மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இம்சையால் அலுத்துக் கொள்ளும் நமீதா!

எழுத்து பிழையை மன்னிச்சிடலாம். கருத்துப் பிழையை மன்னிக்கலாமோ? “அதனால ரொம்ப பிரச்சனைங்க” என்றார் நமீதா. என்னவாம்? மும்பையிலே பிளாட் வாங்கியிருக்கார் நமீதான்னு எழுதறதுக்கு பதிலா, பிளைட் வாங்கியிருக்காருன்னு எந்த பிரகஸ்பதியோ எழுதி தொலைக்க, அவ்வளவு வசதியாயிட்டீங்களான்னு போன் அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களாம் ரசிகர்கள். நான் பேசுற தமிழே தகராறு. இதில இவிய்ங்க வேறன்னு அலுத்துக் கொள்கிறார் நமீதா.

ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு நீக்கமற மனசில நிறைய மாதிரி ஒரு பதிலையும் சொன்னார். எல்லாரையும் மச்சான் மச்சான்னு கூப்பிடுறீங்களே, ஏன்?

அதுவா? சிவாஜி சார் தன்னோட ரசிகர்களை பிள்ளைகளேன்னு கூப்பிடுவாருன்னு கேள்விப்பட்டேன். ரஜினி சார் தன்னோட ரசிகர்களை கண்ணான்னு கூப்பிடுறாரு. விஜய் சார் தன்னோட ரசிகர்கள் ங்ணா...ன்னு கூப்பிடுறாரு. நான் மச்சான்னு கூப்பிடுறேன். நமக்குன்னு ஒரு அடையாளம் வேணாமா? மச்சான்னு கூப்பிடுறதிலே இருக்கிற அந்நியோன்யம் வேற வார்த்தையிலே இருக்கா? இருந்தா சொல்லுங்க. கூப்பிடுறேன் என்றார். (சொல்லி கொடுத்திருக்கலாமோ?)

இளைச்சிட்டேன்னு இவரு எத்தனை முறை சொன்னாலும் யாரும் நம்ம மறுப்பதால், இளைச்ச பிறகு ஒரு போட்டோ செஷன் பண்ணியிருக்கிறார். விரைவில் பத்திரிகைகளுக்கு கொடுக்கிறேன் பாருங்க. அசந்திருவீங்க என்றார். இப்ப மட்டும் என்னவாம்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.