மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


தமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே தாவுமாம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

தனிமரம் தோப்பாகாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

வேலிக்கு ஓணான் சாட்சி.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

நிறைகுடம் தளம்பாது.

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

அகத்தினழகு முகத்தில் தெரியும்

கழுதை அறியுமா கற்பூர வாசனை?

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.