Tuesday, October 27, 2009

> அடுத்த அயன் மேன்-கார்த்தி

கே.விஆனந்தின் அடுத்த அயன் மேன் யார் என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் தம்பி கார்த்தி.

அயன் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனந்தும் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அயன் மாதி‌ரியே ஒரு கமர்ஷியல் கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்.

ஆனால், ஹீரோ?

சூர்யா சிங்கம், ரக்த ச‌ரி‌த்ரா, முருகதாஸின் மூன்று மொழி படம் என பிஸியாக இருக்கிறார். விக்ரம் செல்வராகவன் படம், விக்ரம் கே.குமார் இயக்கும் படம் என ஏற்கனவே கால்ஷீட்களை பி‌ரித்து தந்து விட்டார்.

இவர்களுக்காக காத்திருக்க முடியாது என்பதால் கார்த்தியை டிக் செய்திருக்கிறார் ஆனந்த். பையா படத்தை முடித்துவிட்ட கார்த்தி, சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் தொடங்குகிறது. அண்ணனைப் போல சிக்ஸ்பேக்கிற்கு தயாராகிட்டீங்களா கார்த்தி?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.