Sunday, March 21, 2010

> சிங்கம் மீண்டும் பதுங்கும் ?

சிம்புதேவனின் மிகவும் எதிர்பார்ப்புக்கு‌ரிய படமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மீண்டும் தள்ளிப் போகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாற்றம் என்கிறார் சிம்புதேவன்.

28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகியிருக்கும் கௌபாய் படம் என்ற அறிமுகத்துடன் அட்டகாசமாக பொங்கல் ரேசுக்கு தயாரானது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.

ஆனால் பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை. சில பிரச்சனைகளால் படத்தின் ‌ரிலீஸை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மார்ச் 26 படம் திரைக்கு வருவதாக விளம்பரங்கள் செய்த நிலையில் மீண்டும் ‌ரிலீஸ் தேதியில் மாற்றம்.

ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என தற்போது அறிவித்துள்ளார் சிம்புதேவன். இந்த மாதம் அதிக படங்கள் திரைக்கு வருவதால்தான் இந்த மாற்றம் எனவும் கூறப்படுகிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.