் மின்னல் வேகத்தில் நடக்கின்றன. மே 31 பில்லா 2 வெளியாகும் முன்பே படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் அ‌‌‌ஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆர்யாவுக்கு முக்கியமான வேடம். தாப்ஸீயையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை மும்பையில் வரும் மே 31 தொடங்குகின்றனர். எழுத்தாளர்கள் சுபா படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். விஜய்யின் துப்பாக்கிப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. தற்போது அ‌‌‌ஜீத் மும்பை கிளம்புகிறார்.

ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயா‌ரிப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயா‌ரிப்பதாக தெ‌ரிவித்துள்ளனர். ரத்னம் படங்களின் தோல்விக் கணக்கை இந்தப் படத்தில் விநியோகஸ்தர்கள் தீர்த்துக் கொள்ள முயலக்கூடும் என்பதால்தான் புதிய கம்பெனி பெயரை நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.