Friday, July 31, 2009

> A.R ரஹ்மானுக்கு எதிராக கொதிக்கும் சங்கம்.புறக்கணிக்கலாமா?

ரஹ்மானுக்கு எதிராக முதல் கல் வீசப்பட்டிருக்கிறது. அதுவும் மிக முக்கியமான சங்கம் ஒன்றின் சார்பாக. இது காதில் விழுந்தாலும், விழாத மாதிரி அமைதி காக்கிறது ரஹ்மான் தரப்பு.

உலக அரங்கில் தமிழனின் பெயரை உரக்க ஒலித்தவர் ரஹ்மான். அவர் வாங்கிய ஆஸ்கர் விருதுக்காக சென்ற இடமெல்லாம் பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கும் அவர், “கொஞ்சம் வேலை செய்ய விடுங்கப்பா” என்று ஒதுங்கி ஓடினாலும், பிதுங்கி வழிகிறது அழைப்பாளர்களின் எண்ணிக்கை. எல்லாமே பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள். முடிந்தளவு அந்த விழாக்களில் கலந்து கொள்கிறார் அவரும். இந்நிலையில் தமிழ் திரைப்பட அமைப்புகளின் சார்பாக அவருக்கு இன்னும் பாராட்டு விழா எதுவும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் ரஹ்மான் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை.

யாரும் பாராட்டு விழா நடத்த முன்வரவில்லையோ என்ற வெளித்தோற்றம் இருந்தாலும், “உண்மை அதுவல்ல” என்கிறார் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி. ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததும் நடிகர் சங்கம் சார்பாகவும், இன்னும் பிற சங்கங்களின் ஒத்துழைப்போடும் ஒரு பிராமாண்டமான விழாவை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம். முறைப்படி தேதி கேட்டும் ஒரு பதிலும் வரவில்லையாம் ரஹ்மானிடமிருந்து. ஆனால், “அண்டை மாநிலங்கள் அழைத்தால் முதலில் போய் அதில் கலந்து கொள்ளும் ரஹ்மான், நம்மை புறக்கணிக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்கிறார் ராதாரவி.

பதில் சொல்ல வேண்டிய ரஹ்மான் தரப்பு... கப்சிப்!

1 நான் சம்பாதிச்சது:

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.