மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆதவன் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு

ஆதவன் தீபாவளிக்கு வெளிவருகிறது. அதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சூர்யா ஆகியோர் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தனர்.

அவங்களைப் பற்றி பத்தி‌ரிகைகள் எழுதிய செய்தியால் ரொம்ப அப்செட்டா இருக்காங்க. அதனாலதான் இங்க அவங்க வரலை என்றார் ரவிக்குமார். அவர் அவங்க என்று குறிப்பிட்டது, படத்தின் ஹீரோயின் நயன்தாராவை.

ஆதவனில் பத்து வயது சிறுவனாக சூர்யா நடித்திருக்கிறார். இருபது நிமிடங்கள் வரும் இந்த காட்சியில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

சூர்யாவின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று என்று ரவிக்குமாரும், இயக்குனரால்தான் இது சிறப்பாக நடந்தேறியது என்று சூர்யாவும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

நீங்களும் நடிக்கப் போறீங்களாமே என்று உதயநிதி ஸ்டாலினை கேட்டதற்கு, நல்ல கதையும், திறமையான இயக்குனரும் கிடைத்தால் நானும் தயார் என்றார் உற்சாகமாக.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.