மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அஜீத்தின் குரலில் அசல் பாட்டு?

அண்டங்காக்கா தொண்டைக்காரிகளுக்கு மட்டுமல்ல, அண்டங்காக்கா தொண்டைக்காரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் டைரக்டர்கள்! ஒரு சைஸ்சா ஐஸ் வைக்கிற மெத்தர்டுதான் இது என்றாலும், விக்ரம் மாதிரி ஹீரோக்கள் காட்டில் ஒரே பாராட்டு மழை அடிக்கிறது. எல்லாம் கந்தசாமி படத்தின் கான மழையை பாராட்டிதான்! இப்போது போலவே இனிவரும் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சீயான்.

நேரில் பார்த்துக் கொண்டால் ஒரு ஹலோ சொல்வதோடு நிறுத்திக் கொள்வதும், அதிகபட்சமாக இரண்டு மூன்று வார்த்தைகள் பேசுவதுமாக ஆகிவிட்டது சீயான்-தல இடையிலான நட்பு. இருவரும் ஒரே படத்தில் நடித்திருந்தாலும், ஒரு கட்டத்தில் தலயை முந்திக் கொண்டு ஓட்டம் போட்டார் சீயான். அந்த கால கட்டங்களில் பல்லை கடிப்பதும், நகத்தை துப்புவதுமாக காணப்பட்டார் தல. இருந்த நூலிழை நட்பும் அறுந்து போனது. அதெல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு தல திரும்பியது இப்போதுதான். அதுவும் மீண்டும் ஹிட் கொடுக்க துவங்கியதற்கு பிறகு. சரி, பழச கிண்டி பலகாரம் பொறிக்கறதை விட்டுட்டு மேட்டருக்கு வா என்கிறீர்களா? வந்திருவோம்.

கந்தசாமி படத்தில் விக்ரம் நான்கு பாடல்கள் பாடியதை தொடர்ந்து, அசல் படத்தில் அஜீத்தை பாட வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சரண். கேக்கறதோட சரி. முணுமுணுக்கிற வழக்கம் கூட இல்லாத அஜீத், எதுக்கு சார் வம்பு? என்கிறாராம். தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் சரண்.

எறும்பு ஊற கல்லு தேயுதா? அல்லது எறும்போட காலு தேயுதாங்கிறது போக போகதான் தெரியும்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.