மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கதாநாயகிகள் தீராத தொல்லை

மேலே சொன்ன மாதிரி தலைப்பு வைத்திருக்கலாம். அப்புறமென்ன! தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று இயக்குனர் அறிவித்த நாளிலிருந்தே தொல்லைகள் ஆரம்பமாகிவிட்டன.

முதல் தொல்லை
இயக்குனர் தனது கொழுந்தியாளை மூன்றில் ஒன்றாக விஷாலுக்கு ஜோடி கட்ட பார்த்து பிரம்ம பிரயத்தனம் செய்தும் விஷாலிடம் நோ ரெஸ்பான்ஸ்.

2வது தொல்லை
தமன்னாவை புக் செய்தார்கள். அவரும் ஒப்புக்கொண்டு டேட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது. தமன்னா விஜய்யின் 50வது படமான உரிமைக்குரலில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் மூன்றில் ஒன்றாக அவர் நடிப்பதை விஜய் அண்டு டீம் விரும்பவில்லை. இதையறிந்த தமன்னா தீரா விளையாட்டுப் பிள்ளையிலிருந்து விலகிவிட்டார்.

3வது தொல்லை
கொழுந்தியாள் குமைந்திட, தமன்னா கம்புநீட்ட, இப்போதைக்கு நீது சந்திராவும் ஸ்ரேயாவும்தான் இயக்குனருக்கு தெம்பு கொடுத்து வருகிறார்களாம். இன்னொரு கதாநாயகிக்காய் தேடல் வேலையில் ஈடுபட்டுள்ளதாம் தீ.வி.பி. டீம். தமிழ்ப் படத்தில் கதைக்கு பஞ்சம் இருக்கும் சரி, இப்போது கதாநாயகிகளுக்குமா? தேவுடா தேவுடா...

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.