
முதல் தொல்லை
இயக்குனர் தனது கொழுந்தியாளை மூன்றில் ஒன்றாக விஷாலுக்கு ஜோடி கட்ட பார்த்து பிரம்ம பிரயத்தனம் செய்தும் விஷாலிடம் நோ ரெஸ்பான்ஸ்.
2வது தொல்லை
தமன்னாவை புக் செய்தார்கள். அவரும் ஒப்புக்கொண்டு டேட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது. தமன்னா விஜய்யின் 50வது படமான உரிமைக்குரலில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் மூன்றில் ஒன்றாக அவர் நடிப்பதை விஜய் அண்டு டீம் விரும்பவில்லை. இதையறிந்த தமன்னா தீரா விளையாட்டுப் பிள்ளையிலிருந்து விலகிவிட்டார்.
3வது தொல்லை
கொழுந்தியாள் குமைந்திட, தமன்னா கம்புநீட்ட, இப்போதைக்கு நீது சந்திராவும் ஸ்ரேயாவும்தான் இயக்குனருக்கு தெம்பு கொடுத்து வருகிறார்களாம். இன்னொரு கதாநாயகிக்காய் தேடல் வேலையில் ஈடுபட்டுள்ளதாம் தீ.வி.பி. டீம். தமிழ்ப் படத்தில் கதைக்கு பஞ்சம் இருக்கும் சரி, இப்போது கதாநாயகிகளுக்குமா? தேவுடா தேவுடா...

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.