மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இளையராஜா-கங்கை அமரன்: ஈகோ படுத்திய பாடு

ஒரு வித்தியாசத்திற்காக கூட்டணியில் இருந்து கொஞ்சம் விலகி வேறொரு நபருடன் பணியாற்றினால் விரிசல் விழுந்துவிடுகிறது.

இது எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்தில் இருந்தே நடந்துவருகிறது. அதிலும் இசைத்துறையில் கொஞ்சம் ஓவராகவே இருக்கு இந்த ஈகோ.

அந்த வகையில்தான் இயக்குநர் கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ், சரண் - பரத்வாஜ் என்று பலரும் பிரிந்தார்கள். இந்த ஈகோ சகோதரர்களையும் விட்டுவைக்கவில்லை.

இதைப்பற்றி இயக்குநர் பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.

''நான் முதன்முதலாக இயக்கிய `சுவரில்லா சித்திரங்கள்' படத்துக்கு இசையமைத்தவர், கங்கை அமரன். அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, `மவுனகீதங்கள்' படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா ஓடியது.

ஏவி.எம்.நிறுவனத்துக்காக, `முந்தானை முடிச்சு' படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் போடவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாவை போட வேண்டும் என்றார்கள். ஒரு கட்டத்தில், கங்கை அமரனே என்னிடம் வந்து, ``அண்ணனே இசையமைக்கட்டும். நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன்'' என்றார்.

நான், இளையராஜாவிடம் சென்றபோது, ``நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். அதனால் இசையமைக்க மாட்டேன்'' என்றார்.

``அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே'' என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டது''என்று தெரிவித்துள்ளார்.

அது சரி, அண்ணன் என்னடா..தம்பி என்னடா...அவசரமான உலகத்திலே.....!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.