
தனுஷ், செல்வராகவன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் இது மாலை நேரத்து மயக்கம் குறித்து கேள்விகள் கேட்கப்படும். விரைவில் தொடங்கப்படும், கதையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் இதுவரை பதில் வந்திருக்கிறது.
சமீபத்தில்கூட, படத்தின் கதையை மாற்றியிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றார் தனுஷ். ஆனால் தம்பியின் பேச்சை அண்ணன் மறுத்திருக்கிறார்.
இது மாலை நேரத்து மயக்கம் படம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார் செல்வராகவன். யுவன்தான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. இது குறித்து கேட்டதற்கு யுவனுடன் இனி சேர்ந்து பணிபுரியப் போவதில்லை என்றார் செல்வராகவன்.
விக்ரமை வைத்து செல்வராகவன் இயக்கிவரும் க்ரைம் த்ரில்லருக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.