Saturday, October 10, 2009

> மாத்தியோசிக்காத தயா‌ரிப்பாளர்

முதல் படத்தில் 35 புதுமுகங்களை அறிமுகப்படுத்த எக்ஸ்ட்ரா தில் வேண்டும். அந்த தில் மாத்தியோசி தயா‌ரிப்பாளர் பி.எஸ்.சேகர் ரெட்டியிடம் நிறையவே இருக்கிறது.

இவரது மாத்தியோசி படத்தில் 35 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படத்தை இயக்குகிறவர் நந்தா பெ‌ரியசாமி.

ஒரு கல்லூ‌ரியின் கதை படத்துக்குப் பிறகு நந்தா பெ‌ரியசாமி இயக்கும் படம் இது. புதுமுகங்களை சர்க்கஸ் ட்‌ரில் மாஸ்டர் தோற்று‌ப் போகும் அளவுக்கு பெண்ட் நிமிர்த்தியிருக்கிறார்.

இவரது வேலைத் திறனைப் பார்த்த தயா‌ரிப்பாளர் சேகர் ரெட்டி எனது அடுத்தப் படத்துக்கும் நீங்கதான் இயக்குனர் என இப்போதே வாய்மொழி வாக்குறுதி அளித்திருக்கிறார்.

பொதுவாக படம் தொடங்கிய பிறகு இயக்குனரும், தயா‌ரிப்பாளரும் பட்ஜெட் விஷயத்தில் கட்டிப்புரள்வதுதான் தமிழ் சினிமா வாடிக்கை. அதற்கு மாறாக கட்டித் தழுவி பரஸ்பரம் பாராட்டுகிறார்கள் மாத்தியோசி இயக்குனரும், தயா‌ரிப்பாளரும். நல்ல மாற்றம்தான் இல்லையா?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.