மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மைக்கேல்ஜாக்சன் உயில் வெளியீடு

மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைவதற்கு முன்பு உயில் ஒன்று எழுதி வைத்துள்ளார். 2002 ம் ஆண்டு ஜூலை 7 ந்தேதியிட்டு இந்த உயில் எழுதப்பட்டு உள்ளது. அதில் கலிபோர்னியாவில் உள்ள தனது பண்ணை வீட்டை தனது தாயார் பெயரில் எழுதி வைத்து உள்ளார். இந்த சொத்து மதிப்பு ரூ.2500 கோடி ஆகும்.

மைக்கேல்ஜாக்சனின் 3 குழந்தைகளையும் தனது தாயார் கவனித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் உயிலில் குறிப்பிட்டு உள்ளார்.

தாயார் குழந்தைகளை கவனிக்கவில்லை என்றால் தனது நீண்ட கால நண்பரும் பாடகருமான டயானா ரோல் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் தனது உயிலில் 2 வது மனைவி டெயரா ரோவை புறக்கணிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உயில் மொத்தம் 5 பக்கங்களில் எழுதப்பட்டு உள்ளது. இதை லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம் எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. அவரது பண்ணையில் தான் அடக்கம் செய்யப்பட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது வேறு இடத்தில் அடக்கம் செய்ய போவதாக அறிவித்து உள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.