Saturday, October 10, 2009

> ஆதவன் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு

ஆதவன் தீபாவளிக்கு வெளிவருகிறது. அதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூர்யா ஆகியோர் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தனர்.

அவங்களைப் பற்றி பத்தி‌ரிகைகள் எழுதிய செய்தியால் ரொம்ப அப்செட்டா இருக்காங்க. அதனாலதான் இங்க அவங்க வரலை என்றார் ரவிக்குமார். அவர் அவங்க என்று குறிப்பிட்டது, படத்தின் ஹீரோயின் நயன்தாராவை.

ஆதவனில் பத்து வயது சிறுவனாக சூர்யா நடித்திருக்கிறார். இருபது நிமிடங்கள் வரும் இந்த காட்சியில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

சூர்யாவின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று என்று ரவிக்குமாரும், இயக்குனரால்தான் இது சிறப்பாக நடந்தேறியது என்று சூர்யாவும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

நீங்களும் நடிக்கப் போறீங்களாமே என்று உதயநிதி ஸ்டாலினை கேட்டதற்கு, நல்ல கதையும், திறமையான இயக்குனரும் கிடைத்தால் நானும் தயார் என்றார் உற்சாகமாக.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.