Tuesday, December 29, 2009

> தடுமாறும் கோவா

பொங்கலுக்கு படா படா படங்களெல்லாம் வெளியாவதாக கூறினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வெள்ளித்திரையை காண இருப்பது ஒருசில படங்கள்தானாம்.

பொங்கலுக்கு அசல் வெளியாகவில்லை என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளையும், வெங்கட்பிரபுவின் கோவாவும் இழுபறியில் உள்ளது.

கோவா ஆடியோ வெளியீட்டு விழாவே வரும் 4ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பேமெண்ட் விஷயத்தில் கறாராக இருந்ததால்தான் இந்த தாமதம் என்கிறார்கள்.

இப்படி கோவா தடுமாறுவது போலவே தீராத விளையாட்டு பிள்ளை தயா‌ரிப்பாளருக்கும் இரு வேறு எண்ணங்கள். ஆயிரத்தில் ஒருவன், குட்டி என போட்டி பலமாக இருக்கும் போது நமது படத்தை வெளியிட்டு ‌ரிஸ்க் எடுப்பானேன் என்று யோசிக்கிறாராம். பொங்கல் ‌ரிசல்டைப் பார்த்து படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

போகி வரை பொங்கல் படங்களின் லிஸ்ட் மர்மமாகதான் இருக்கும் போல.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.