மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 31 கோடியில் ஒரு படம்

ஆறு கோடி பட்ஜெட்டில் ஒரு படம் ஆரம்பிக்கிறீர்கள். ஒருவேளை பட்ஜெட் ஏழு கோடி ஆகலாம். அல்லது எட்டு, பத்து. ரொம்ப ரொம்ப மோசமாக திட்டமிட்டால் அதிகபட்சம் 12 கோடி வரை ஆகலாம். அதற்கு மேலும் பட்ஜெட் எகிறினால், பட்ஜெட் போட்டவரை என்னவென்று சொல்வது?

ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கும்போது செல்வராகவன் தயா‌ரிப்பாள‌ரிடம் சொன்ன பட்ஜெட் ஆறு கோடி. ஒவ்வொரு கட்டத்திலும் பட்ஜெட் மானாவ‌ரியாக எகிறி இறுதியில் 31 கோடியில் வந்து நிற்கிறது. படத்தை வெளியிட இன்னும் சில கோடிகள் தேவைப்படுமாம்.

ஒரு படம் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தியை வைத்து இந்த மெகா பட்ஜெட்டை திருப்பி எடுக்க முடியுமா என்பது தயா‌ரிப்பாள‌ரின் ஸ்பெஷல் கவலை. அதற்காக கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட முடியாதில்லையா? தில்லாக படத்தை புரமோட் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

நிகழ்காலத்தில் தொடங்கி பின்னோக்கி 12ஆ‌ம் நூற்றாண்டுக்கு பயணிக்கிற கதை. அதனால் இந்த பட்ஜெட் கண்டிப்பாக தேவைதான் என்று தனக்குத்தானே தேறுதல் சொல்வதுபோல் பத்தி‌ரிகைகளிடம் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிற படம் என்பதால் உலகம் முழுக்க படத்தை வெளியிடப் போறேன் என்று சில வாயில் நுழையாத நாடுகளின் பெயர்களை பட்டியலிடுகிறார்.

இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நீதி என்னவென்றால், ஆறு கோடி பட்ஜெட்டை 31 கோடியாக்கும் இயக்குனர்கள் இருந்தால் அப்பாவி தயா‌ரிப்பாளர் அண்டார்டிகாவில் கூட படத்தை வெளியிடும் நிலை வரும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.