Friday, January 1, 2010

> விநியோகஸ்தர் சசிகுமார்

தொட்டதெல்லாம் பொன் என்பார்களே... சசிகுமாருக்கு அப்படிதான் நடக்கிறது. இயக்குனராக, நடிகராக, தயா‌ரிப்பாளராக, விநியோகஸ்தராக எந்தத் துறையில் கால் பதித்தாலும் வெற்றி இவரது காலடியில்.

புதிய படத்தை இயக்குவதில் பிஸியாக இருப்பவர் 'கதை' படத்தின் மதுரை விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கிறார். இதனால் கதைக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

எழுத்தாளன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் 'கதை' படத்தின் கதை. ஷான்குமார் என்ற அமெரிக்க ‌ரிட்டர்ன் படத்தின் ஹீரோ. மோகமுள் படத்தில் நடித்த அபிஷேக் படத்தை இயக்கியிருக்கிறார். நந்தா, மௌனம் பேசியதே படங்களை தயா‌ரித்த ராஜன் ராதாகிருஷ்ணன் தயா‌ரிப்பு.

முக்கியத்துவம் இல்லாமல் இருந்த இந்தப் படத்தின் விற்பனை சசிகுமார் மதுரை ஏ‌ரியாவை வாங்கிய பிறகு சூடு பிடித்திருக்கிறது. சசிகுமா‌ரின் அதிர்ஷ்டம் தங்களையும் அடிக்காதா என்ற ஆசைதான் காரணம். எப்படியோ... கதை தயா‌ரிப்பாளரின் கல்லா நிரம்பத் தொடங்கியிருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.