
சுந்தர் சி. வடிவேலு முட்டிக் கொண்ட பிறகு சுந்தர் சி. யின் படங்களில் ஜட்டி, பிரா காமெடியன் விவேக்குக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் இவரது ஸ்டீரியோ டைப் மிமிக்கிரி மற்றும் கெட்டப் காமெடி சலித்துப் போனதால் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பில்லை.
இந்நிலையில் குரு சிஷ்யன் படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்தார் வடிவேலு. அந்த இடத்தில் தன்னைதான் போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ஜட்டி பிரா.
அவரை ஒப்பந்தம் செய்வதும் காமெடியன் இல்லாமல் படம் எடுப்பதும் ஒன்று என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சந்தானத்தை ஒப்பந்தம் செய்து விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகிறார். கண்டேன் காதலைக்குப் பிறகு சந்தானத்தின் மவுசு கண்டபடி எகிறியிருப்பதால் மானாவாரியாக அவருக்கு காட்சிகள் வைத்திருக்கிறார்களாம்.
வடிவேலு இல்லையென்ற குறை தெரியக் கூடாது என்ற ஒரே காரணத்தை வைத்து காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். யாரை நம்பி நாம் பொறந்தோம்... ஜமாய்ங்கப்பு ஜமாய்ங்க.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.